(தோழர் ஜேம்ஸ்)

கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விடயம், கனேடிய அரசியல்வாதிகளை விட கனேடிய மக்களை அதிகம் கொந்தளிக்கச் செய்துள்ளது.
The Formula
International Politics
(தோழர் ஜேம்ஸ்)
ரஷ்யா, உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த நாட்களின் தொடராக அந்த யுத்த்தின் பின்புலம் பற்றி விரிவாக எழுதி இருந்தேன்.
தற்போது ட்றம் ஆட்சியிற்கு வந்த பின்பு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ‘வியாபாரத்தில்’ அவர் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த வளங்களும் ஒரு காலத்து சோவியத் குடியரசின்(USSR) வளங்கள்தான் என்பதையும் இங்கு கவனத்தில் எடுக்கவும்.
யுத்தம் அற்ற வியாபாரத்தை அவர் சில இடங்களில் செயற்படுத்த விரும்புவார். அதில் அதிக வருவாய் வரும் என்பதாக.
அதில் ஒன்றுதான் அவரது முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் விலக்கி தலிபான்களிடம் ஆட்சியை கைவிட்டு வந்தது
இதற்கு முன்பு இருந்த ஜோ பைடன் அமெரிக்க நிர்வாகம் யுத்தத்தை தொடரும் ஆயுத விற்பனை என்ற வியாபாரத்தை நடாத்தி வந்தது
போர் நிறுத்தம்….
ஏலவே அமெரிக்கா யுத்தத்திற்கான வழங்கிய பணத்தை உக்ரேன் மீள் அளிக்க வேண்டும்.
அல்லது
உக்ரேனின் வளங்களில் சிலவற்றை 500 மில்லியன் அளவிற்கு எழுதித் தரவேண்டும் என்றான முன் மொழிவை ட்றம் நிர்வாகம் முன்வைத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை கைசாத்திட வெள்ளை மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார் ஜெலன்ஸ்கி
இதன் உச்சமாக இன்று அமெரிக்காவின் ஓவல் கட்டடத்தில் ட்றம், ஜெலன்ஸ்கி இடையிலான வார்த்தைப் போர் ஏனைய நிர்வாகிகள், பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்துள்ளது.
பொதுவாக இம்மாதிரியான சந்திப்புகளின் பின்பு நடைபெறும் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு உணவருந்தல் என்பன இடை நிறுத்தப்பட்டு ஜெலன்ஸ்கி வெளியேறுவிட்டார்.
உலகம் முழுவதும் ஊடகங்களில் இது சார்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொணடிருக்கையில்
Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. இக் கட்டுரையை இங்கு இணைக்கின்றேன் இது பல உண்மைகளை தெளிவுபடுத்தும் என்பதற்காக…..
“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”
என்ற தலைப்பில் 27.9.2018 Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை.
பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர்.
ரஷ்யா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.
1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன.
கோர்பச்சேவ் (1985-1991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Belavezha என்ற இடத்தில் ஒன்றுகூடி சோவியத் இனை இல்லாமலாக்க கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.
சோவியத் இன்மையின் பின், அந்த கட்டமைப்பின் மையமாக செயற்பட்ட ரஷ்யக் குடியரசு பலம்பொருந்திய நாடாக உருவாகியது.
பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து அமெரிக்காவுடனான அதன் உறவை பேண விரும்பியது.
1992 இல் ஜெல்சின்(அப்போதைய ரஷ்யா அதிபர்) அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.
“நாம் இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்” என காங்கிரசில் உரையாற்றினார்.
ஆனால் அமெரிக்கா ரஷ்யாவை தனது எதிரி நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவில்லை.
கம்யூனிச கட்சிகள் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியிலும் பிரான்சிலும் பலம்பொருந்தியதாக இருந்தன அன்று.
கம்யூனிச அச்சம்; அமெரிக்காவுக்கு நீங்கியபாடில்லை.
ரஷ்யாவிலும்கூட அது மீண்டும் எழலாம் என்ற அச்சமும் இருந்தது.
இந் நிலையில் 1992 இல் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கையின் பொறுப்பாளர் Paul Wolfowitz இன் இரகசிய அறிக்கை கசிந்து நியூயோர்க் ரைம்ஸ் இல் வெளியாகி பரபரப்பாகியது.
அது….
இதற்குள் இருக்கும் நீண்ட காலமாக செயற்பாட்டில் இருக்கும் தற்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரியி நெத்தனயாகோவின் நீண்ட கால செயற்பாடுகளும் அடங்கும். அது முன்னால் சோவியத் நட்பு நாடுகளை துவசம் செய்வது என்பதாகவும் அதன் உடன் கூடி ஏனைய சோவியத் ஆதரவு திவுpரவாத அமைப்புகளை இல்லாது செய்தலும் அடங்கும்.
இந்த புறக்கணிப்பு எல்லாம் ரஷ்ய மக்களுக்கு கோர்பச்சேவ் மற்றம் ஜெல்சின் மீதான கோபத்தை விளைவித்தது.
“நீங்கள் இருவரும் எமது நாட்டை விற்றுவிட்டீர்கள்” என அவர்கள் கடுமையாக சாடினார்கள்.
இன்று இந்த இருவருக்குமான செல்வாக்கு ரசியாவில் 5 வீதத்துக்கும் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.(இந்த இருவரும் தற்போது மரணமடைந்தும் விட்டனர்)
இந்த கோப உணர்ச்சி ரஷ்ய மக்களை அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு மேலும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
ஆனாலும் நியுயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது தொலைபேசியில் புட்டின், அமெரிக்க அதிபர் புஷ் உடன் தொடர்புகொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்பட தனது உதவியை நல்குவதாக தெரிவித்தார்.
அதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு மத்திய ஆசியப் பகுதியை உபயோகிக்க வசதிசெய்து தருவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சேர்ந்து செயற்படுவோம் எனவும் சொன்னார்.
ஆனால் புஷ் அதை புறந்தள்ளினார்.
இவ்வாறாக ரஷ்யா தனது தரப்பில் எடுத்த இராசதந்திர முயற்சிகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன.
2007 இல் G20 மாநாட்டில் புட்டின் உரையாற்றியபோது, நேற்றோவின் விரிவாக்கம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.
“நேற்றோ ஐரோப்பிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை கேட்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கு எதிராக ஏன் இந்த விரிவாக்கம்?” என நேரடியாகவே கேட்டார்.
“1990 மே17 அன்று புரூசலில் என்ன சொல்லப்பட்டது. நேற்றோ இராணுவத்தை ஜேர்மனிக்கு வெளியில் தரித்துவைக்க மாட்டோம். சோவியத் யூனியனுக்கு ஒரு ஸ்திரமான பாதுகாப்பு உறுதிப்பாட்டை நாம் வழங்குவோம் என்றீர்கள். எங்கே அந்த உறுதிப்பாடு?” என்று கேட்டார் புட்டின்.
அதற்கான பதில் இவ்வாறாக இருந்தது. “ஆம் கொடுத்தோம்தான். அது சோவியத்துக்குத்தான், ரஷ்யாவுக்கு அல்ல. நீங்கள் ரஷ்யர்கள்”. என பதில் கிடைத்தது.
ரஷ்யாவை அவமானப்படுத்துகிற இன்னொரு நையாண்டிப் பதிலாக இது இருந்தது.
2017 இல் புட்டின் அமெரிக்காவையும் மேற்குலகையும் பார்த்து இவ்வாறு கூறினார். “எங்களுடைய தவறு உங்களை நம்பியது. உங்களது தவறு அதை உங்களுக்கு சாதகமாக எடுத்தது” என்றார்.
மேற்குலகினதும் அமெரிக்காவினதும் இந்த அரசியல் சித்துவிளையாட்டு புட்டினின் அணுகுமுறைகளை மாற்றியமைத்தது.
அதாவது புட்டின் இன்று இவர்களை எந்தவிதத்திலும் நம்பவில்லை.
இன்னும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டிருக்கிறது.
இராஜதந்திர முயற்சிகளை இல்லாமலாக்கியிருக்கிறது.
(தோழர் ஜேம்ஸ்)
இந்திய தேசத்தின் ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட் களின் பங்கு மகத்தானது.
அது இன்று வரை தொடர்கின்றது.
தேர்தல் அசியலில் பாராளுமன்றதில் மாநிலங்கள் அவை என்றாக பிரதிநிதித்துவங்கள் அதிகம் அவர்கள் தற்போதைய காலத்தில் அதிகம் பெறாவிட்டாலும் அவர்களின் பலம் இன்னும் இந்த ஜனநாயகத்தில் அரசியலில் அதிகம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
(ச.சேகர்)
மேலே உள்ள தலைப்பு, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரும், புத்தாக்கவியலாளருமான எலொன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவாகும். ஐக்கிய இராஜ்ஜியத்தில் கடந்த வாரமாக பதிவாகி வரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் இந்த பதிவை அவர் இட்டுள்ளார். சரி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்,
(தோழர் ஜேம்ஸ்)
பல தேசிய இனங்கள் மதங்கள் மாநிலங்கள் என்றாக உலகின் அதிக சனத் தொகை உள்ள நாட்டின் தேர்தலை உலகம் உற்று நோக்கியிருந்தது.
ஆளும் பாஜக கட்சியின் எதேச்சேகார இந்துவத்துவா கோட்பாடும் ஒரே தேசம் ஒரே மதம் ஒரே தேர்தல் ஒரு கட்சி என்றாக பல தேசிய இனங்களின் அபிலாசைகளை மறுதலிக்கும் மாநிலங்களின் சுயாட்சியை உரிமைகளை பறிக்கும் செயற்பாடாக பயணித்த 10 வருட ஆட்சியிற்கு ஒரு மூக்கணாங்கயிறு போடப்பட்டுவிட்டதாக உணரும் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.
ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.. – மோடி
அழையா விருந்தாளியாக… திடீர்னு பாகிஸ்தான் போயி… பாகிஸ்தான் பிரதமரை கட்டிபுடிச்சு… கல்யாணத்தில் ஓசி பிரியாணி தின்னுட்டு… ஊருக்கு ஓடி வந்ததும்… மோடி சென்ற இந்திய விமான படை விமானத்துக்கு அவன் போட்டான் பாருங்க அபராதம் 2.86 லட்சம் ரூபாய்…. அதை இந்திய மக்களாகிய நாம் கட்டினோம்.
உலகின் வேறு எந்த நாட்டின் பிரதமரும் செய்யாத ஒரு மோசமான பாதுகாப்பு விதிமீறல் குற்றத்தை செய்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அதிகாரப்பூர்வ அரசாங்க பயணத்தை முடித்துவிட்டு…
ஆப்கானிஸ்தானில் இருந்து நேராய் டில்லி வர இருந்த இந்திய விமானப்படை விமானத்தை, இந்திய அரசின் தரப்பில் இருந்து எவ்வித பாதுகாப்பு முன் ஏற்பாடும் இன்றி, இந்திய வெளியுறவுத்துறை அரசு அதிகாரிகளுக்கோ இந்திய விமானப்படை தலைமைக்கோ கூட முறைப்படி தெரியப்படுத்தாமல்… சிம்பிளாக ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு… பாகிஸ்தான் நோக்கி விமானத்தை திருப்பி, லாகூரில் விமானத்தை தரை இறக்கி, நவாஸ் ஷரீஃப் வீட்டுக்கு சென்று… அவரை கட்டிப்பிடிச்சு கொஞ்சி குலாவி போட்டோவுக்கு போஸ் கொடுத்து… அவரின் பேத்தி கல்யாணத்தில் கலந்துகொண்டு, கல்யாண பிரியாணி தின்றுவிட்டு டில்லி வந்து… இந்தியாவை…. பாகிஸ்தானுக்கு அபராதம் கட்ட வைத்த ஒரே இந்திய பிரதமர்… மோடி மட்டுமே..!
இதை… அன்றைக்கு…. தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத மோடியின் அபத்தமான செயல் என்று அன்றைக்கே காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது. இப்படிப்பட்ட மோடி, இன்று ராகுல் காந்தி பிரதமர் ஆவதை பாகிஸ்தான் விரும்புவதாக கொஞ்சமும் வெட்கமே இன்றி… கற்பனையில் அவதூறாக பேசுவது வன்மம்… அசிங்கம்… மட்டுமின்றி… அருகதையற்றவரின் அர்த்தமற்ற உளறல்..!
கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.