தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே…திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. (“‘திரு சிம்பு அவர்களே… இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’” தொடர்ந்து வாசிக்க…)
Category: கட்டுரைகள்
Articles
30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?
சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது துரத்துகிறது தேவானந்தாவை சூளைமேடு திருநாவுகரசு கொலை வழக்கு. 1986ல் நடந்த சம்பவத்தின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் 18 பேரும் 2016 ஜனவரி 18ல் நீதிமன்றில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி கூடுதல் செசன் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். பலத்த வாத பிரதிவாதங்கள் கொண்டதே இந்த வழக்கு என்பது என் வாதம்.
(“30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?” தொடர்ந்து வாசிக்க…)
வடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்!!!
அண்மையில் பேசப்படும் விடயமாக பெரிது படுத்தப்படுவது வட மாகாண சபை முதல்வர் பற்றியதே. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக அவர் செயல்ப்படுவது போலவும் அதன் தலைமை அவர் வசம் கொடுக்கப்பட வேண்டும் என்பது போலவும் ஒரு நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது. அண்மையில் யாழ் விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் கூட முதல்வரிடம் உங்களுக்குள் ஏதாவது முரண்பாடு உண்டா என கேட்டதாகவும் அதற்கு கொள்கை ரீதியான சில முரண்பாடுகள் உண்டு ஆனால் எமக்குள் பிரிவினை இல்லை என தான் கூறியதாகவும் முதல்வர் பேட்டியளித்துள்ளார்.
(“வடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்!!!” தொடர்ந்து வாசிக்க…)
ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு பயிற்சி பெற அனுமதி வழங்க வேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்
1943 என இலக்கமிடப்பட்ட 2015.11.27ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி ஆசிரிய கலாசாலைகளுக்கு இரண்டு வருட ஆசிரிய பயிற்சியினை பெறுவதற்காக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன. இதில் குறைந்தது மூன்று மாத கால ஆசிரிய சேவை அனுபவம் கொண்ட பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என குற pத்துரைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் கடமையாற்றும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பிக்க அனுமதிபெற மாகாண கல்விப் பணிப்பாளரிடம் சென்ற போது ஆசிரிய உதவியாளர்கள் எவருக்கும் பயிற்சிக்கு அனுமதி வழங்காதிருக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பயிற்சிக்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆசிரிய உதவியாளர்களிடமிருந்து மக்கள் ஆசிரியர் சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அத் தீர்மானத்திற்கு தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கும் அதேவேளை பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டுமென மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் ஊவா மாகாண கல்வி பணிப்பாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
ஆயுதம் வாங்க எவ்வாறு பணம் தேடுகிறது ஐ.எஸ்?
பாரிஸ் படுகொலைகளுக்குப் பின்னர் ஐ. எஸ். பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதை எப்படி இயங்காமல் செய்யலாம் என்பதைவிட அது எப்படித் தோன்றியது என்பதைப் பற்றிய விவாதங்களே ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என்பதில் சந்தேகம் இல்லை. ஐ. எஸ். தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, ஈராக்கில் இருந்த புக்கா சிறையில் பல ஆண்டுகள் கைதியாக இருந்தவர். அவரை விடுவித்திருக்காவிட்டால் இந்த இயக்கம் தோன்றியே இருக்காது என்று சொல்பவர்களும் உள்ளனர்.
(“ஆயுதம் வாங்க எவ்வாறு பணம் தேடுகிறது ஐ.எஸ்?” தொடர்ந்து வாசிக்க…)
புலிகளை ஏமாத்திய பச்சை துரோகிகள் யார்…???
உலக நாடுகள் அனைத்திளும் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் அனைத்து தமிழ் மீடியாக்களும் புலிகளுக்கு ஆதரவாக பயத்திலும் விசுவாசத்திளும் செயல்பட்டாலும் புலிகள் ஏன் BBC, CNN, மற்றும் நாடு அனைத்திளும் ஆர்பாட்டம் செய்த தலைமை குளுக்களுக்கு ஏன் சரண்டர் ஆகும் விடயத்தை கூறவில்லை…???
(“புலிகளை ஏமாத்திய பச்சை துரோகிகள் யார்…???” தொடர்ந்து வாசிக்க…)
நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்
(என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 18)
இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை
1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. குறித்த சட்டமானது பின்வருமாறு வழங்கியது:
(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது.
(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவார். அத்துடன்
(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர், இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது,
(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.
மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!
(சாகரன்)
மழை நின்றாகிவிடது. வெள்ளமும் வடிய ஆரம்பித்துவிட்டது, அங்காங்கே கும்பை கூழம் சேறு சகதிகளே மிஞ்சிக்கிடக்கின்றது. தன்னார்வு நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக சேகரித்து வைக்க ‘உதவி’ சிலர் இனிமேல் நீங்கள் இங்கிருந்து எந்த பொருளையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்ற மிரடடல்;களும் ஆரம்பமாகிவிட்டன. நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்யும் கும்பல்களும் தங்கள் பேட்டைகளில் சண்டித்தனம் செய்து பொருட்களை பறித்தல் என்பதுவும் ஆரம்பமாகிவிட்டது. யாரோ தன்னார்வத்துடன் சேர்த்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் போது தமது கொடியினை அதில் திணிக்கும் பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் தலைவர்களைக் கொண்ட சென்னையில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும். பிழையான வழியில் பணம் சேர்காதவனை ‘பிழைக்கத் தெரியாத ஆள்’ என்று தூற்றுவதும,; லஞ்சம் வாங்கும் பிள்ளையை சோறு போடமாட்டேன் என்று விரட்டாத தாயும், சின்னவீடு வைத்திருத்தல் அவர் தகுதிக்கு பொருத்தனமானது என்று பெருமைப்படும் அரசியல் தொண்டர்களும், இதனைக் கண்டும் கணாமலும் இருக்கு வீட்டம்மாவும் இருக்கும் நகரத்தில் வெள்ள நிவாரணத்தில் நடக்கும் கொள்ளைகளை எதிர்பார்காமல் இருக்க முடியாதுதானே….?
(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)
விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்
பிரேமதாசா பல கொலைகளுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப் பட்டவர். அவர் விதைத்ததைத்தானே அவரால் அறுத்திருக்க முடியும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம் , அப்படியே ராஜீவும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தமிழரைக் கொன்றவர் , எனவே அவரின் கொலையையும் (சாவையும்) , அவர் விதைத்த வினையையே அவரும் அறுவடை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த இருவர் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை , அரசியல் தலைவர்களை அழித்த பிரபாகரன் கூட தான் விதைத்ததைதான் அறுவடை செய்துள்ளார் என்பதை எழுத தமிழ் பேராசிரியர்களைக் காணவில்லை!
(“விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்” தொடர்ந்து வாசிக்க…)
வெள்ளத்தில் தத்தளித்த மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடிய பிரமுகர்கள்
நாட்களே பெய்த பெரு மழையால் சிதைந்து கிடக்கிறது சிங்காரச் செ சில ன்னை. தமிழகத்தின் தலைநகர் என்று மார்தட்டிக் கொண்ட சென்னை இன்று ஏனைய மாவட்டங்களிடம் மடிப்பிச்சை கேட்டு நிற்கிறது. வருடந்தோறும் பெய்யும் பருவமழையால் புயல் கடக்கும் பூமியாக கடலூர் மட்டுமே மாட்டிக்கொள்ள, இம்முறை தலைநகரிலும் மழை பெய்ததால் உலகப் புகழ்பெற்றிருக்கிறது சென்னை. சுனாமி எனும் ஆழிக் கூத்தைத் தோற்கடித்த இந்த மழை சென்னையில் ஆடியிருப்பதோ அகோரத் தாண்டவம்.
(“வெள்ளத்தில் தத்தளித்த மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடிய பிரமுகர்கள்” தொடர்ந்து வாசிக்க…)