பிரிட்டனின் தடை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் விஜித

பிரிட்டனின் தடை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம்  வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் வைத்து, புதன்கிழமை (26) தெரிவித்தார்.

JVP தலைவர் ரோஹன விஜேவீர எவ்வாறு கொல்லப்பட்டார்?

(Kiri Varma0

சுடப்பட்டு அரை உயிரில் இருந்தவரை தீயில் போட்டு எரித்த ராணுவ அதிகாரிகள்

கண்டி, உலப்பனவில் உள்ள ஒரு வீட்டில், தனது குடும்பத்தினருடன் நிமல் கீர்த்திசிறி அத்தநாயக்க என்ற பெயருடன், வாழ்ந்து கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சவேந்திர, கருணா உள்ளிட்ட நால்வருக்கு தடை

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை வழங்கிய எகிப்து

போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியுள்ளது. எகிப்து தனது பரிந்துரையில், “ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்” குறிப்படப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Gold Card Visa: ஒரே நாளில் 1,000 அட்டைகள் விற்பனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த கோல்ட் கார்ட் விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்ட் கார்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்ட் கார்ட் வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

பிறக்கும் போதே அடையாள எண்

தேசிய பிறப்புச் சான்றிதழ் செயல்முறை 15 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் (ICTTA)  நிறுவனம் மற்றும் பதிவாளர் நாயகத் துறை, நபர்கள் பதிவுத் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என அரச பரிபாலனம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அதரிவித்துள்ளார்.

குற்றங்களை தடுக்க 500 சிறப்பு அதிரடிப்படை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர்களின் குடியிருப்புகள் தொடர்பான அறிக்கை வெளியானது

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவுக்கு தப்ப முயன்ற 11 பேர் கைது

மோசடியான கனேடிய விசாகளைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.