காஸாவில் தமது குழந்தைகளின்….

(Ravindran Pa)

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர்.

குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக…. வா வா வா… ஒளி படைத்த கண்ணினாய்…… வா வா வா…

(சாகரன்)

விவாதிப்பதும்…. கலந்துரையாடுவதும்…. பேச்சுக்களை நடாத்துவதும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதற்கு அவசியமானவைதான். இங்கு பிறக்கும் ‘கலகங்கள்’ தெளிவுகளை ஏற்படுத்தி அந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்புகளை எற்படுத்தும்.

பனை

(தரன் ஸ்ரீ)

எங்களுக்கு கிடைத்த சிறந்த வளம் பனை.பனையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இருந்து கிடைக்கும் நன்மை பெருமதி அருமை பற்றி மருத்துவர் ஒருவரின் பதிவில் இருந்து இந்த பதிவை பதிவு செய்கிறேன்…#பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.

யாழ்ப்பாண குளங்கள்

(Arun Ambalavanar)

CLUBHOUSE இன் முன்னோடி குளங்களே !

குளங்கள் மனோரதியமானவைகள். ரம்மியமானவைகள். மனித நாகரீகங்களின் ஊற்றுவாய்கள். குண்டிகழுவ(ஒரு கரை) குளிக்க (எதிர்க்கரை) என்றிருந்த குளம் வேறு. குடிக்கும் தண்ணீரள்ளும் குளம் அல்லது துரவு என்றிருந்தது வேறு.

மலரும் நினைவுகள்…

(ரா.அருண் கஸ்தூரி )


ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இந்தக் கிளுவை வேலி இல்லாத வீடுகளோ, வயல்,தோப்புகளோ இல்லாத இடம் இல்லை எனச் சொல்லலாம்.

அறியப்படாத யாழ்ப்பாணம்

//ஒரு பெயர் தெரியாத யாழ்ப்பாண முதியவரின் நாட்குறிப்பில் 1841 ஆண்டிலிருந்து 1933 ஆண்டு வரை நடந்த முக்கியமான சம்பவங்களை பதிவு செய்து இருந்தார்
பார்க்க கீழே//

இந்தியா

(TSounthar Sounthar)

சிந்து [ Sindhu ] – இந்து [ Indhu ] – இண்டிகா[ Indika ]- இந்துஸ்தான் [ Industan ] – இண்டியா[ India ]- இந்தியா:
இன்று நாம் அறிகின்ற இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் தமது சௌகரியங்களுக்காக செயற்கையாக ஒன்றுபடுத்திய ஒரு நாடாகும்.
இனம், மொழி, மத நம்பிக்கைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல்வகைப் பிரிவுகளைக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஒரு தொகுப்பாக அவர்கள் உருவாக்கினார்கள்.

பாலஸ்தீனம்

“எனது நாட்டில் ஒரு சாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை
ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள், எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்”.

  • மஹ்மூத் த‌ர்வீஷ்
    தமிழில் எம். ஏ. நுஃமான்
    பலஸ்தீனக் கவிதைகள்
    மூன்றாவது மனிதன் வெளியீட்டகம்

மட்டக்களப்பு நண்டு

மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதிதில், சாப்பாட்டு நேரத்தில் வந்த ஒரு சீனியர், ராகிங் என்ற பெயரில் ஒரு கவிதை சொல்லு என்றார். அப்போது நண்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.