மதம்பினித்த யானையும் மனிதனும் ஒன்றுதான்.

“எனது வாழ்நாளிலேயே மதம் என்பது முற்றிலுமாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்”
மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப்படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப்படை யிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனு தாபம் காட்டப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டு வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனைக் கருத வேண்டும். மதம் மனிதனுக்குப் பிடித்தாலும் சரி, மிருகங் களுக்குப் பிடித்தாலும் ஆபத்தானதுதான். இதில் உள்ள கெட்ட வாய்ப்பு என்னவென்றால் மதத்தைப் பற்றி விமர்சிக்கவே கூடாது என்று செய்து வைத்திருக்கும் மோசமான ஏற்பாடாகும்.

(“மதம்பினித்த யானையும் மனிதனும் ஒன்றுதான்.” தொடர்ந்து வாசிக்க…)

எது இனஅழிப்பு??????

முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது??????
அனுராதா புறத்திலும் மற்றைய கிராமங்களிலும் குழந்தைகள் வயோதிபர்களை மற்றும் பெண்கள் கற்பிணிகள் என்று கொன்றதா????
மட்டக்கிளப்பில் முஸ்லிம்களை குழந்தைகளை கொன்றதா????
சரண்னடைந்த பொலிசாரை கொன்றதா????
உயிர்ருடன் ராயர் கொளுத்தி போட்டு மற்றைய போராட்ட குழுக்களை கொன்றதா????
இன்று மனித உரிமை பற்றி பேசும் முஸ்லிம்கள்……
மட்டக்கிளப்பில் தமிழ் மக்களை கிராமம் கிராமமாக கொல்லவில்லையா????
கற்பழிக்கவில்லையா????
குழந்தைகள் பெண்களை முஸ்லிம் ஆயுததாரிகள் கொல்லவில்லையா????

(“எது இனஅழிப்பு??????” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?

சுமந்திரன் மீது விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும்.
அவரை விமர்சிக்க வேண்டியவர்கள் வாக்களித்த மக்களும் ஈழ தமிழர்களுமே! புலத்திலும், உள்நாட்டிலும் அரசியல்வாதிகளாலும்
ஊடகங்களினாலும்மோசமான விமர்சனங்களை கடந்து, மக்கள் ஆதரவினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

(“இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?” தொடர்ந்து வாசிக்க…)

‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’

வி. சபேசன்

‘இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது’ என்ற கருத்தைத்தான் சுமந்திரன் பல முறை பேசியிருக்கிறார்.
ஆயினும் அவருடைய அரசியல் என்பது மேற்குலகின் சிந்தனையோடு ஒட்டிப் பயணிப்பதாக இருக்கிறது. பேரம் பேசும் வலு அற்ற நிலையில் தமிழர்கள் இருப்பதால், இதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர் கருதக் கூடும். ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலை அல்ல’ என்று கூறி விடுகிறார்.

(“‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’” தொடர்ந்து வாசிக்க…)

என் நண்பனே மீண்டும் எழுந்து வருவாயோ…..?

தங்கம்(ன்) என் பால்ய நண்பன். இன்றுவரை தொடரும் நட்பு. மெலிதாக பேசும் சுபாவம். என் நட்புடன் கூடவே எனது சமூக விடுதலைக் போராட்டத்திலும் என்னோடு பயணித்தவன். நான் புலம் பெயர்ந்து வேறு தேசங்களில் வாழ்ந்த போதும் தொடர்ந்து தேடித் தேடி நட்பை, தோழமையைப் பாராட்டியவன். புலம் பெயர் தேசத்தில் பண்டிகைகளை நான் மறந்திருந்போதும் வாழ்த்துக்கள் கூற என்னை தொடர்ந்து அழைத்த வண்ணம் இருந்தவன். கடைசியாக ஊருக்கு போன போதும் என் கரம் பற்றி ‘…எனக்குத் தெரியும் நீ சாமி கும்பிடுவது இல்லை….’ என்று கூறியபடி…. எனக்காக தன்னுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய கோவிலுக்கு அழைத்துச் சென்றவன். பிரசாதத்தை தந்து இதனை ஏற்பாயா என்று அன்புடன் என்னை ஏற்க வைத்தவன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போது உதவி கேட்டு பதிலுக்கு காணியை தருகின்றேன் என்று கூறியபோது என்னிடம் ஏச்சு வாங்கியவன். பின்பு என்னுடன் இணைந்த அவரின் நண்பர்களும், ஊரவர்களும் இணைந்து உதவியதில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆரோக்கியம் பெற்றவன். ஒவ்வொரு வருடமும் தனக்கு மீள்வாழ்வு தந்தவர்களை (பண உதவி செய்தவர்களை) நன்றியுடன் தவறாது கடித மூலமும், தொலைபேசி மூலமும் அழைத்து அளவளாவி நன்றி பகிர்ந்து மகிழ்ந்தவன். உதவி வேணுமா?… என்றால் தயங்கி ‘வேண்டாம்’ என்பதே இவன் பதில் இதனை மீறி உதவிகள் செய்த போதெல்லாம் மறு தினமே தொலைபேசியில் அழைத்து என்னை அன்புடன் நலன் விசாரித்து அன்பு பாராட்டியவன். பால்ய நட்புக் காலத்தில் தனது வீட்டிற்கு அழைத்து தேனீர், சாப்பாடு படைத்த அந்த நாட்களும், தனது வீட்டு முற்றத்தில் இருந்த திராட்சைப் பழங்களை ஆய்ந்து எங்களுடன் உண்டு மகிழ்ந்தவன். வேட்டி, சாரம் என்பதை மட்டும் அணியும் பழக்கம் இருந்தாலும் எனது பல்கலைக்கழக அறையிற்கு ‘விசிட்’ அடித்து அளவளாவிச் சென்றவன். கூடவே கிராமத்து இனிய உணவுகளை உடன் எடுத்து வந்து எனக்கு பரிமாறி மகிழ்நதவன். இந்த இழப்பு என்னை சற்றே நிலை குலையத்தான் செய்து விட்டது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உன்னைத் தேடி என் கால்கள் நிச்சயம் உன் வீடு வரும்… ஆனால் நீ அங்கில்லை என்பதால் என் கணகளில் நீர்த் துளிகளை நான் காணிக்கையாக உனக்கு தருவதை என்னால் தவிர்க்க முடியாது அல்லவா என் நண்பனே. உன் நினைவுகள் என்றும் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கும்.(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம்

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம். விஷணுபிரியாவும் எதையோ உணர்த்திவிட்டுத்தான் மறைந்துள்ளாரோ? ரஜினி திரணகமவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகின. விஷ்ணுப்பிரியா சொல்ல வந்தது, இந்த ஜனநாயக அரசின் அங்கங்கள் ஜனநாயக விரோத பாசிச சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகின்றன. சட்டம் தன் கடமையைச் செய்ய இயலாத நிலை. இந்திய மக்களே, நான் இந்த ஜனநாயக்க் குடியரசின் அடையாளம். எனது நிலையில் நமது சட்டம் சார் அரசு உள்ளது. என்பதை உணர்த்திய செயல். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன் தன் கொலையை தானே அறிவித்தார். அவரைக் காக்க வேண்டிய அதிகாரம் விஷ்ணுப்பிரியா. அவரும் தற்கொலை. இரண்டுமே திருச்செங்கோடு. இரண்டிற்குமே காரணம் சட்டம் அல்ல. சட்டத்தின் இயலாமை. இந்தியத் தாலிபான் ஆர்எஸ் எஸ் .நான் சொல்வதைப் புரிந்து கொள்ள மீண்டும் வாசிப்போம் முறிந்த பனை
(Kanniappan Elangovan)

ஏன் இனப்படுகொலை அல்ல?

(Jeyabalan Thambirajah)

எதிரி இராணுவமாகப் பார்க்கப்பட்டு யுத்த முரசு கொட்டி போர் தொடுத்த இலங்கை இராணுவம் எமது மக்களை படுகொலை செய்துள்ளது சித்திரவதை செய்துள்ளது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உலகம் முழுவதும் எதிரி இராணுவம் இவ்வாறு தான் உள்ளது. ஆனால் யாருக்காக துப்பாக்கி து}க்கினார்களோ அவர்களுக்கு எதிராகவே அந்த துப்பாக்கியைத் திருப்பியது படுமோசமான குற்றம். எதிரியின் குற்றங்களிலும் இது மோசமானது. அதனால் தான் இதனை வன்னிப் படுகொலையை இனப்படுகொலை என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

(“ஏன் இனப்படுகொலை அல்ல?” தொடர்ந்து வாசிக்க…)

சோதனைமேல் சோதனை சுரேசுக்கு போதுமடா சாமி !

(மாதவன் சஞ்சயன்)
யானைக்கு குழி பறித்து அதில் தானே வீழ்வது போல் கடந்த தேர்தலில் வீழ்ந்தார் சுரேஸ். கூட்டமைப்பின் வெற்றியை மேலதிக வெற்றியாக்க யாழ் கிறிஸ்த்தவர் ஒருவரும் களம் இறங்கினால் நலம் என எண்ணி மாகாணசபை உறுப்பினர் ஆணல்ட் பெயர் பிரேரிக்கப்பட அவரை ஈ பி ஆர் எல்ல எப் க்கு கொடுத்த 2 ஆசனங்களில் ஒன்றை கொடுத்து உள்வாங்கும்படி சுரேசிடம் கேட்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சுமந்திரன் மெதடிஸ்த கிறிஸ்தவர் என்பதால் ஆணல்டின் விருப்பு வாக்கில் சுமத்திரன் பலன் பெற்று விடுவார் என சுரேஸ் மறுத்துவிட்டார்.

(“சோதனைமேல் சோதனை சுரேசுக்கு போதுமடா சாமி !” தொடர்ந்து வாசிக்க…)

ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.

(“ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)