நிதானம் இழக்கும் அரசியல்

(லக்ஸ்மன்)

மக்கள் கிளர்ச்சி ஒன்றே  தீர்வுக்கான வழி  என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். 

தரப்படுத்தல்: பார்க்கத் தவறிய பக்கங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 13

தமிழர்கள் மத்தியில், தரப்படுத்தல் ஓர் எதிர்வினையை உருவாக்கியதன் பின்னால், வலுவான காரணங்கள் இருந்தன. தரப்படுத்தல் வெறுமனே, 1970ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் விளைவு மட்டுமல்ல! இதற்கான, நீண்டகால சமூகக் காரணிகள் பலவுண்டு.

அன்று சீனா… இன்று இந்தியா… – இலங்கை நெருக்கடியும் ‘அரிசி’ அரசியலும்!

இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது.

ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா

நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார​ நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்த வேண்டும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது.

மாண்டவர்கள் நாங்கள் பேசுகிறோம்….

(தோழர்கள்)

கந்தன் கருணையில்

கருணையற்றுப் பாசிசப்புலியின்

துவக்குச் சூட்டால்

துடிக்கப் பதைக்க

மாண்டவர்கள் நாங்கள்

பேசுகிறோம்…

ஏனென்று கேட்காமல்

எதுக்கென்றும் கூறாமல்

எங்களைக் கைதுசெய்தீர்களே

எங்கேயிப்போது நீங்கள் ?

எங்களை நிராயுதபாணியாக்கி

சித்திரவதைப் பண்ணி

கொன்றுதான் போனீர்களே

எங்கே நீங்கள் ?

எங்கள் மூச்சுக்கள்

காற்றில் கலக்கும்போது

நாங்கள் விட்ட

சாபப் பெருமூச்சு

ஒருநாள் நீதிகேட்கும்…

துவக்கோடும் பீரங்கியோடும்

நவீன ஆயுதத்தோடும்

கொலைவெறித் தாண்டவமாடிய

உங்களின் நிலை

இன்று என்னாச்சு?

எங்களைத் தொலைத்த

நேசிப்புக்கு உரியவர்கள்

இன்றும் எங்களைத்

தேடிக் கொண்டிருக்கிறார்கள்

பாசிசம் முதலில்

முற்போக்காளர்களை அழிக்கும்

கடைசியில் தன்னைத்தானே

அது அழித்துவிடும்…

எவ்வளவோ உதாரணங்கள்

இருந்தும் ஏற்கமறுத்தீரே

மற்றவர் கருத்துக்கு

தலையசைக்க மறந்தீரே

உயர்த்தித் தூக்கிப்பிடித்த

உங்கள் தலைவன் மரணத்ததையே

வெளியில் சொல்லமுடியாத

நீங்களெல்லாம் போராளிகளா ?

ஈழத்தாயின் மடியில்

நித்திரை கொள்ளும்

மாண்டுபோன நாங்கள்

மீண்டும் வருவோம்

பாசிசத்தின் வேர்கள்

அனைத்தும் அறுபடும்வரை

எங்களை நினைவேந்துவோர்

இருக்கும் வரை

கந்தன் கருணையில்

மாண்டுபோன நாங்கள்

மீண்டும் வருவோம்

‘பெரியண்ணா’வின் பெரியமனம்

மனம் கலங்கி உதவிக்கரம் நீட்டும் ‘பெரியண்ணா’வின் பெரியமனம்

எதற்கும் தட்டுப்பாடு என்றொரு நிலைமை​யே, நாட்டில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் விலையேற்றம்; மறுபுறத்தில் தட்டுப்பாடு. இடையில் சிக்குண்டிருக்கும் மக்கள், விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்தளவுக்கு ‘பஞ்சம்’ ஒவ்வொருவரது கழுத்தையும் நெருக்கிக்கொண்டிருக்கின்றது.

தினக்குரல் லெவ்ரின்ராஜ் அவர்களின் கேள்விகளுக்கு அ. வரதராஜப்பெருமாளின் பதில்கள்

  1. கேள்வி:-
    இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இது தொடர்பில் உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

டிராகன் பிடியில் இலங்கை?

இலங்கையிலிருந்து வெளிவரும் காட்சிகள் போர் காலச் சூழலை நினைவூட்டுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அலைமோதுகின்றனர்; கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. சென்ற வாரம், பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்பதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்ததில் 3 முதியவர்கள் உயிரிழந்தனர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தை சமாளிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.