‘என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!’ – ‘நீயா நானா’ நமீதா!

 

”சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..!

’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’

(“‘என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!’ – ‘நீயா நானா’ நமீதா!” தொடர்ந்து வாசிக்க…)

குழப்பத்தில் இரண்டாம் தலைமுறை புலம் பெயர் எமது பிள்ளைகள்

கனடாவில் வாழும், புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த இரண்டாம் தலைமுறைப் பெண் ஒருவர் தயாரித்த யூடியூப் வீடியோ சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. அவர் அந்த வீடியோவில் தனது தமிழ் சமூகத்தில் உள்ள குறைகளை நையாண்டி செய்துள்ளார். ஊரில் வாழும் உறவினர்களுக்கு, கனடாவில் வாழும் தமிழர்கள் பணம் அனுப்புவதை குறை கூறி கிண்டல் அடித்துள்ளார்.

(“குழப்பத்தில் இரண்டாம் தலைமுறை புலம் பெயர் எமது பிள்ளைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்

(சாகரன்)

கைதுகளும் சிறையில் அடைப்புகளிலும் சில நியாயங்கள் இல்லாமல் இல்லை. தேரரின் கைது, மகிந்த குடும்பத்தின் செல்ல வாரிசின் கைது இவற்றைத்தான் குறிப்பிடுகின்றேன். ஆனால் இவை நடைபெறும் காலம் எனக்குள் ஒரு கேள்விக் குறியை எழுப்பி நிற்கின்றது. கண்டி யாத்திரை சென்றவரின் மருமகன் ஒன்றும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தருவதில் விருப்புடையவர் அல்ல. சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியை எரித்து நிறுதியவர். ஏன் கருணாவை உடைத்து வேகமாக புலியை இல்லாமல் செய்தவர். இதன் மூலம் நோர்வேயின் ஒஸ்லோ சமஷ்டி வாய்ப்பை இல்லாமல் செய்தவர். இவரின் அரசியல் பெரியப்பா 13 வதில் இருந்த அதிகாரங்களை பறித்தெடுத்து இணைந்திருந்ததை தமிழ் மாகாண அரசை பிரிக்க அத்திவாரம் போட்டவர். சில வெளிநாட்டுச்(மேற்குலக) சக்திகளின் விருப்பு இலங்கை முழுவதிற்குமான சந்தை வாய்ப்பு, தமது செ(சொ)ல்வாக்கு பிரதேசமாக இலங்கையை வைத்திருத்தல் என்பதே. இதற்கான வேண்டுதலை ஜேஆர் இன் மருமகன் தனது பதவியை(19 தேர்தல்களில் தோற்ற பின்பு கிடைத்த வெற்றி) தக்க வைத்துக்கொள அனுசரிக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் புதிய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறித்திரியும் வேடம். ஆனால் மனத்தில் துளியளவும் சிறுபான்மை மக்களுக்கு உரிமை வழங்களில் வெறுப்புள்ளவர். எனவே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையை கிள்ளிவிடும் செயலாகவே இந்த கைதுகள் பரிணாமம் அடையும் என்பது என் பார்வை.

(“அரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

தோற்றுப்போன தமிழர் தரப்பு

தீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு!

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19 யாப்பு திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை மக்கள் ஆலோசனைகளை பெற்று முன்வைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழர் தரப்பும் யாப்பு திருத்தத்தில் தமது கோரிக்கைகளை முன்வைக்க தயாராகி வருகின்றன. தமிழர்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பாக ஒற்றுமையாக தமது கோரிக்கையை முன்வைக்க முடியாத நிலையில் தனித்தனியாக தமது யோசனைகளை தமிழர் தரப்பு முன்வைக்க உள்ளன. தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்பதில் சிங்கள தரப்பு ஒன்றுமையாக இருக்கிறது. ஆனால் தமக்கு என்ன தீர்வு என்பதை முன்வைப்பதில் தமிழர் தரப்பிடம் ஒற்றுமை இல்லை.

(“தோற்றுப்போன தமிழர் தரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..

(இது ஒரு முகப்பு புத்தகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PFLP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்தPFLP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..” தொடர்ந்து வாசிக்க…)

கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!

அண்ணனுக்காக போர்க்களம் பலகண்டு எட்டுத்திக்கும்வென்று, தேவலோக தலைவன் இந்திரனை கூட இராவணன் காலடியில், மண்டியிட வைத்தவன் கும்பகர்ணன். இனி வெல்வதற்கு எவரும் இல்லை என எண்ணியபோது தான் அவனுக்கு அசதி ஏற்ப்பட்டது. பல காலம் தான் தூங்கவில்லை என்ற நிலை புரிந்தது. அரக்கர் முதல் தேவர் வரை அனைவரையும் வென்ற பின், இனி போருக்கு தேவை இருக்காது என அவன் தூக்கத்தை அரவணைத்த போதுதான், இராவணன் சீதையை கவர்ந்து வந்தான்.

(“கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!” தொடர்ந்து வாசிக்க…)

தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!

வடமாகாண முதல்வரை வாராதுவந்த மாமணி, எங்கள் பிரம்மா என்றெல்லாம் எழுதி அவரை பேரவைக்கு இணைத்தலைவராக்கி, தமக்கு பெருமை சேர்த்தவர் தரும் வஞ்சக புகழ்ச்சியால் ஏற்பட்ட மயக்கமா? இல்லை சங்கூதுபவர் சொல்வது கீதை என்ற தடுமாற்றமா? என எண்ணும் அளவிற்கு அண்மையில் வரும் ஆசிரியர் தலையங்கங்கள், சமூகங்களிடையே ஏற்படுத்த கூடிய வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கும்படி, புருசொத்தமனுக்கு புத்திசொல்ல முதல்வர் காட்டும் “அருவருக்கத்தக்க மௌனம்” என்னை விசனப்பட வைக்கிறது. முதலில் தனி நபர்களை தாக்க தொடங்கியவர், தன் பிரதேச வாதத்தை கொழும்பில் ஆரம்பித்தார். விலை போன கொழும்பு தலைமை என சுமந்திரனை சாடினார். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்தினால், விருந்துகளில் கலந்து கொண்டால் அவர்களை விலை போனவர்கள் என்று வரையறுத்தால், இன்று இருக்கும் எந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, உறுப்பினர்களும் விலை போனவர்கள் என்று தான் தலையங்கம் எழுதவேண்டும். ஏனென்றால் புலிகள் காலத்தில் அனைவரும் இருந்தது தெற்கில், அரச வசதி மற்றும் பாதுகாப்பில்.

(“தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!” தொடர்ந்து வாசிக்க…)

சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது

முழு நாடும் ஒரு குழப்பநிலையில் உள்ளது. இல்லாவிடின் சகல இனக்குழுக்களும் அவ்வாறே. ஆண் பெண் ஆகிய நாமனைவரும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்N;றாம். குழப்ப நிலையில் உள்ள எமது பிள்ளைகள் தமது எதிர்காலத்தைப் பற்றி ஏதும் அறியாமல் கிரிக்கெட்டும், உதைப்பந்தாட்டமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எம்முள் உள்ள தேசப்பற்று படிப்படியாக குறைந்து செல்கின்றது. அனைவரும் இன்று பதவியை தேடியே அலைகின்றனர் எனக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். சிலருக்கு நாட்டின் மீதான அக்கறை கடைசியாகவும் அதிகாரத்தை கைப்பற்றுவது முன்னிலையிலும் காணப்படுகிறது.

(“சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது” தொடர்ந்து வாசிக்க…)

நிலாவரை கிணறு !

 

நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக்கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? நிலாவரையின் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள். புத்தூர் – சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் உள்ளன. இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேஸ்வரம் எனப்பலர் நம்புகின்றனர். அந்தக் கிணறுதான் நிலாவரைக்கிணறு.

ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கேயரது படையெடுப்பின்போது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. நவசைலேஸ்வரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது. ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேஸ்வரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர். அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது).

நிலாவரைக் கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேஸ்வரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது. தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர். இது பண்டைக்கால நவசைலேஸ்வரத்துக்குரிய சிவலிங்கமென நம்பப்படுகின்றது. போர்த்துக்கேயர் நவசைலேஸ்வரத்தை அழித்தபோது, அங்கிருந்த விக்கிரகங்களை சிலர் பாதுகாப்பாக இந்தக்கிணற்றில் போட்டதாக கர்ணபரம்பரையாக கதைகள் உள்ளன. கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார்.

இன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன. நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை). நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேஸ்வரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் – மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பாறைகள் உள்ளன. இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் போல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம்.

நிலாவரை தொடர்பாக நிலவும் கர்ண பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர். நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கமும் சுவாரசியமானது. யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது. சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன.

தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. நிலமட்டத்தில் இருந்து 14 அடி ஆழத்தில் நீர் காணப்படுகின்றது. இந்நீர்நிலை தொடர்பாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியா, யேர்மனி, செக் குடியரசு இப்படியான நாடுகளில் இருந்து வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதன் ஆழம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆழம் 382 அடியைவிட அதிகமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. இந்த நீர்நிலை தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பராமரிக்கப்படுகின்றது.

இவ்வாறு நீரோட்டத் தொடர்பு இருப்பதால் மழை காலங்களில் நீர் அதிகரிப்பதுமில்லை. கோடைகாலங்களில் நீர்வற்றுவதுமில்லை. என்றும் சம நிலை தளம்பாத அருங்குணத்துடன் நிலாவரைக் கிணறு காணப்படுகின்றது. நிலாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர். இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன. முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலாவரைக் கிணற்றில் இருந்து இதனை அண்டிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத்தைச் சீராக மேற்கொள்ள முடியும்.

கிராமம்!…..

‘உலகமயமாக்கல்’ – இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது. எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும், இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முடிகிறது. விரிந்து கிடந்த உலகம் நம் கைக்குள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் விரிவால், உலகம் ஒரு கிராமமாய் ஆகிவிட்டதாய்ச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கிராமம் என்ற சொற்பிரயோகம், சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல. கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு, என பல விடயங்களையும், அச்சொல் உட்கொண்டு நிற்கிறது. இன்று உலகத்தைக் கிராமம் என்கிறவர்கள் பாவிக்கும், கிராமம் எனும் சொற்றொடருக்குள், மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.

(“கிராமம்!…..” தொடர்ந்து வாசிக்க…)