தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதற்கு முன்னர் மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஷெய்த் ராத் அல் ஹ§ஸைனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் தமிழ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளை ஆத்திரமூட்டியுள்ளது. இரு சாராரும் அந்த அறிக்கையையும் பிரேரணையையும் எதிர்க்கிறார்கள்.

(“தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)

(மாதவன் சஞ்சயன்)

ஆரம்பத்தில் 25 நாடுகள் ஆதரவளித்த நிலையில் தற்போது 38 நாடுகளும் நாளடைவில் அனைத்து நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியில் நாம் சர்வதேசத்தின் கரிசனையில் வந்துள்ளமை தெரிகிறது. நாடுகளின் நலன்களுள் எம் நலன்களும் அடங்கும் விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு எமக்கு சாதகமானதை பெறுவதே புத்திசாலித்தனம். இந்த நிலையில் நடைமுறை சாத்தியமான விடயத்தை நாம் முன்னெடுத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும். பிரிவினை திட்டத்தை இந்தியா ஆரம்பத்திலேயே ஆதரிக்கவில்லை என்பதை சம்மந்தர் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காலம் கடந்தாவது பகிரங்கமாக இன்று ஒத்துக்கொள்கின்றனர். இந்திய அனுசரணை இன்றி எதுவும் அரங்கேறாது.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…

இயற்கை சார்ந்த இடத்திற்கு குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வது செம்மை மரபுப் பள்ளியின் கல்வி முறையில் ஓர் அங்கம். அதன்படி, மரபுப் பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கடந்த 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து இரண்டு பேருந்துகளில் கிளம்பினர். இந்தச் சுற்றுலாவிற்கு மரபுப் பள்ளியின் தலைவர் திரு.ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். அதற்கு முதல் நாள் இரவு சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களில் பெய்த கனமழை, மனதையும், சூழலையும் சில்லிட வைத்திருந்தது. குழந்தைகள், பெற்றோர், மரபுப் பள்ளி ஆசிரியர்கள், செம்மை குடும்பத்தினர் என சுமார் நூறு பேர் கொண்ட குழுவினர், முதலில் இறங்கிய இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம்.

(“காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)

(மாதவன் சஞ்சயன்)

இறுதித் தீர்வு 13ல் தானா என கேட்கும் பலர் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தை நினைவில் கொள்ளவேண்டும். இன்று பறையடித்து “வீ வோன்ட் தமிழ் ஈழம்” என கத்துபவர்களில் பலர் அன்று பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்தியா எம்மை ஏமாற்றிவிட்டது என்பவர்களில் பலர் அன்று போராட்ட காலத்தில் ஒதுங்கி இருந்தவர்கள். சம்மந்தரையும் சுமந்திரனையும் சீண்டுபவர்கள் ஒருதடவை பொலிஸ் அடியுடன் அடங்கியவர்களும், வழக்கில் தப்பியபின் தம் வாழ்க்கையை கொழும்பில் முடக்கியவரும், கொழு கொம்பு கிடைத்ததும் பற்றிப் பிடித்து படர்ந்து, தலைமையை துதிபாடி குளிரவைப்பவரும், புலம்பெயர் தமிழர் சாவிக்கு ஆடும் பொம்மைகளும் தான் என்பது பகிரங்க உண்மை.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை

இதைப்பற்றிய முழுமையான புரிதல் எனக்கு இல்லைதான். இருந்தாலுமே, இந்த மீனவனின் கருத்துக்கள், நிறையவே சென்சிபிள் ஆக இருக்கிறது. படித்துப்பாருங்கள்… தீராத தலைவலியான இந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு எப்படி தீர்த்து வைத்திருகிறது என்பதையும், தமிழ் நாட்டு தலவைர்கள் கட்ச தீவை மீட்க வேண்டும் என்று எப்படி அரசியல் ஆதாரத்துக்காக நாடகம் ஆடுகிறார்கள் என்பதையும், இலங்கை கடற்பகுதியில் நம் மீனவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் இதில் பார்ப்போம்..

(“இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை” தொடர்ந்து வாசிக்க…)

ஆடு நனைகிறதென்று…

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.

(“ஆடு நனைகிறதென்று…” தொடர்ந்து வாசிக்க…)

சினிமா ஊடாக வீட்டுக்குள் வந்து சேருகின்ற பேராபத்து!

திரைப்படம் இனிமேல் சிறுவருக்கு உகந்ததல்ல

எனது வீட்டைப் பொறுத்தவரையில் அப்பாவோ கணவரோ சிகரட் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள். என்றபோதும் எனது நான்கரை வயதேயான குட்டி மகன் பல்குத்தும் குச்சியை அடிக்கடி எடுத்து விளையாடும் போது தனது வாயில் ஒரு பக்கத்தில் வைத்து கொள்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது ஆபத்தானது என்பதனால் அதனை கண்காணாத இடத்தில் ஒழித்து வைத்தேன். ஆனால் என் மகனோ அதைக் கேட்டு அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

(“சினிமா ஊடாக வீட்டுக்குள் வந்து சேருகின்ற பேராபத்து!” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?

(மாதவன் சஞ்சயன்)

இந்தக் கேள்வியை கேட்பவர்கள் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். வாய் வீரம் பேசுபவர்களும், விதாண்ட வாதம் புரிபவர்களும், இனப் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும், நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை கூறி மக்களை பலிக்கடா ஆக்கி நடைபவனி, கையெழுத்து வேட்டை என நடத்தி தம்மை பிரபலப்படுத்தி, அதில் கலந்து கொண்டவரை, ஜெயக்குமாரி போல் சிறைக்கும் பருவமடையாத அவர் மகளை சிறுவர் காப்பகத்துக்கு அனுப்புபவர்களும் ஆடும் நாடகம் தெரியவரும்.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?” தொடர்ந்து வாசிக்க…)

கடவுளே!

(சனிக்கிழமை சம்பவம்.)

இப்படி ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து மோட்டார் சைக்கிள் டயரை கழுத்தில் மாட்டி மண்ணெண்னை ஊற்றி உயிருடன் எரித்ததை எனது சிறுவயதில் பார்க்க நேர்ந்தது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒரு சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இந்த கொடூரம் நிகழ்தப்பட்டது. ஏன்? எதற்காக? யார் எரித்தார்கள்? என்பது எனக்கு அவ்வளவாக அப்போது விளங்கவில்லை. ஆனால் பின்னாளில் எனக்கு நன்றாகவே புரிந்தது.

(“கடவுளே!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இம்முறை அவ் அரசாங்கத்தின் அனுசரணையுடனான ஒரு பிரேரணையே முன்வைக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறைவேற்றப்படவிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுஸைன், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக அவரது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கையை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அதில் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

(“ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே” தொடர்ந்து வாசிக்க…)