சிம்புவை கைது செய்ய தனிப்படைகள்

‘பீப் பாடல்’தொடர்பான புகாரில் நடிகர் சிம்புவை கைது செய்ய போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

(“சிம்புவை கைது செய்ய தனிப்படைகள்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று…. வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்…

1968-ம் வருடம், டிசம்பர் 25 – தமிழக வரலாற்றில் கருப்பு நாள்.கீழத்தஞ்சையில், (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில், தாழ்த்தப்பட்ட (தலித்) சமுகத்தை
சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை, ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர்,
இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள், 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற, ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது. “என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ, ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

(நன்றி: வினவு.)

பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது

சுஹாசினியும் ராதிகாவும் நகமும் சதை போல. ஒருவர் குரல் கொடுத்தால் மற்றவர் அரங்கத்தில் பாய்ந்து விடுவார்.இது அவர்கள் முன்னணி நாயகிகளாக இருந்த போதிலிருந்தே நடப்பது. முன்பு அசிங்கமான பாடல்களை எதிர்க்காததினால் பீப் பாடலையும் எதிர்க்கக் கூடாது என்று சொல்வது அதுவும் பெண்கள் சொல்வது என்ன நியாயம்? இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியுள்ளார்கள். அவர்கள் அப்படி எழுதியிருப்பதால், பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது. திரையுலகின் பாடல்கள் சீர் குலைந்து வருவதை ஜீரணிக்க முடியாத கவி. கா. மு. ஷெரீப் என்ன செய்தார் தெரியுமா? விரசமான, மோசமானப் பாடல்கள் எழுதியவர்களை திட்டவில்லை. விமர்சிக்கவில்லை. “இனி திரைப் படப் பாடல்கள் எழுதமாட்டேன்” என்று பாடல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். பீப் பாடல் பற்றி விமர்சனம் எழுந்த போது, ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதற்கு விளக்கம் சிம்பு தரப்பு தந்ததே தவிர மன்னிப்பு கேட்கவில்லை. தவிர, சிம்பு படஉலகில், படத் தயாரிப்பில் செய்த அலட்டல், அட்டூழியம், அடாவடித்தனம் எல்லாம் பத்திரிகைகள் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. எல்லாம் சேர்ந்து கொண்டது. பொங்கி எழுந்து விட்டார்கள். “எவன்டி உன்னை பெத்தான்.. பெத்தான் ” பாடலுக்கே எல்லாரும் பொங்கியிருக்க வேண்டும்.

(Bismi Parinaaman)

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக வழி நடத்தும் பொருட்டும் அதனை மக்கள் மயப்படுத்தும் பொருட்டும் சிவில் சமூகக் குழுக்கள், அரசியற் கட்சிகள், தொழிற் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கடந்த 19 டிசம்பர் 2015 அன்று உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை தமிழ் சிவில் சமூக அமையம் வரவேற்பதோடு இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் பங்கெடுப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

(“தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

சூளைமேடு அழைப்பாணை பொய்யான செய்தி – டக்ளஸ்

இந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாணவர்களுக்கு ஹெரோய்ன் விற்ற நால்வர் கைது

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே வைத்து, மாணவர்களுக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்களை விற்பனைச் செய்துகொண்டிருந்தனர் என்ற குற்றஞ்சாட்டில் நால்வரை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நால்வரிடமிருந்தும் ஹேரோய்ன் பக்கற்றுகள் நான்கை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

(“இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்’

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஜோசப் பரராசசிங்கம் கொலை ஏன்? கருணா விளக்கம் !!!

மட்டக்களப்பு போராளிகளை உலகம் முழுக்க சென்று விமர்சனம் செய்ததின் விளைவுதான் பரராசசிங்கம் கொலை. யோசப் பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள். ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொன்றார்கள். அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது. இதை போல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்ஸ்லி ராசநாயகத்தை புலிகள் கொன்றார்கள். இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப் போகின்றீர்கள்?

(“ஜோசப் பரராசசிங்கம் கொலை ஏன்? கருணா விளக்கம் !!!” தொடர்ந்து வாசிக்க…)