அன்றொருநாள் சுதந்திரம் ஈந்து
ஆண்டுகள் அறுபத்தொன்பதும்
ஆகிற்று; ஆனாலும்…
ஓய்ந்ததுவோ வன் கொடுமை?
ஓங்கியதோ நம் நிலைமை?
(“எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!” தொடர்ந்து வாசிக்க…)
The Formula
Social Awakening
(“எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!” தொடர்ந்து வாசிக்க…)
அம்மணமாய்தான் நிற்க்கின்றோம்
நாங்கள் அம்மணமாய்தான் நிற்கின்றோம்
ஆடையணிந்தால் அழகாகிடுமாம்
தெருவெங்கும் சாலையெங்கும்
மூக்கை பிடித்து மூச்சடக்கி போகும் மனிதர்களே
அந்த நாற்றத்தில் நாள்தோறும்
விழுந்து சாகின்றோம்
“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” – கவிஞர் ஷெல்லி
(“ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !” தொடர்ந்து வாசிக்க…)
மூச்சுவிட முடியாமல்
ஒரு தேசம் திணறுகின்றது
காற்றெல்லாம் கந்தக வாசனை
வெட்டப்பட வேள்வியாடுகளாய்
மனிதம் சிதறிக்கிடக்கின்றதே
இன்னுமொரு முள்ளிவாய்க்கால்
இங்கேதான் அரங்கேற்றப்படுகிறது…!
பேரரசின் காவியம்!!!
வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது
யாழ்க் காற்று.
நின்
தமிழ் முழக்கில்
தைரியம் தந்தாய்.
‘யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிறாம்போட்டில்
சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழிதவறி அலாஸ்கா வந்தவிட்ட
ஒட்டகம்போல ஓஸ்லோவில்!
நம் குடும்பங்கள் என்ன?
காற்றில் விதிக் குரங்குகள்
கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’
(வ.ஐ.ச.ஜெயபாலன்)