“மக்களே பொறுப்பாளர்கள்” என்ற பசிலின் வாதம் சரியானதே!

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, அதனை அறிவிப்பதற்காக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியவற்றில், ஒரு கருத்தைத் தவிர ஏனைய அத்தனையும் அர்த்தமற்றவை என்றே கூற வேண்டும்.

நெருக்கடியான நேரத்தில் பின்னடிக்கும் சீனா

இலங்கையின் பொருளாதாரத்தை ஆடங்காணச் செய்ததில், சீனாவின் வகிபாகத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு கடனுக்கு மேல் ​கடனைக்கொடுத்து, கடனை செலுத்துவதற்கு அதிக வட்டியுடன் கடனைக் கொடுத்து உபதிரவம் செய்துவிட்டது.

நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது.

தியாகிகள் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

சேய் குவேராவை பொலிவியாவில் வைத்து கொலை செய்து அவரின் போராட்ட வாழ்வை முடிவிற்கு கொண்டவராவிட்டால் இன்னும் பல நாடுகள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை பெற்றிருக்கும். அதற்கான முன்னெழுச்சிகளை அவர் தனது விடுதலைப் பயணம் மூலம் ஏற்படுத்தியிருப்பார்.

நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும்.

மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்?

(என்.கே. அஷோக்பரன்)

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்‌ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது.

காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது.

மண்டைதீவு படுகொலைகளின் 36ஆவது நினைவு தினம் இன்று.

மண்டைதீவு படுகொலைகளின் நீங்கா நினைவலைகள்.

1986ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி. காரிருள் அகலாத அதிகாலைப்பொழுது அது. முழு மண்டைதீவு கிராமமுமே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தது.

பிரதமரின் ‘பாகற்காய் உரை’

தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். இறுதியில் முடியாமலே போய்விடும்.

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.