சீறினார் சம்மந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர்!

நேற்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், பேராசிரியர் சிற்ரம்பலம் அவர்களின் செயல்பற்றி தான் அடைந்த விசனத்தை வெளிப்படுத்தினார். சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான பேராசிரியர், ஏற்க முடியாத காரணங்களை கூற முற்பட்ட போதும் அது சபையேறாததால், தான் தமிழ் அரசு கட்சி சார்பாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

(“சீறினார் சம்மந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர்!” தொடர்ந்து வாசிக்க…)

கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன் – நக்கீரன் குற்றச்சாட்டு

கடலில் மூழ்கிறவன் ஒரு துரும்பைப் பிடித்தாவது கரையெற முயற்சிப்பது போல வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளாராக விக்னேஸ்வரன் போட்டி போட்டபோது அவரைக் கொழும்புத் தமிழன், வாசுதேவ நாணயக்காரரின் சம்பந்தி, அவரது பிள்ளைகள் சிங்களத்திகளை திருமணம் செய்தவர்கள் என்று அர்ச்சித்தவர்கள் – தூசித்தவர்கள் இப்போது அவரைத் தலையில் தூக்கி வைத்து காவடி ஆடுகிறார்கள். அவருக்கு உடுக்கு அடித்து உசுப்பேத்துகிறார்கள்.

(“கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன் – நக்கீரன் குற்றச்சாட்டு” தொடர்ந்து வாசிக்க…)

1977 இன்னொரு சம்பவம்

1977 இனக்கலவரம் தென்னிலங்கையில் அரங்கேறிய நேரம்,வன்னிப்பகுதியில் வவுனிக்குளம் பகுதியில் சில சிங்கள மீனவர்கள் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் குளத்தில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இனக்கலவரம் தொடங்கியதை அடுத்து பயம் காரணமாக உடமைகள் எடுக்காமல் ஊர் திரும்பி விட்டனர்.அவரகள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கலவரத்தின்போது வவுனிக்குளம் பகுதியில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற சில விவசாயிகள் திரும்பிவரும்போது தாக்கப்பட்டனர்.இதுவும் புத்தளம் பகுதியிலேயே நடந்தது.

(“1977 இன்னொரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.டி.பி பத்திரிகை வலம்புரிக்கு வைத்தியர் செந்தூரனின் திறந்த மடல்.

முதலமைச்சரின் எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – 7 நாட்களில் முழுத் தமிழினமும் உங்களை ஆதரிக்கும். “தமிழ் இனமே! இன்னும் யாம் மௌனமாகத்தான் இருப்போமா?” என்ற வலம்புரியின் ஆசிரியத் தலையங்கம் பார்த்து மௌனமாக இருப்பது தவறு எனப் புரிந்துகொண்டேன். காலத்தின் தேவையாகிய தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மீது கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தங்களும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. இருந்த போதிலும் சாதாரண பொது மகன் என்ற ரீதியில் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

(“ஈ.பி.டி.பி பத்திரிகை வலம்புரிக்கு வைத்தியர் செந்தூரனின் திறந்த மடல்.” தொடர்ந்து வாசிக்க…)

ஆதிக்க சக்திகளின் ஆட்சியின் கீழ் இலங்கை ஒரு வருடம்

ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து, பிரதானமாக இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் உருவாக்கிய சதித்திட்டத்தின் கீழ் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு (08.01.2015) ஒரு வருடம் ஆகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தொடர்ச்சியாக 20 வருட காலமாக ஆட்சி செய்து, முன்னெப்போதுமில்லாத வகையில் பலமாகத் திகழ்ந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பலவீனமடையைச் செய்வதின் மூலமாகவே இலங்கையில் தமது காலை ஊன்றலாம் என்று  கருதிய இந்தியாவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது திட்டத்தில் வெற்றி பெற்றதோடு, இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட காலமாக வைத்திருக்கும் எண்ணத்துடன் தமது இராஜதந்திரிகளை தொடர்ச்சியாக இலங்கைக்கு அனுப்பிய வண்ணமும் உள்ளனர். அத்தோடு அவ்வப்போது தற்போதைய ஆட்சியாளர்களை புகழ்ந்து அறிக்கைகளையும் விடுகின்றனர்.

(“ஆதிக்க சக்திகளின் ஆட்சியின் கீழ் இலங்கை ஒரு வருடம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!

எம்.ரி.டிவோக்கஸ் நிறுவனம் மத்திய மாகாண அரசுகளின் துணையுடன் நச்சாக்கிய சுன்னாகம் நீர் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் கடந்த திங்கள் 18/01/2016 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீர் நஞ்சானதை ஏற்றுக்கொண்ட மல்லாகம் நீதிமன்றம், இறுதித் தீர்வு கிடைக்கும் வரை பாதிக்கப்பப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. வடமாகாண சபை உருவாக்கிய போலி நிபுணர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து நீர் வழங்கல் நிறுத்தப்பட்டடுள்ளது.

(“மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் அவ்வைப் பாட்டி. அவவின்ற பூட்டப்பிள்ளையள் புலம் பெயர் நாட்டில் புதுப்புது ஐடியாக்களுடன் திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு புல்லரிக்க வைக்கின்றனர். கோலாகலமாகக் கொத்துப்போட்டு பத்தும் பலதும் பெற்று வாழும் தமிழர் ஒருங்கிணைபுக் குழு தனது(TCC) கொத்து வியாபாரத்தை விஸ்தரிக்க பலான ஐடியா வழங்குவதே எனது நோக்கம்.

(“முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!” தொடர்ந்து வாசிக்க…)

நடேசனின் பார்வையில் புலியின் வாலைப் பிடித்தவர்கள்…..?

 

புலி எதிர்பாளராக இருந்த சேரன் ஜெயபாலன் போன்றவர்கள் நோர்வேயின் தலையீட்டின் பின்பு புலிகள் நிரந்தரமானவர்கள் என எண்ணியதால் தமிழ்தேசியம்பேசியதோடு புலிவாலைப்பிடித்தார்கள். ஆனால் புலி வாலைமட்டும் இவர்களிம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டது . ஆனால் வாலைபிடித்தவர்கள் விடமுடியாது என்பது ஐரணி(Irony) புலி பேரில் காசு உழைத்தவன் ஆயுதம் வாங்கியவன் எல்லாம் குண்டியில் ஒட்டின தூசுபோல் தட்டிவிட்டு போய்விட்டார்கள். . மிக்க சோகமான விடயம்தான். சேரன் ஜெயபாலன் மூச்சு அடங்கும் வரையும் புலிவாலை விடமுடியாது.

(“நடேசனின் பார்வையில் புலியின் வாலைப் பிடித்தவர்கள்…..?” தொடர்ந்து வாசிக்க…)

முருக்கு பெருத்து தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கல்லவா!

தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகள் பற்றி கலந்துரையாட பேரவை தலைவர், அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில், அவர்கள் ஏற்புடையதாக தெரிவு செய்த 20-01-2016 திகதி அன்றே மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கிய முதல்வர், இரவு 8 மணிவரை தனது காரியாலய கேட்போர் கூடத்தில் நடத்திய கலந்துரையாடலின் முடிவு, சுமுகமாக முடிந்தமை ஒரு சிலரது உள்நோக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.

(“முருக்கு பெருத்து தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கல்லவா!” தொடர்ந்து வாசிக்க…)

ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பேரரசுகள் என்றென்றைக்குமானவையல்ல. உலக வரலாற்றில் நிலையான பேரரசுகள் என எதுவும் இருந்ததில்லை. அவை பெரும்பாலும் வல்லரசுகளாக இருக்கின்றனவே தவிர, நல்லரசுகளாக இல்லை. அவை மக்களின் அவலத்தின் மீதும் துன்பங்களின் மீதும் சுரண்டல்களின் மீதும் கட்டியெழுப்பப்பட்டவை. மக்கள் எழுச்சியுறுகிற போது பேரரசுகளின் அத்திபாரம் ஆட்டங் காண்கிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகின் தன்னிகரில்லாத பேரரசாக அமெரிக்கா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. உலகின் எம்மூலையில் எது நடந்தாலும் அதைத் தீர்மானிக்கின்ற, செல்வாக்குச் செலுத்துகின்ற சக்தியாக அதன் வளர்ச்சி வியக்கத்தக்கது. அதனாலேயே அதனை ‘உலகப் பொலிஸ்காரன்’ என அழைப்பதுண்டு. அமெரிக்கா பற்றி உலக மக்களிடையே உள்ள பிம்பம் அதன் வெளியுறவுக் கொள்கையுடன் பாற்பட்டது.

(“ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்” தொடர்ந்து வாசிக்க…)