வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 34 ஆவது வருட நினைவு

வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஒன்றரை வருடத்திற்குள் நிறைவேற்றப்படும் ; ஜனாதிபதி உறுதி

நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். 

மின்சாரக் கட்டணம் கணிசமான அளவு குறையும் – ஜனாதிபதி

அடுத்த சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அடுத்த 3 வருடங்களில் முழு நாடும் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வணிகர் சங்க உறுப்பினர்களும் இதற்கு தங்கள் உடன்பாட்டை தெரிவித்துள்ளனர்

O/L பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

’பொருளாதார சுயாதிகாரத்தை ஏற்படுத்துவதே நோக்கம்’

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும்புரவில் அறிமுகம்

நுவரெலியா மாவட்டம் ,மடக்கும்புர தொழிற்சாலையில் Solidaridad நிறுவனத்தின் அனுசரணையில்  காலநிலையை முன்கூட்டியே எதிர்வுகூறும் கருவியொன்று இந்தியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டு மடக்கும்புர பகுதியில்  அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீதும் குறிப்பிட்ட சில இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை முடித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. மேலும், ஈரானின் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஈரானும் தங்கள் வான்வெளி பாதையை மூடியுள்ளன.

இலங்கையில் McDonald’sஇன் செயற்பாடுகள் தடைப்படும்?

McDonald’s Corporation மற்றும் அதன் இலங்கை உரிமைப் பங்காளியான International Restaurant Systems (Pvt.) Ltd ஆகியன பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்ட ரீதியான தீர்வைத் தொடர்ந்து தமது வர்த்தக உறவை முறித்துக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள  கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.