நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!

டாக்டர்: என்ன வருத்தம்?

நோயாளி 1: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.
டாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.

(“நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ராஜிவ் நினைவு நாள்.

‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று
ஏய்க்கிறவனுக்கு இரையானதைத் தவிர
பிழையேதுமில்லை தமிழனிடம்.

(“இன்று ராஜிவ் நினைவு நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

நந்திக் கடல் அருகே

இழந்து இழந்து

பின்வாங்கிப் பின்வாங்கி
இழுத்துவந்தீர்கள் இங்கு 
நந்திக் கடலருகே
நான்கு லட்சம் பேர் நாங்கள்

(“நந்திக் கடல் அருகே” தொடர்ந்து வாசிக்க…)

அன்னையர் தின வாழ்த்துகள்!

தியாகியாகாமல்,
தெய்வமாகாமல்,
தன் கடமையை மட்டும் சரியாக ஆற்றினால்
போதும் அன்னையர்களே!

(“அன்னையர் தின வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)

மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.

உருக்கொண்ட இவ்வுடலம் பெண் தந்தது.

ஊட்டியுண்ட முதலமுதம் பெண் தந்தது.

உணர்வுற்ற முதற்சூடு பெண் தந்தது.

உறங்கீஇய மடிதோளும் பெண் தந்தது.

(“மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.” தொடர்ந்து வாசிக்க…)

ஓ இலங்கை அரசாங்கமே!

இசுலாமியர் உங்களிடம்
எதைக் கேட்டுவிட்டார்கள் என்று
அடிக்கிறீர்கள்?

அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக்
கேட்டார்களா?
உங்களுக்கே வேலையில்லை
என்பதால் தானே
இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.

(“ஓ இலங்கை அரசாங்கமே!” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சி

நீலவானனும் பச்சைமாலனும்
பொற்காசுக்கு அடிமையாகி
பெற்றதாயைத்துகிலுரிந்து
பிறத்தியார்க்கு அம்மணங்காட்டி
துச்சாதனம் பண்ணுகிறார்;
வாளுடைய சிங்கமாய்
கொம்புடைய யானையாய்
செங்கொடிச் சிறுத்தைகளுடன்
பேருக்குக் கூட்டுச்சேர்ந்து
நல்லாட்சி நாமம்வைத்து
நடக்கிறது தர்பார்கூத்து.

(“நல்லாட்சி” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம்

(19.06.2017 தியாகிகள் தின அஞ்சலிக்கவிதை)
………………………………………………………………..
விடுதலைப் பறவை தோழர் பத்மநாபா
.
இந்த விடுதலைப் பறவையின்
இமைகள் மூடிவிட்டனவா -இல்லை
மூடப்பட்டன.

இதயமில்லா இராட்ஷதர்
பாசிச அசுரர்
இரத்த வெறியின்
குத்தகைக் காரர் -புலிகள்
புரிந்த கொடுமையில்
இமைத்தான் மூடின .

இந்த புரட்சிப் பறவையின்

இதயம்
என்றும் விழித்திருக்கும் -அதன்
சுதந்திரகீதம்
விடுதலை போரில்
கலந்தொலிக்கும் .

ஈழ மண் வாசனையிலும் -இனி
இப்பறவையின் நேசமும்
கலந்தேவீசும்
பறந்து விரிந்த இதன்
சிந்தனைச் சிறகு
பட்டாளி மக்களுக்கு
நிழலாகும்

இது நிஜமாகும் -நாம்
நிஜங்களை தூங்குபவர்கள்
நிதர்சனப் பார்வையில்
வளர்ந்தவர்கள்-எமை
வளர்த்த இப்பறவையின்
கீதத்தை மீண்டும் – மீண்டும்
மீட்டீயே தீருவோம் .

ஆம்.
இந்த பறவையின்
இமைகள் மூடவில்லை .

எம்
இதயங்களில்
விழித்திருக்கிறது -ஈழ
விடுதலையைக் காண
விழித்தே இருக்கிறது

.
தியாகிகளின் சமாதிளே எங்கள் ஆராதனைக்குரிய தேவாலயங்களாகும்
.
பத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்

ஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக.

இனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.

காரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,

நாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.

என் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.

உங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.

நாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்

ஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,

என் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,

உங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.

கும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,

காரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,

திருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,

எதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்

தெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,

தாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்

சக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி

ஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,

தலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த

தினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,

ஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,

நானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.

‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.

– ராம் –

பின்னென்ன உயர்குல வேளாளன்?

எலும்பை ஊடறுத்து

உயிரைத் தீண்டும்
ஊசிக்குளிர்

வாழ்வின் மிடறறுத்து
உயிரைத் துரத்தி
உறிஞ்சிக்குடிக்கும் வெஞ்சினம்

கொடுமைகளில் சிதைந்தது சுற்றம்
ஆன்மாவும் விறைக்கும்
கூதல் வெளியில்
தடுமாறிச் சுவாசிக்கும்
தட்டுக் கெட்டு மிஞ்சிய சுற்றம்

(“பின்னென்ன உயர்குல வேளாளன்?” தொடர்ந்து வாசிக்க…)