(Noorullah Noor)

யாழ்பாணத்தில் வசித்து வந்த பூர்வகுடியான தமிழ் பேசும் இஸ்லாமியர்களை இரக்கமற்று இரண்டே மணி நேரத்தில் வெளியேற்றியது….அதுவும் அவர்களின் உடமைகள் பணம் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்200பணம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதித்த கொடுமை…
The Formula
Articles
(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சுதந்திரத்திற்குப்பின்புதியயு.என்.பி.அரசாங்கத்தின்உணவுஉற்பத்திக்கொள்கையது நெற்பயிர்ச் செய்கையில் மாத்திரம் அக்கறையுடன் இருந்தது. ஏனைய உணவுப் பொருட்களைப் புறக்கணித்தது. பாரம்பரியமாக, இவற்றில் பெரும்பாலானவை ‘உயர்த’ பயிர்களாகவும், நெல்லுக்குத் துணைப் பயிர்களாகவும், சிங்களப் பயிரிடுபவர்களாலம் தமிழ் விவசாயியால் பணப் பயிராகவும் வளர்க்கப்பட்டன.
பாதாள உலகக் குழுக்களின் கொலை வெறியாட்டங்கள், பாதாளக் குழுக்கள், குற்றங்கள், சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள முப்படைகள், அரிசித் தட்டுப்பாடு, தேங்காய்களின் விலையேற்றம், ‘புது மாப்பிள்ளைகள்’ போல, அமைச்சர்கள் சிலர் செய்யும் அலப்பறைகள், அனுபவமற்ற பேச்சுக்கள், செயற்பாடுகள் என நாட்டு மக்களிடையில் கடும் எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் சந்தித்துவரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தனது அமைச்சர்கள், எம்.பிக்களினால் கட்சிக்குள்ளும் ‘புதிய நெருக்கடி’ ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாளாந்த செய்திகளாக மாறி விட்டன. மேலே குறிப்பிட்ட இரு பிரிவுகளிலும் பாதிரியார்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் அடங்குகின்றனர்.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.உண்மையில், காட்டு விலங்குகளால் காடுகளுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதற்குக் குறிப்பிட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை தலையீடுகள் தேவை என்பது நீண்ட காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.
(தோழர் ஜேம்ஸ்)
ரஷ்யா, உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த நாட்களின் தொடராக அந்த யுத்த்தின் பின்புலம் பற்றி விரிவாக எழுதி இருந்தேன்.
தற்போது ட்றம் ஆட்சியிற்கு வந்த பின்பு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ‘வியாபாரத்தில்’ அவர் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த வளங்களும் ஒரு காலத்து சோவியத் குடியரசின்(USSR) வளங்கள்தான் என்பதையும் இங்கு கவனத்தில் எடுக்கவும்.
யுத்தம் அற்ற வியாபாரத்தை அவர் சில இடங்களில் செயற்படுத்த விரும்புவார். அதில் அதிக வருவாய் வரும் என்பதாக.
அதில் ஒன்றுதான் அவரது முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் விலக்கி தலிபான்களிடம் ஆட்சியை கைவிட்டு வந்தது
இதற்கு முன்பு இருந்த ஜோ பைடன் அமெரிக்க நிர்வாகம் யுத்தத்தை தொடரும் ஆயுத விற்பனை என்ற வியாபாரத்தை நடாத்தி வந்தது
போர் நிறுத்தம்….
ஏலவே அமெரிக்கா யுத்தத்திற்கான வழங்கிய பணத்தை உக்ரேன் மீள் அளிக்க வேண்டும்.
அல்லது
உக்ரேனின் வளங்களில் சிலவற்றை 500 மில்லியன் அளவிற்கு எழுதித் தரவேண்டும் என்றான முன் மொழிவை ட்றம் நிர்வாகம் முன்வைத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை கைசாத்திட வெள்ளை மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார் ஜெலன்ஸ்கி
இதன் உச்சமாக இன்று அமெரிக்காவின் ஓவல் கட்டடத்தில் ட்றம், ஜெலன்ஸ்கி இடையிலான வார்த்தைப் போர் ஏனைய நிர்வாகிகள், பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்துள்ளது.
பொதுவாக இம்மாதிரியான சந்திப்புகளின் பின்பு நடைபெறும் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு உணவருந்தல் என்பன இடை நிறுத்தப்பட்டு ஜெலன்ஸ்கி வெளியேறுவிட்டார்.
உலகம் முழுவதும் ஊடகங்களில் இது சார்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொணடிருக்கையில்
Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. இக் கட்டுரையை இங்கு இணைக்கின்றேன் இது பல உண்மைகளை தெளிவுபடுத்தும் என்பதற்காக…..
“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”
என்ற தலைப்பில் 27.9.2018 Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை.
பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர்.
ரஷ்யா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.
1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன.
கோர்பச்சேவ் (1985-1991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Belavezha என்ற இடத்தில் ஒன்றுகூடி சோவியத் இனை இல்லாமலாக்க கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.
சோவியத் இன்மையின் பின், அந்த கட்டமைப்பின் மையமாக செயற்பட்ட ரஷ்யக் குடியரசு பலம்பொருந்திய நாடாக உருவாகியது.
பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து அமெரிக்காவுடனான அதன் உறவை பேண விரும்பியது.
1992 இல் ஜெல்சின்(அப்போதைய ரஷ்யா அதிபர்) அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.
“நாம் இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்” என காங்கிரசில் உரையாற்றினார்.
ஆனால் அமெரிக்கா ரஷ்யாவை தனது எதிரி நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவில்லை.
கம்யூனிச கட்சிகள் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியிலும் பிரான்சிலும் பலம்பொருந்தியதாக இருந்தன அன்று.
கம்யூனிச அச்சம்; அமெரிக்காவுக்கு நீங்கியபாடில்லை.
ரஷ்யாவிலும்கூட அது மீண்டும் எழலாம் என்ற அச்சமும் இருந்தது.
இந் நிலையில் 1992 இல் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கையின் பொறுப்பாளர் Paul Wolfowitz இன் இரகசிய அறிக்கை கசிந்து நியூயோர்க் ரைம்ஸ் இல் வெளியாகி பரபரப்பாகியது.
அது….
இதற்குள் இருக்கும் நீண்ட காலமாக செயற்பாட்டில் இருக்கும் தற்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரியி நெத்தனயாகோவின் நீண்ட கால செயற்பாடுகளும் அடங்கும். அது முன்னால் சோவியத் நட்பு நாடுகளை துவசம் செய்வது என்பதாகவும் அதன் உடன் கூடி ஏனைய சோவியத் ஆதரவு திவுpரவாத அமைப்புகளை இல்லாது செய்தலும் அடங்கும்.
இந்த புறக்கணிப்பு எல்லாம் ரஷ்ய மக்களுக்கு கோர்பச்சேவ் மற்றம் ஜெல்சின் மீதான கோபத்தை விளைவித்தது.
“நீங்கள் இருவரும் எமது நாட்டை விற்றுவிட்டீர்கள்” என அவர்கள் கடுமையாக சாடினார்கள்.
இன்று இந்த இருவருக்குமான செல்வாக்கு ரசியாவில் 5 வீதத்துக்கும் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.(இந்த இருவரும் தற்போது மரணமடைந்தும் விட்டனர்)
இந்த கோப உணர்ச்சி ரஷ்ய மக்களை அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு மேலும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
ஆனாலும் நியுயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது தொலைபேசியில் புட்டின், அமெரிக்க அதிபர் புஷ் உடன் தொடர்புகொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்பட தனது உதவியை நல்குவதாக தெரிவித்தார்.
அதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு மத்திய ஆசியப் பகுதியை உபயோகிக்க வசதிசெய்து தருவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சேர்ந்து செயற்படுவோம் எனவும் சொன்னார்.
ஆனால் புஷ் அதை புறந்தள்ளினார்.
இவ்வாறாக ரஷ்யா தனது தரப்பில் எடுத்த இராசதந்திர முயற்சிகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன.
2007 இல் G20 மாநாட்டில் புட்டின் உரையாற்றியபோது, நேற்றோவின் விரிவாக்கம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.
“நேற்றோ ஐரோப்பிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை கேட்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கு எதிராக ஏன் இந்த விரிவாக்கம்?” என நேரடியாகவே கேட்டார்.
“1990 மே17 அன்று புரூசலில் என்ன சொல்லப்பட்டது. நேற்றோ இராணுவத்தை ஜேர்மனிக்கு வெளியில் தரித்துவைக்க மாட்டோம். சோவியத் யூனியனுக்கு ஒரு ஸ்திரமான பாதுகாப்பு உறுதிப்பாட்டை நாம் வழங்குவோம் என்றீர்கள். எங்கே அந்த உறுதிப்பாடு?” என்று கேட்டார் புட்டின்.
அதற்கான பதில் இவ்வாறாக இருந்தது. “ஆம் கொடுத்தோம்தான். அது சோவியத்துக்குத்தான், ரஷ்யாவுக்கு அல்ல. நீங்கள் ரஷ்யர்கள்”. என பதில் கிடைத்தது.
ரஷ்யாவை அவமானப்படுத்துகிற இன்னொரு நையாண்டிப் பதிலாக இது இருந்தது.
2017 இல் புட்டின் அமெரிக்காவையும் மேற்குலகையும் பார்த்து இவ்வாறு கூறினார். “எங்களுடைய தவறு உங்களை நம்பியது. உங்களது தவறு அதை உங்களுக்கு சாதகமாக எடுத்தது” என்றார்.
மேற்குலகினதும் அமெரிக்காவினதும் இந்த அரசியல் சித்துவிளையாட்டு புட்டினின் அணுகுமுறைகளை மாற்றியமைத்தது.
அதாவது புட்டின் இன்று இவர்களை எந்தவிதத்திலும் நம்பவில்லை.
இன்னும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டிருக்கிறது.
இராஜதந்திர முயற்சிகளை இல்லாமலாக்கியிருக்கிறது.