மூவினங்களும் வாழும் திருகோணமலையில்

(Freddy Abraham)

நேற்று காலை உட்துறைமுக வீதியில் ஒரு அலுவலாக செல்லும்பொழுது அங்கிருந்த உவர்மலை விளையாட்டு மைதானத்தில் பெரும் திரளான மக்கள் கூடியிருந்ததைக் காண முடிந்தது. என்னவென்று கொஞ்சம் எட்டிப் பார்த்தால் அது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாம்.
நேற்றுத்தான் நண்பர் ஒருவர் இலங்கையில் பணம் வழங்காமல் எந்தக் கட்சியாலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்கு ஆட்களைத் திரட்ட முடியாது என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் பண்ணாத குறையாக அடித்துக் கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 1)

(தோழர் ஜேம்ஸ்)

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்பே மக்கள் ஜேவிபி இன் அரசியலை அதிகம் திரும்பி பார்க்கத் தொடங்கி இருக்கின்றார்கள்.

அநுர அரசாங்கம் கடன் மேல் கடன் பெறுகிறதா?

(ச.சேகர்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில், அவர் பொறுப்பேற்று முதல் மூன்று வாரங்களினுள் 465.1 பில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்கள் வழங்கல்களினூடாக திரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரால், மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒருங்கிணைத்து ஓர் அறிக்கையாக உருவாக்குவதே சிறந்தது

பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்குகளை ​அள்ளிக்கொள்வதற்கான களச்சமர் சூடுபிடித்திருக்கும் நிலையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான கதையாடல்களும் பொதுவெளியில் மீண்டும், பேசப்படும் ​​பொருளாகிவிட்டது. இதனால் மீண்டும் உற்சாகமடைந்த சந்தர்ப்பவாதிகள் இந்த தலைப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

அனுசரணை அரசியலின் நிறுவனமயமாக்கல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் அனுசரணை அரசியல் தவிர்க்கவியலாததாகவும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும் அமைந்தமைக்கான காரணங்களிலொன்று அரச நிறுவனங்கள் அனுசரணை அரசியலுக்கு ஆதரவாக செயற்பட்டமையாகும்.

இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)

(தோழர் ஜேம்ஸ்)

(இந்தப் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் டாடா(TATA) நிறுவனத்தின் செயற்பாடுகளை துல்லியமாக எடுத்து இயம்புகின்றது)

1962 ம் ஆண்டு நடைபெற்ற சீன இந்திய யுத்தம் இவரின் வாழ்வை தனி மனிதனாக திருமணம் செய்யாது வாழ்வதற்கும் வழி கோலியது.
அதுவே அவரின் வாழ்வின் இறுதி வரை தொடரவும் வைத்து.

மௌனமாகவே நடக்கும் அடக்குமுறை

(லக்ஸ்மன்)

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ என்ற கேள்வியுடன், ‘எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’, ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாம்’, ‘மரணச் சான்றிதழ் வேண்டாம்’ போன்ற வேண்டுகோள்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

(ச.சேகர்)

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.

மார்பகங்கள் பற்றி பேசுவதற்கு தயங்கும் பெண்கள்

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகியுள்ளது. உலகில், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.  

’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்

“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.