மீட்பர் பிறந்த மாதத்தில் சிந்திய குருதிகள்!!!

பாவிகளுக்காய் சிலுவை சுமந்த மீட்பர் பிறந்த மார்கழி மாதத்தை கொண்டாடும் வேளையில் ஈழ தமிழ் மக்களை பேரினவாத சாத்தானின் ராணுவத்திடம் இருந்து காக்க ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்ட எம் இனமான போராளிகள் தம்முள் மோதி “தெரிந்த சாத்தான் தெரியாத தேவதையை விட மேல்” என எண்ணி எதிரியின் பாசறையில் தம் உயிர் காக்க தஞ்சம் புகுந்த மாதமும் மார்கழி மாதம் தான்.

(“மீட்பர் பிறந்த மாதத்தில் சிந்திய குருதிகள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?

பழிச்சொல் நிறைந்த பாவரங்கில் தன்னை ஒரு கவிஞன் என சுய அறிமுகம் செய்து இந்தியா கைது செய்து இலங்கை அரசிடம் கையளிக்க போன நிலையில் சைனட் வில்லைகளை விழுங்கி 3/10/1987 அன்று உயிரிழந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு புலிகளின் நினைவுப் பாவரங்கில் , இந்திய வரலாற்றையும் அதன் கர்ணபரம்பரைக் கதைகளையும் கேவலப்படுத்துவது ஒரு புறமிருக்க , நேருவின் பரம்பரையை பற்றி ஏதோ யாரோ எழுதிய கதைகளையும் உண்மையாக்கும் விதத்தில் மந்திர உச்சாடனம் பண்ணுவது போல் அழுத்தமும் ஆவேசமும் கொண்டு பண்ணிப் பண்ணிப் பாவுரைத்தார் புலிப் பாவலன். ஆனால் இந்திய எதிர்ப்பில் நேருவை எதிப்பதில் அவர் காட்டிய முனைப்பில் முஸ்லிம் விரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை நீங்களே இதனை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

(“காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
1980 களின் நடுப் பகுதியில் தமிழ் நாட்டுப் பெண்கள் TVS 50 ஓடத்தொடங்கிய போது தமது துப்பட்டாவால் தலையை போர்த்தி சிறிதளவு முகத்தையும் மறைந்து செல்வர். தலை குழம்பாமலும் முகத்தி தூசி படிந்து முகத்தின் புத்துணர்சி குறையாமலும் இருக்க இதனை மேற்கொண்டனர். பார்பதற்கு அழகாகவும் இது இருந்தனர் இந்தத் தேவதைகள். தமது அழகிய முகத்தைக் காட்டமாட்டார்களா…? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எகிறிநின்றது. யாரும் மூக்கையும், வாயையும் மறைத்து சுவாசத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. இதனை 2010 வரைக்கும் ஓரளவிற்கு என்னால் அவதானிக்க முடிந்தது.

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பின் சதியா? யாழின் விதியா? –

(கம்பவாரிதி ஜெயராஜ்)

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத் தலைமைக்கான ஆயத்தத்தை தமிழ்மக்கள் பேரவை என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து, தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என,கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டை வேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

(“கொழும்பின் சதியா? யாழின் விதியா? –” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்துக்கு தயாராகும் சர்வதேசம் !

இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரைநூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுதபலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன? தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கின்றதா? என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராயவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

(“இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்துக்கு தயாராகும் சர்வதேசம் !” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் வன்முறை

1956 பொதுத் தேர்தலில் திரு.வி.என. நவரத்தினம் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.இது காங்கிரஸ் கட்சியின் பலமான கோட்டை.இவரை ஒருநாள் வழியில் கண்ட காங்கிரஸ் எம்.பி குமாரசாமி என்னை எதிர்த்து என்ன தைரியத்தில் போட்டியிடுகிறாய் என கிண்டலாகவே கேட்டார்.அந்தளவு உறுதியான செல்வாக்குடன் குமாரசாமி இருந்தார்.

(“தேர்தல் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு

சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை  தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது.

(“வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

கிழவரின் துணிவு – கம்பவாருதி ஜெயராஜ்

சம்பந்தன் உணர்ச்சிவயப்படாது நிதானமாக பேசியபேச்சொன்று சென்ற வாரப்பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது. தனது அரசியல் அனுபவத்தை,அப்பேச்சில் காட்டியிருக்கிறார்சம்பந்தன். மட்டக்களப்பில் இடம்பெற்ற, தனதுகட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம்ஒன்றிலேயே, இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,பெரும் சர்ச்சையாய் வெடித்து,அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

(“கிழவரின் துணிவு – கம்பவாருதி ஜெயராஜ்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை என்ற இன்றைய முயற்சியும்…….!

(சாகரன்)

ஆதிக்க தமிழ்த் தலமைகள் அன்று தொட்டு இன்று வரை தமது பதவிக்கான கோஷங்களை மட்டும் முன்வைத்தே அரசியல் நடாத்தி வருகின்றனர். இவர்களிடம் எப்போதும் தாம் சார்ந்த சமூகத்தின் எதிர்காலம்பற்றி சீரிய பார்வையோ, திட்டமோ, தீர்க்க தரிசனமோ, அல்லது இராஜதந்திரமோ திறமையோ இருந்தது இல்லை. நாம் ‘தோற்றுப் போனவர்கள்’ என்ற தோற்றப்பாட்டிற்கு சிங்களப் பேரினவாதத்தை விட தமிழ் குறும் தேசியவாதமே முக்கிய காரணியாக இருந்துகொண்டே வருகின்றது. தமிழ் மக்கள் பேரவை என்ற இன்றைய முயற்சியும் இந்த தட வழிப்பாதையில் பயணிக்கப்படவே உருவானதாக தோன்றுகின்றது. ஆனாலும் இங்கொன்றும் அங்கோன்றும் என நம்பிக்கைகள் தமிழ் தரப்பில் அவ்வப்போது துளிர்விட்டாலும் முளையுடனேயே அவை கருக வைக்கப்பட்டதே இங்கு யதார்த்தம்……? சோகம். ஆனாலும் நாம் தொடர்ந்தும் முயல்வோம்……! வெல்வோம்…. என்ற நம்பிக்கை எமக்கு உண்டு

தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வலம்புரி ஆசிரியர் வலம்புரி என்ற மின்னஞ்சல் ஊடாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.அதன் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவில்லை, ஏற்கனவே இணைத்தலைவர்கள் யார், உறுப்பினர்கள் யார் என நியமிக்கப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இந்த அமைப்புக்கான இணையத்தளமும் உருவாக்கப்பட்ட நிலையிலேயே சனிக்கிழமை இரவு இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குரார்ப்பண கூட்டம் முடிந்த ஒரு சில மணி நேரத்திலேயே இணையத்தளம் இயங்க ஆரம்பித்ததென்றால் இது எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட விடயம் என்பது தெளிவாகும்.

(“தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்” தொடர்ந்து வாசிக்க…)