ஜனநாயக நாடொன்றில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலையுமாக இருக்குமாயின் அங்குதான், போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கும். அப்போது சட்டம், ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் களத்தில் இறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது.
Category: பொது விடயம்
General
வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)
பசுமையான பூமி! அது பேசுவதை கேட்போம்!” அதை பாதுகாப்போம்!
மரம்
மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார்.
அடவி. அருவி. ஆறு.
ஈழத்தின் தலைநகர் – சதுர்வேத மங்கலம்- கந்தளாய் குளம்
ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய் குளம் .வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை சந்தித்து வரும் பகுதி.கண்டிப்பாக ஈழத்தமிழர்கள் கந்தளாய் குளத்தை பற்றியும் அதன் பெருமையையும் தெரிந்து வைத்து இருப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் வாய்வழியாகவும் எழுத்து வடிவிலும் கொண்ட சேர்க்க வேண்டியது கடமையாகும்.
‘தை பிறக்கட்டும்’
கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.
கேட்டிருப்பாய் காற்றே…
(தென்னவன் வெற்றிச்செல்வன்)
மரபான உணவுப் பயிரான நெல் உற்பத்தியிலிருந்து காலனியத்துக்குக் கொள்ளை லாபம் தரும் பணப்பயிர் உற்பத்திக்கு மாறியதால், உலகெங்கும் உழைப்பு சக்தி தேவை உருவாக்கப்பட்டது. ரப்பர் தோட்டம், தேயிலைத் தோட்டம், காபித் தோட்டம், கரும்புத் தோட்டம் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல், சுரங்கத் தொழில், இருப்புப் பாதை அமைத்தல், காட்டை அழித்து வசிப்பிடமாக்குதல் என்று 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய காலனிய காலத்தில் தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தனர்.
மாதவிடாய்
பட்டை இறைப்பு…! பழமையே நமது முதுசம்…!!
(ஆசி கந்தராஜாவின் டயறிக் குறிப்பு)
யாழ்ப்பாணத்தில், 1960ம் ஆண்டுகள் வரை தோட்டத்தில் பட்டை இறைப்பு.
பல தோட்டங்களுக்கு நடுவில், ஒரு பொதுவான கிணறு இருக்கும். பட்டை இறைப்புக்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். விவசாயியான எனது பெரிஐயாவின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும், நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு, இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.