இரு வேறுபட்டவரின் மரண நிகழ்வுகள் அண்மையில் பிரசித்தம் பெற்றது. ஒருவர் முதியவர் காந்தியம் டேவிட் ஐயா, மற்றவர் நடுவயதினர் போராளி தமிழினி. தமிழினி என்றால் முன்னாள் போராளி எனத்தானே போடவேண்டும்? ஆனால் தமிழினி என்ற சிவகாமி இறுதி வரை மரணத்துடன் போராடினாள் என்பதால் அவள் இறுதிவரை போராளிதான். இருவருமே இரு வேறு பாதையில் பயணித்தவர். அடைய நினைத்த இலக்கு ஒன்றுதான். தம் இனம் தமது சொந்தக்காலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வேட்கையில் தான் இருவரும் தாம் தேர்ந்தெடுத்த பாதையில் தம் பயணத்தை தொடர்ந்தனர்.
(“அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !” தொடர்ந்து வாசிக்க…)