நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு: அறிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும் -எதிர்க்கட்சித் தலைவர் தவராசா

வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது தெளிவாக வெளியிடப்படவேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற போது, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

(“நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு: அறிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும் -எதிர்க்கட்சித் தலைவர் தவராசா” தொடர்ந்து வாசிக்க…)

மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்

யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பான விசாரணை, கோப்பாய் பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

(“மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா, கியூபாவுக்கு இடையில் விமான சேவை…?

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ச்சியான வர்த்தக விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு தவிர்க்க முடியாததாகும் என்று பெயரை வெளியிடாத அமெரிக்க மற்றும் கியூப அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும் கியூப அரசுக்கும் அமெரிக்க விமான சேவைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என உறுதி செய்யப்படவில்லை.அமெரிக்கா 54 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஓகஸ்டில் கியூபாவுடன் தூதரக உறவை ஆரம்பித்தது. எனினும் கியூபா மற்றும் அமெரிக்கா உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக கியூபா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா அகற்றிக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. விமான சேவை தொடர்பில் உத்தியோகபூர்வ உடன்பாடொன்று எட்டப்படும் சூழலில் அமெரிக்காவில் இருந்து நாளாந்தம் கியூபாவுக்கு ஒரு டஜன் விமானங்கள் வருகைதர வாய்ப்பு உள்ளது.

த.தே.கூ உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாகினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதற் தடவையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு மாட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில்,

யாழ்ப்பாண மாவட்டம் – மாவை சேனாதிராஜா,
வவுனியா மாவட்டம் – செல்வம் அடைக்கலநாதன்,
கிளிநொச்சி மாவட்டம் – எஸ். ஸ்ரீதரன்
மன்னார் மாவட்டம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு மாவட்டம் – டாக்டர் எஸ். சிவமோகன்
மட்டக்களப்பு மாவட்டம் – ஜி. ஸ்ரீநேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

(“த.தே.கூ உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாகினர்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுப்பொறுப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும்போது இன,மத,குல பேதமின்றி சகலருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

(“வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுப்பொறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை!

காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, தொழில் துறையிலும் வளர்ந்து வருகிறது. இதனால், அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங் உள்பட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக அதிகமான புகை வெளியேறுகிறது. மேலும், வீடுகளில் குளிர் காய்வதற்காக நிலக்கரி எரிப்பதிதாலும் அதிக புகை வெளியேறுகிறது. இதனால், அங்கு காற்றில் மாசு பெருகி உள்ளது.

(“மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை!” தொடர்ந்து வாசிக்க…)

ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்!

அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்… என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை சுடுவதற்கு துரத்தினார்கள் என அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசிமலர் என்ற தாய் கதறியழுது சாட்சியமளித்துள்ளார். காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது.

(“ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் மீதான கொலை வழக்கு ஜனவரியில் விசாரணை ஆரம்பம்

இலங்கை அதிபராக இருந்த ராஜபக் ஷேவின் அமைச்சரவையில், தொழில் துறை அமைச்சராக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.இவர், 1986ம் ஆண்டில், சென்னை, சூளைமேட்டில் தங்கியிருந்த போது, அந்த பகுதியில் தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பலியானார். டக்ளஸ் தேவானந்தா உட்பட, ஒன்பது பேர் மீது சூளைமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், டக்ளஸ் தேவானந்தா ஜாமின் பெற்று, இலங்கை சென்று விட்டார். மற்றவர்கள் தலைமறைவாகினர். இவ்வழக்கு, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டக்ளஸ் தேவானந்தா பல முறை ஆஜராகவில்லை. இதையடுத்து, ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது.

(“டக்ளஸ் மீதான கொலை வழக்கு ஜனவரியில் விசாரணை ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

மின்னல் ரங்காவின் கள்ள தொடர்புகள் அம்பலம்

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் கை கட்டி, வாய் பொத்தி நின்றார்களே ஒழிய தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுத்து இருக்கவில்லை என்று சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மஹிந்தவின் தமிழ் அமைச்சர்கள் உருப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை என்று இவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார். ஆனால் மற்றவர்களை விமர்சனம் செய்கின்றமைக்கு முன்பாக ஸ்ரீரங்கா சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

(“மின்னல் ரங்காவின் கள்ள தொடர்புகள் அம்பலம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மனச்சாட்சியோடு பேச்சு நடத்த வேண்டும்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மனச்சாட்சியோடு பேச்சு நடத்தினால் மாத்திரமே வடக்கில் மீள்குடியமர்த்துவதிலுள்ள பிரதான எதிரிகளை முறியடிக்க முடியுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாடுகளுடன் பேச்சு நடத்துவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

(“தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மனச்சாட்சியோடு பேச்சு நடத்த வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)