Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
சிரிய அகதிகளை உள்வாங்குதல்……
(சாகரன்)
சிரிய அகதிகளை உள்வாங்குதல் என்பதில் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும், அமெரிக்க முதலாளித்துவ நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதுபோல் தோன்றுகின்றது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் உதவுவது போல் தோன்றினாலும் விமான நிலையங்களில் வந்திறங்கும் சிரிய மக்களையும் அவர்கள் கொண்டு வரும் பொதிகளையும் பார்க்கும் போது இவர்கள்; சிரியாவை விட்டு இடம்பெயர்ந்து இன்னும் ஒரு நாட்டில் வசதியாக வாழ்ந்து விட்டு இன்னும் ஒரு வசதியான நாட்டிற்கு….. அது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயருவது போல் தோற்றம் அளிக்கின்றது. உண்மையான யுத்தத்தினால்; பாதிப்பிற்குள்ளான அகதிகள் ஆண்டாண்டு காலமாக அகதி முகாம்களில் ‘வாட’ மேற்கூறியவர்களை பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு வகை ‘தத்தெடுத்தல்’ விளையாட்டில் இந்த நாடுகளுக்கு விமானங்களில் கொண்டுவந்து இறக்கி தமது மனிதாபிமானங்களை? நிரூபிக்க முயலுவது தெரிகின்றது. இதற்கான பிரச்சார முன்னெடுப்புக்களை இவ் அகதிகள் இந்த நாடுகளுக்கு வந்திறங்க முன்பும், பின்பும் செய்துவரும் வேடிக்கைகள் எம்மால் ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இதில் இன்னொருவிடயமும் அறிய முடிகின்றது, அது இவ் வகையாக பொறுப்பெடுக்கப்படும் அகதிகளும் ஒருவகையில் வடிகட்டப்பட்ட பின்பே தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த வடிகட்டலில் குலமும், மதமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. யுத்ததில் பாதிக்கப்பட்ட யாவரும் அகதிகள் என்றாலும் யாரை முதன்மைப்படுத்தல் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அகதிகளை உருவாக்கும் யுத்தத்தை நிறுத்துவதே இதற்கான சரியான நிரந்தரத் தீர்வும் ஆகும். அகதிகளை ஏற்பவர்களே யுத்தத்தையும் நடாத்துகின்றனர் என்பது இவர்களின் போலியான மனிதாபிமான முகமூடியை கிளித்தெறியப் போதுமானதாகும்.
‘திரு சிம்பு அவர்களே… இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’
தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே…திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. (“‘திரு சிம்பு அவர்களே… இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’” தொடர்ந்து வாசிக்க…)
ஆயுதம் வாங்க எவ்வாறு பணம் தேடுகிறது ஐ.எஸ்?
பாரிஸ் படுகொலைகளுக்குப் பின்னர் ஐ. எஸ். பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதை எப்படி இயங்காமல் செய்யலாம் என்பதைவிட அது எப்படித் தோன்றியது என்பதைப் பற்றிய விவாதங்களே ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என்பதில் சந்தேகம் இல்லை. ஐ. எஸ். தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, ஈராக்கில் இருந்த புக்கா சிறையில் பல ஆண்டுகள் கைதியாக இருந்தவர். அவரை விடுவித்திருக்காவிட்டால் இந்த இயக்கம் தோன்றியே இருக்காது என்று சொல்பவர்களும் உள்ளனர்.
(“ஆயுதம் வாங்க எவ்வாறு பணம் தேடுகிறது ஐ.எஸ்?” தொடர்ந்து வாசிக்க…)
மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!
(சாகரன்)
மழை நின்றாகிவிடது. வெள்ளமும் வடிய ஆரம்பித்துவிட்டது, அங்காங்கே கும்பை கூழம் சேறு சகதிகளே மிஞ்சிக்கிடக்கின்றது. தன்னார்வு நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக சேகரித்து வைக்க ‘உதவி’ சிலர் இனிமேல் நீங்கள் இங்கிருந்து எந்த பொருளையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்ற மிரடடல்;களும் ஆரம்பமாகிவிட்டன. நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்யும் கும்பல்களும் தங்கள் பேட்டைகளில் சண்டித்தனம் செய்து பொருட்களை பறித்தல் என்பதுவும் ஆரம்பமாகிவிட்டது. யாரோ தன்னார்வத்துடன் சேர்த்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் போது தமது கொடியினை அதில் திணிக்கும் பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் தலைவர்களைக் கொண்ட சென்னையில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும். பிழையான வழியில் பணம் சேர்காதவனை ‘பிழைக்கத் தெரியாத ஆள்’ என்று தூற்றுவதும,; லஞ்சம் வாங்கும் பிள்ளையை சோறு போடமாட்டேன் என்று விரட்டாத தாயும், சின்னவீடு வைத்திருத்தல் அவர் தகுதிக்கு பொருத்தனமானது என்று பெருமைப்படும் அரசியல் தொண்டர்களும், இதனைக் கண்டும் கணாமலும் இருக்கு வீட்டம்மாவும் இருக்கும் நகரத்தில் வெள்ள நிவாரணத்தில் நடக்கும் கொள்ளைகளை எதிர்பார்காமல் இருக்க முடியாதுதானே….?
(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)
விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்
பிரேமதாசா பல கொலைகளுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப் பட்டவர். அவர் விதைத்ததைத்தானே அவரால் அறுத்திருக்க முடியும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம் , அப்படியே ராஜீவும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தமிழரைக் கொன்றவர் , எனவே அவரின் கொலையையும் (சாவையும்) , அவர் விதைத்த வினையையே அவரும் அறுவடை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த இருவர் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை , அரசியல் தலைவர்களை அழித்த பிரபாகரன் கூட தான் விதைத்ததைதான் அறுவடை செய்துள்ளார் என்பதை எழுத தமிழ் பேராசிரியர்களைக் காணவில்லை!
(“விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்” தொடர்ந்து வாசிக்க…)
வெள்ளத்தில் தத்தளித்த மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடிய பிரமுகர்கள்
நாட்களே பெய்த பெரு மழையால் சிதைந்து கிடக்கிறது சிங்காரச் செ சில ன்னை. தமிழகத்தின் தலைநகர் என்று மார்தட்டிக் கொண்ட சென்னை இன்று ஏனைய மாவட்டங்களிடம் மடிப்பிச்சை கேட்டு நிற்கிறது. வருடந்தோறும் பெய்யும் பருவமழையால் புயல் கடக்கும் பூமியாக கடலூர் மட்டுமே மாட்டிக்கொள்ள, இம்முறை தலைநகரிலும் மழை பெய்ததால் உலகப் புகழ்பெற்றிருக்கிறது சென்னை. சுனாமி எனும் ஆழிக் கூத்தைத் தோற்கடித்த இந்த மழை சென்னையில் ஆடியிருப்பதோ அகோரத் தாண்டவம்.
(“வெள்ளத்தில் தத்தளித்த மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடிய பிரமுகர்கள்” தொடர்ந்து வாசிக்க…)
வல்லாதிக்க நாடுகளின் கைக்கருவிகளாக செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்
ரிஸ் உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம், வரலாற்றின் முதல் ஜனநாயகப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, 1789 பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான். உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கொம்யூன் 1881 வசந்தத்தின் முடி முழக்கமாய் எழுந்ததும் இங்கேதான். உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்குபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உலகம் அச்சத்தின் விழிகளினூடே பாரிஸைப் பார்க்கிறது. ஐ.எஸ். அமைப்பு நடத்திய தாக்குதலில் அரசுக் கணக்கின்படி 129 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
(“வல்லாதிக்க நாடுகளின் கைக்கருவிகளாக செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்” தொடர்ந்து வாசிக்க…)
இனவாதத்துக்கு உடனடியாக விலங்கிடப்பட வேண்டும்
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் 30 வருடங்களாக போரினால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட மக்களால் இன்னமும் முழு அளவில் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். இவர்கள் எப்போது தமது சொந்த வாழ்விடங்களுக்குப் போக முடியுமோ என்ற ஏக்கப் பெருமூச்சுவிட்ட வண்ணமே இருந்தனர், இன்றும் இருக்கின்றனர்.
(“இனவாதத்துக்கு உடனடியாக விலங்கிடப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லிம்கள் பற்றிய அமெரிக்காவின் இரு முகங்கள்
முஸ்லிம்கள் பற்றி அமெரிக்காவின் இரு முக்கிய புள்ளிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களிடையே மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உலக பொலிஸ்காரன் என்ற கற்பனைப் பதவியில் இருத்தப்படிருக்கும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின், ஒன்றுக்கொன்று முரணான இரு வௌ;வேறு முகங்களை இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதில் ஒன்று- அழகான, அரவணைக்கும், இராஜதந்திர முகம். மற்றையது- விகாரமான, வெறுத்தொதுக்கும், மேற்குலக முகம்.
(“முஸ்லிம்கள் பற்றிய அமெரிக்காவின் இரு முகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)