கடவுள் காப்பாற்ற மாட்டார்! -நாசர்

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது.
(இளைஞர்களின் பலத்த கைதட்டல் ஆரவாரத்துக்கிடயே கறுப்புடை அணிந்து நடிகர் நாசர் அதிரடி)

தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 19.12.15 அன்று திருமணப்பதிவு முகாம் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் உத்தரவுக்கிணங்க பதிவுத்துறையினர் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தினர் இணைந்து நடாத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களில் இந்த திருமணப்பதிவு முகாம் நடைபெற்றது.

(“தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்” தொடர்ந்து வாசிக்க…)

உதயமானது .. ‘தமிழ் மக்கள் பேரவை’

 

தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

(“உதயமானது .. ‘தமிழ் மக்கள் பேரவை’” தொடர்ந்து வாசிக்க…)

கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது – சிவநேசதுரை சந்திரகாந்தன்

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினாருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்(16)ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

(“கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது – சிவநேசதுரை சந்திரகாந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் ரெலோவுக்கும், ஈ.பி.டி.பிக்கும் இடையே மோதல்…..!

டக்ளஸ் தேவானந்தா வட மாகாண சபை குறித்து தெரிவித்த கருத்தினால் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது. வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம் இன்றையதினம் இடம்பெற்றது. மீன்பிடி அமைச்சின் மீதான இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் திரிகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு மாகாண சபை ஊழல் புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

(“வடமாகாண சபையில் ரெலோவுக்கும், ஈ.பி.டி.பிக்கும் இடையே மோதல்…..!” தொடர்ந்து வாசிக்க…)

அழுத்தம் கொடுத்த நிறைவேற்று அதிகார யுகத்தை மாற்றியமைத்துள்ளோம் – ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கத்திற்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்த யுகத்தை மாற்றியமைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலுக்கு நீதித்துறை பணியாததால் பிரதம நீதியரசரையே 48 மணித்தியாலத்தில் பதவியிலிருந்து தூக்கியெறிந்த யுகம் மாற்றப்பட்டு அனைத்துத் துறைகளிலும் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

(“அழுத்தம் கொடுத்த நிறைவேற்று அதிகார யுகத்தை மாற்றியமைத்துள்ளோம் – ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

குமார் குணரத்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர் கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

‘கொழும்பிலிருந்து ஓநாய் ஒன்று ஊளையிடுகின்றது’

வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று நேற்று வியாழக்கிழமை (17) ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல, ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அதிக நிதி கோரும் நடவடிக்கையில், வடமாகாண சபை செயற்படுகின்றது’ என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார். ‘வடக்கு கிழக்கில் இராணுவம் வீடுகளை அழிக்கவில்லையென்றால் பேய்களா வீடுகளை அழித்தன?’ என உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். கிளாலி ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தை, அங்கேயே மீள ஆரம்பிக்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதனை சாவகச்சேரிக்கு மாற்ற வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் முயற்சிக்கின்றார் என சுகாதார அமைச்சர் ப.சத்தியசீலன் கூறினார்.

புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை வறிய மக்களுக்கு வழங்கவேண்டும்

-மாகாணசபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம்
தீவகத்தில் எத்தனையோ பெறுமதி மிக்க வீடுகள் காணிகள் அழிவுறும் நிலையில் உள்ளது.பராமரிப்பின்றி காணப்படுகிறது.புலம்பெயர்ந்து சென்றவர்களின் காணிகளும் இப்படி தேடுவாரற்று கிடக்கிறது.இதனை வடக்குமாகாணசபை பெற்று தீவகத்தைச்சேர்ந்த வெளியிடங்களில் வாழும் மக்களுக்கும் மற்றும் ஏனைய குடாநாட்டு மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் இதனை வடமாகாணசபை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இந்தியா – இலங்கை இடையே கடல் பாலம்

தெற்காசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ. 24,000 கோடி மதிப்பில் கடல் பாலம், சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியா வந்தபோது, அவருடன் இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிப்பதற்கு “ஆசிய வளர்ச்சி வங்கி’ தயாராக உள்ளது. இதுதவிர, வங்கதேசம், பூட்டான், நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளிடையே தடையற்ற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.