தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவில் 10 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 137 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்த ஆய்வின் பிரகாரம், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஜுன் மாத தேயிலை ஏற்றுமதியினால் அதிகளவு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த ஏற்றுமதி பெறுமதியை ஜுன் மாதத்தில் பதிவு செய்திருந்தது.

ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம்…. சார்பட்டா பரம்பரை விமர்சனம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல பலதரமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிடின்…

(ப. பிறின்சியா டிக்சி)

ஒவ்வொருநாளும் நடைப்​பயிற்சியில் ஈடுபடும் வயதான ஒருவர், ஒருநாள் வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டால், குட்டிபோட்ட பூனையைப் போல, வீட்டுக்குள் அங்குமிங்கும் உலாவித்திரிவார்; எவ்விதமான ஆறுதலுக்கும் செவிசாய்க்கமாட்டார். அவ்வாறானவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்

எதிர்கால சந்ததியினர் மீது திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்

ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை நிகழத்தான் செய்யும். அதில் பெரும்பாலானவை இயற்கையாகவே இடம்பெறும்; வேண்டுமென்றே, திட்டமிட்டு ​செய்யப்படும் எதிர்வினைகள் பலவாகும். அவற்றைத் தடுத்து நிறுத்துவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. ஏனெனில், அவ்வாறான செயல்களில் பலவற்றுக்குப் பின்னால், அரசியல் ஒழிந்தே இருக்கிறது.

‘அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம்’ என்பதால் விவேகமே உசிதமாகும்

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலைமையே காணப்படுகின்றது என்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. 24 மணிநேரத்துக்குள் ஆகக் குறைந்தது 10 உயிர்களை வீதி விபத்துகள் காவுகொண்டுவிடுகின்றன.

இயற்கை வளம், பல்லுயிர் பாதுகாப்பு: மரம் நடுவது எப்படி – தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்.

மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.

உலக ஈரநிலங்கள் தினம் ( World Wetlands Day) 02.02.2021.

(Manoharan Sasikaran)

இன்று உலக ஈர நிலங்கள் தினம் ஈரநிலங்கள் மற்றும் நீர் ‘;Wetlands and Water” ‘என்னும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு உலக ஈரநிலதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

லெனின்

(Rathan Chandrasekar)

சோவியத் யூனியன் வீழ்ந்தபோது
பல இடங்களில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. நொறுக்கப்பட்டன.
அப்படி தஜிகிஸ்தானிலும் ஷாரிடஸ் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மாகாணத்தின் மிக உயரமான சிலை வீழ்த்தப்பட்டது.

கரோனாவைக் கச்சிதமாய்க் கட்டுப்படுத்திய கேரளா: நோம் சாம்ஸ்கி, அமர்த்தியா சென், சவுமியா சுவாமிநாதன் புகழாரம்

(கா.சு.வேலாயுதன்)

“கோவிட் -19 பெருந்தொற்றைக் கேரளம் கையாண்ட விதம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பிரபலத் தத்துவஞானியும் சமூக விமர்சகருமான நோம் சாம்ஸ்கி தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோரும் கேரளம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளனர்.

அஞ்சலி: ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்- ஆகாயத்தின் மறுபக்கம் இரண்டு கண்கள்!

(ஆர்.சி.ஜெயந்தன்)

சினிமாவைக் காட்சியின் கலையாக முன்னிறுத்தும் கலைச் சமூகம் ஒளிப்பதிவாளர்களுடையது. எல்லீஸ் ஆர்.டங்கன் காலம் தொடங்கி தமிழ் சினிமா தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், எல்லா ஒளிப்பதிவாளர்களும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை.