ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு

(என்.கே. அஷோக்பரன்)

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்ளது.

பிரச்சினைகளால் பற்றி எரியும் நாடு: தமிழ் மக்களின் நிலைப்பாடு

(லக்ஸ்மன்)

நாடு பற்றி எரியும் வேளையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக, தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தற்போதைய நெருக்கடிச் சூழலைக் கையாளுதலை அல்லது கணக்கற்று இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்….” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர்.

‘கோட்டா வெளியேறு’: போராட்டத்தின் முடிவு என்ன?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த மார்ச் 31ஆம் திகதி, மிரிஹானையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சொந்த இல்லத்துக்கு முன்னால் ஆரம்பித்த பொதுமக்களின் போராட்டம், இன்னமும் தொடர்கிறது.

காலி முகத்திடல் முற்றுகை: செவிசாய்க்காத அரசாங்கம்

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதார பின்னடைவுகள், அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. அரசியலை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஒன்றின் ஊடாகவே, பொருளாதார நெருக்கடிகளையும் தீர்த்தாக வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

(என்.கே. அஷோக்பரன)

வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்‌ஷ கோ ஹோம்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள்.

சுறுக்கர் என்ற நடு நிலையாளர்

(சாகரன்)

எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த தியாகராஜா இராஜராஜனின் மரணம் எதிர்பாராத பேரதிர்ச்சி. கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற பாரம்பரியம் மிக்க ஊரை வாழ்விடமாகவும் கொண்டவர்.

முகநூலில் எனது பதிவு……

(முகநூலில் வந்த பதிவொன்றின் தமிழ் ஆக்கம்)

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் என்னிடம் “இந்தப் போராட்டம் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எதுவும் மாறாது” .

அவர்களுக்கு, நான் சொல்ல விரும்புவது இதுதான்:

நிபுணர்களும் தடுமாறும் நிலை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

சிலவேளைகளில் வரலாறு விசித்திரமானது; சிலவேளைகளில் விந்தையானது. 2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி பதவிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் அவரது அரசாங்கமும், இன்று அதே தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை விந்தையானது.

தம்பியை உரையில் காப்பாற்றும் தமையனின் இறுதி முயற்சி

நெருக்கடியான நிலைமையில், அரச தலைவரொருவர், நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, ஒவ்வொருவரும் காதுகொடுப்பர். உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசமும் கூர்ந்து அவதானிக்கும். நெருக்கடி, யதார்த்தம், மீண்டெழுதல், தூரநோக்கு, உதவிக்கரம் உள்ளிட்டவை பொதுவான சாராம்சமாக இருக்கும்.