அரசு எப்படி மதிக்கும்?

எங்களையும் எங்களுடைய கோரிக்கைகளையும் நீங்களே மதிக்கவில்லையென்றால் அரசு எப்படி மதிக்கும்?

கிளிநொச்சியில்(21.01.2016) அன்று கவலையளிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க முற்பட்ட வேளை ஏற்பட்டது இது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவிருந்த வேளை, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு அணியாகத் திரண்டு வந்தனர். பெண்கள், முதியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என ஏறக்குறைய 50 க்கு மேற்பட்டவர்கள். வந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். இதன் நோக்கம் தமது பிரச்சினை மீதான கவன ஈர்ப்பாகவே இருந்தது. இப்படி வந்தவர்களை அப்பொழுது அங்கே குழுமியிருந்த பொறுப்பானவர்கள் சந்தித்திருக்க வேண்டும். குறிப்பாக சம்மந்தன் சந்தித்திருப்பது அவசியம். அப்படிச் சம்மந்தனோ அல்லது பொறுப்பான வேறு முக்கியஸ்தர்களோ சந்தித்திருந்தால் அது, குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்கும். அத்துடன், அவர்களை மரியாதை செய்வதாகவும் அமைந்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

(“அரசு எப்படி மதிக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும்.

(“மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே!” தொடர்ந்து வாசிக்க…)

கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது. வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.

(“கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பட்டையை கிளப்பும் பிழாச் சோறு

 

முக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பிழாவில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்…!.ஒருகாலத்தில் ஆதிக்கசாதியினர் இவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறப்படவர்களுக்கு தமது வீட்டுப்பாத்திரத்தில் உணவு வழங்கினால் ‘தீட்டு’ என்று கருதி அவர்களுக்கு இந்த ‘அட்சய’ பாத்திரத்தில்தான் சோறு கொடுத்தனர் என்ற வடுகள் நிறைந்த வரலாற்றையும் இந்த ‘பிழா’ அல்லது ‘தட்டுவம்’ கொண்டிருந்தது. தட்டுவதில் நீர் ஒழுகும் ஆனால் பிழாவில் நீர் ஒழுகாது. பிழாவில் அனேகமாக கள்ளு பரிமாறுவர். தண்ணீரைக் கிணற்றில் இருந்து அள்ளுவதற்கு வாளியிற்கு பதிலாக பனை ஓலையில் இழைத்துச் செய்யப்படுவது பட்டை இந்தப் பட்டையும், பிழாவும் எமது வாழ்வில் பின்னிப் பிணைந்த இனி பாத்திரங்கள்

(குடாநாட்டான்)

அறிக்கைப்போர் நடத்தும் அமைப்புகளின் மெத்தனம் குறித்து எதிர்கட்சி தலைவர் விசனம்!

தமிழ் மக்களின் உரிமை சம்மந்தமாகவும், அவர்களுக்கு எவ்வாறான தீர்வு தேவை என்பது பற்றியும் ஆளுக்கொரு அமைப்பை உருவாக்கி, அறிக்கை விடுவதும், கொடிபிடித்து கோசமிடுவதும் என விளம்பரம்தேடும் பலர், அண்மையில் பிரதமரால் அமைக்கப்பட்ட தீர்வுதிட்டம் சம்மந்தமான இருபதுபேர் கொண்ட மக்கள் கருத்தை அறியும் குழு முன்தோன்றி, தமது ஆலோசனைகளை வழங்க முன்வரவில்லை என்ற தன் விசனத்தை, வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் திரு சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

(“அறிக்கைப்போர் நடத்தும் அமைப்புகளின் மெத்தனம் குறித்து எதிர்கட்சி தலைவர் விசனம்!” தொடர்ந்து வாசிக்க…)

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே!…நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்!

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதற என் கண்ணீரை மறைத்தபடி நான் புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட, அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது!

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை, என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு!

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…உறவுகள் இதுதானென்று!

(குடாநாட்டான்)

தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!

சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.

(“தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம், காணி வீட்டுரிமை எனும் வாக்குறுதிகள் மறைந்து வரவு செலவு திட்டத்தில் எமது வரவு பற்றி எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு வழமைப் போலவே ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாத்தா காலத்திலிருந்து அமைச்சராக இருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த மலையகத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் UNP யின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), ஒன்றிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பன முதலாளிமார் சங்கத்துடன் சேர்ந்து சம்பள உயர்வு பெற்றுக் கொள்வதில் எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் பெற்றதாக தெரியவில்லை.

(“அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை – வரதராஜபெருமாள்,

அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­குழு அவ­சியம் : வர­த­ரா­ஜ­பெ­ருமாள் வலி­யுறுத்து

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை. எதிர்­கா­லத்தில் அதற்கு வழி­வ­குக்க கூடிய வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது அதி­கா­ரப்­ப­கிர்­வைக்­கொண்ட ஒற்­றை­யாட்­சிக்­குட்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­கு­ழு­வொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென வட­கி­ழக்கின் முன்னாள் முத­ல­மைச்­ச­ரான வர­த­ரா­ஜ­பெ­ருமாள் விசும்­பா­ய­வி­லுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் பொது­மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றி­வதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள சிவல் குழுவின் தலை­மைக்­கா­ரி­யா­லயத்தில் நேற்­றை­ய­தினம் 22 பக்­கங்­க­ள­டங்­கிய தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

(“இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை – வரதராஜபெருமாள்,” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் சாணக்கியம்

வடக்கில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பு இப்போது சலனமின்றி ஓய்ந்து போய்க் கிடக்கிறது. எத்தகைய விறுவிறுப்புடன் தமிழ் மக்கள் பேரவை உருவாகியதோ அத்தகைய வேகத்துடனேயே அது உறங்கிப் போய் விட்டது போல தற்போது தோன்றுகிறது.

(“சம்பந்தனின் சாணக்கியம்” தொடர்ந்து வாசிக்க…)