தகனமா? புதைகுழியா? சிறந்தது

(Dr. கனகசபாபதி வாசுதேவா)

நிஜத்திலிருந்து….. சட்ட மருத்துவம்
நாட்டில் ஒரு புறம் கொரோனா நோயினால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த நோயினால் இறந்த இரு முஸ்லீம் மக்களின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான முறையில் எரிக்கப்பட்டதினை தொடர்ந்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டுமா? புதைத்தால் ஆபத்தாய் முடியுமா? என்ற வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்பதிவில் இவை பற்றி ஆராயப்படுகின்றது.

கரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள் எவை, என்ன காரணம்?

கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ், உலக நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11.3 லட்சம் மக்களிடையே கரோனா தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2,36,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, விலை மதிப்பில்லாத உயிர்கள்.

கரோனா நோய் தொற்று: ஏன் அமெரிக்காவில் மட்டும் இந்த அளவுக்கு பாதிப்பு?: என்ன காரணம்? வெளியான புதிய தகவல்கள்

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் எதிர்வினை மிகையானதா? கொரோனா தொற்று இதுவரை ஐரோப்பிய மற்றும் சீன பாதையில் செல்லவில்லை..

எச்சரிக்கையான நம்பிக்கையே தற்போதைய தேவை….

டாக்டர் என். தேவதாசன் ஒரு பொது சுகாதார நிபுணர். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். உலக சுகாதார நிறுவனத்துடன் இந்தியாவில் தொற்று நோய்களுக்கான தேசிய திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் வடிவமைப்பிற்கு பெரும்பங்காற்றியவர். பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் மூன்று நிபா தொற்று உட்பட பல்வேறு தொற்றுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். தற்போது ஹெல்த் சிஸ்டம்ஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிளாட்ஃபார்ம் (Health Systems Transformation Platform) எனும் அமைப்பிற்கு தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.

தந்தையரும், மகளும்…. கோபி பிறையன்ர்(Kobe Bryant) உம் அவர் மகளும்(Gianna)….

(சாகரன்)

எல்லா தந்தையருக்கும் தனது மகள் என்றால் ஒருவகையான விசேட உறவு பாசப்பிணப்பு இருப்பது இயல்பானதே. பிறக்கும் முதல் குழந்தை மகளாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்புதான் தந்தையரிடம் இருக்கின்றது. என் வீட்டிற்கு ஒரு தேவதை புதிதாக வரவேண்டும் என்று மனதிற்குள் குதூகலித்து இருப்பர் தந்தையர்.

யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்

(வி. சபேசன்)
·
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறாள். இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்கின்ற ஆத்திரத்தில் கணவனே கொலை செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை பல ஈழத்து சங்கிகள் ஆதரித்து எழுதிக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்..

(Douglas Muthukumar)

இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும்.

‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’

(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

அவுஸ்ரேலியக் காடுகள் ஏன் எரிகின்றன?

(ஜெயக்குமாரன் சந்திரசேகரம்)

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது?

முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும்.