கல்வித் தகைமையும் அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது. ‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 9)

(சிவராசா கருணாகரன்)

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர். 

அரவிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்

(மாசி 2022ல் எதிரொலி எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது)

1. கேள்வி:- தமிழரின் அரசியலில் 13 பற்றிய பேச்சுக்கள் இப்போது தீவிரமாகியுள்ளன. இதனுடைய இன்றைய நிலை மற்றும் எதிர்காலச் சாத்தியங்கள் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை

(கருணாகரன்)

1.

30 ஆண்டுகளுக்குள் இலங்கையில் மகிழ்ச்சிக்குரிய எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் அரசியலில் 40 ஆண்டுகளுக்குள் எந்த நம்பிக்கையளிக்கக் கூடிய முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. 

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 8)

(சிவராசா கருணாகரன்) 

புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள – அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் – ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது.

கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது.

எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி

(லக்ஸ்மன்)

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.  எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 7)

(சிவராசா கருணாகரன்)

ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது.

பிரதமர் உருத்திரகுமாரனின் கனவுகளுக்குள் யதார்த்தத்தைத்தேடி….!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)…..! 

இது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 115  உறுப்பினர்களும், 20 நியமன உறுப்பினர்களுமாக, மொத்தம்  135 உறுப்பினர்களைக் கொண்டது. அமெரிக்க நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் யாழ்.மேயர் இராசா விஸ்வநாதனின் புதல்வர்.   விடுதலைப்புலிகளின் சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர். 2010 மே மாதம்17 ம் திகதிதியில் இருந்து உருத்திரகுமாரனின் அரசாங்கம் தமிழீழத்தில் “எக்ஸ்ஸில்ஆட்சி” நடாத்துகிறது. 

அநுராதபுரக் கூட்டமும் பொதுவேட்பாளருக்கான போட்டியும்

(என்.கே.அஷோக்பரன்)

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் அப்படி ஆர்ப்பாட்டம் நடத்தியது நோய்ப்பரவலை அதிகரிக்கும் என்று விமர்ச்சித்துக்கொண்டிருந்த அரசாங்கம், அண்மையில் தானும் ஒரு பெரும் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியிருந்தது.