மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.

(மாதவன் சஞ்சயன்)

1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.

(“மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.” தொடர்ந்து வாசிக்க…)

போய் வா போர் மகளே

(ப. தெய்வீகன்)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி.

(“போய் வா போர் மகளே” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கான தேர்தலா….? அரசியல்வாதிகளுக்கான தேர்தலா…?

(சாகரன்)

தேர்தல் நாள் இன்று கனடாவில். தற்போதெல்லாம் வெல்லுவதற்கான கோஷங்களை வைத்தே தேர்தலில் தம்மை பிரச்சாரப்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள்;. கொள்கையின் அடிப்படையில் அல்ல கோஷங்களின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கின்றனர். இந்தக் கோஷங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் என்ற அடிப்படையில் மட்டும் செயற்படுகின்றனர் அரசியல்வாதிகள். பின்பு செல்வாக்கு செலுத்தும் இந்தக் கோஷங்களை தமது கொள்கைகள் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுகின்றனர். இதில் மக்களுக்கான அங்கத்துவம் என்பதைவிட தமது சுகமான வாழ்விற்கான பாராளுமன்ற அங்கத்துவம் என்பதே முதன்மை பெறுகின்றது. இது இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் பொருந்துகின்றது. வெற்றிக்கான கோஷங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பெரு நிதி தேவைப்படுகின்றது. இது அடிப்படையில் நிதியுள்ளவர்களால் மட்டுமே தேர்தலில் நின்று வெற்றிபெறும் நிலமைகள் எற்படுத்தியிருக்கின்றது. சாதாரண சாமான்ய மக்களின் பிரச்சனைகளை அனுபவரீதியாக உணர்ந்தறியும் நிலையில் இந்த வசதிபடைத்த அரசியல்வாதிகள் இல்லாதபோது இவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. எனவேதான் எம்மைப் போன்ற மக்களுக்கு இந்தத் தேர்தலில் யார் வெற்றி… தோல்வி….. ஐ சந்தித்தாலும் நேரடித் தாக்கங்கள் தற்போதெல்லாம் ஏற்படுவதில்லை. இதனால் தற்போது இருக்கும் முதலாளித்துவ பாராளுமன்ற ‘ஜனநாயக’ முறையில் நாம் எமது வாக்குகளை உபயோகிக்க வேண்டும் என்ற வாதங்கள் அடிபட்டே போகின்றது. எனவே மக்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முறமை ஒன்று கண்டேயாகவேண்டும். இதற்கான பொறிமுறையை நாம் கண்டுபிடிக்க தவறினால் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் என்ற அடிப்படையில் தமது வாழ்வை மட்டும் உறுதிப்படுத்தும் அரசியல்வாதிக் கூட்டங்கள் பிழைத்துக்கொண்டு போக மறுபுறத்தில் தேர்தல் முறையில் நம்பிக்கையிழந்து தேர்தலில் பங்குபற்றாதவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டேபோகும்.

என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று

காணாமற்போயிருந்ததாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் விநாயகத்தின் குடும்பம் எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வந்தவர் விநாயகம். புலிகள் பலமுற்றிருந்த காலத்தில் தலைமையின் பணிப்பில் கிளிநொச்சியில் இருந்து இயங்கிய இந்த விநாயகம், அப்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருந்தார். விடுதலைப்புலிகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நகர்வுகளுக்கான ஆளனிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பொறுப்புக்கள் இவருக்கு தலைமையினால் வழங்கப்பட்டிருந்தது.

(“என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!

கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

(“தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

(“வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?” தொடர்ந்து வாசிக்க…)

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

(“எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.” தொடர்ந்து வாசிக்க…)

அயோக்கியர்களின் இறுதி ஆயுதம்…..

தமிழ் நாட்டு கலை வியாபாரக் கூத்தாடிகளின் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கூத்துக்கள் மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்ற கனவுலகத்தின் குத்துவெட்டுக்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கலையை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றியதில் கோப்ரட் சினிமாவிற்குப் பெரும் பங்குண்டு. அதிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சினிமாவோடு கட்டிப் போடும் அளவிற்கு இந்திய சினிமாக் கூத்தாடிகள் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

(“அயோக்கியர்களின் இறுதி ஆயுதம்…..” தொடர்ந்து வாசிக்க…)

கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்!

(மீன்பாடும் தேனாடான்)

2004 ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர் கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத் தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது.
ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்பு வரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால் வன்னி புலிகள் மட்டகளப்பு வேட்பாளர்கள் பிளவின் பின்னர் கருணாம்மானுக்கு சார்பு நிலை எடுப்பார் என அஞ்சி வெற்றி வாய்ப்பை பெறக் கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டனர்.
இராஜன் சத்திய மூர்த்தி தேர்தலுக்கு முன்பே கொல்லப்பட்டார். அவரது புதைக்கப்பட்ட உடலைக்கூட தோண்டியெடுத்து வன்னி புலிகள் சின்னா பின்னப்படுத்தினர். கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான புலிகளை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றியடைந்த கிங்ஸ்லி இராசநாயகம் வன்னி புலிகளால் கொல்லப்பட்டார். அவரை இராஜினாமா செய்ய வைத்த பின்னர் அவரை கொன்றனர். அந்த இடத்துக்கே அரியநேந்திரனை புலிகள் நியமித்தனர். அதற்கு பின்னர் அத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டார்.

(“கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்

(மாதவன் சஞ்சயன்)

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என ஒருவன் கூறியது போல் பதில் கூறுகிறார் வட முதல்வர் என, எதிர்க்கட்சி தலைவர் குறை கூறும் நிலையில் இருக்கிறது முதல்வர் செயல். அண்மையில் ஆங்கில இணையத்தில் வடக்கு மாகாண சபையின் செயல்திறன் இன்மை பற்றி அறிக்கை வெளியிட்ட திரு தவராசா தான் முன்வைத்த மேலே உள்ள கேள்விகளை முதல்வரிடம் கேட்ட போது, முதல்வர் ஐநா வின் வதிவிட பிரதிநிதியை சாடினாரே தவிர, கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலை அவர் தரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி அறிய ஏற்கனவே உள்ளே நடந்தவை என்ன என விசாரித்தபோது முதல்வரின் செயலாமை பற்றி தெரிய வந்தது. ஆமை புகுந்தவீடு உருப்பாடாது என்பர். வட மாகாண சபையில் இயலாமை, முயலாமை, செயலாமை என பல ஆமைகள் புகுந்து விட்டன.

(“வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்” தொடர்ந்து வாசிக்க…)