O/L பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

’பொருளாதார சுயாதிகாரத்தை ஏற்படுத்துவதே நோக்கம்’

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும்புரவில் அறிமுகம்

நுவரெலியா மாவட்டம் ,மடக்கும்புர தொழிற்சாலையில் Solidaridad நிறுவனத்தின் அனுசரணையில்  காலநிலையை முன்கூட்டியே எதிர்வுகூறும் கருவியொன்று இந்தியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டு மடக்கும்புர பகுதியில்  அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீதும் குறிப்பிட்ட சில இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை முடித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. மேலும், ஈரானின் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஈரானும் தங்கள் வான்வெளி பாதையை மூடியுள்ளன.

இலங்கையில் McDonald’sஇன் செயற்பாடுகள் தடைப்படும்?

McDonald’s Corporation மற்றும் அதன் இலங்கை உரிமைப் பங்காளியான International Restaurant Systems (Pvt.) Ltd ஆகியன பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்ட ரீதியான தீர்வைத் தொடர்ந்து தமது வர்த்தக உறவை முறித்துக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள  கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுதேர்தல் திகதியில் மாற்றம்?

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரிசி விலை சிக்கலைத் தீர்க்க பணிப்பு

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வௌ்ளிக்கிழமை (25)  பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இன்று (25) காலை, ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.