மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும்.
தமிழர்கள் மத்தியில், தரப்படுத்தல் ஓர் எதிர்வினையை உருவாக்கியதன் பின்னால், வலுவான காரணங்கள் இருந்தன. தரப்படுத்தல் வெறுமனே, 1970ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் விளைவு மட்டுமல்ல! இதற்கான, நீண்டகால சமூகக் காரணிகள் பலவுண்டு.
இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது.
நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது.
மனம் கலங்கி உதவிக்கரம் நீட்டும் ‘பெரியண்ணா’வின் பெரியமனம்
எதற்கும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே, நாட்டில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் விலையேற்றம்; மறுபுறத்தில் தட்டுப்பாடு. இடையில் சிக்குண்டிருக்கும் மக்கள், விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்தளவுக்கு ‘பஞ்சம்’ ஒவ்வொருவரது கழுத்தையும் நெருக்கிக்கொண்டிருக்கின்றது.
இலங்கையிலிருந்து வெளிவரும் காட்சிகள் போர் காலச் சூழலை நினைவூட்டுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அலைமோதுகின்றனர்; கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. சென்ற வாரம், பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்பதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்ததில் 3 முதியவர்கள் உயிரிழந்தனர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தை சமாளிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.