முதலமைச்சர் சி.வியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சம்பந்தன் முயற்சி: சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

(“முதலமைச்சர் சி.வியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சம்பந்தன் முயற்சி: சுரேஸ்” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை மாவட்டம் திருவாதவூர்,அனையூர் முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர்.”திருவாதவூர் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் மாணிக்கவாசகர்”;.அவர் பிறந்த திருவாதவூரில் அமைந்துள்ள முகாமில் 539 குடும்பங்கள் வரை தங்கியிருக்கின்றனர்.இவர்கள் அன்றாடம் உழைத்து கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் முகாமில் உள்ள மக்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,57,000 வரையிலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினர். இந்தப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்,முகாhம் மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் மதுரையில் உள்ள ஆனையூர் முகாம் மக்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.இந்த முகாமில் 485 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்களும் கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள்.இந்த நிலையிலும் இவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,02,160 வரையிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

ஆனையூர் முகாமில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை முகாம் தலைவர் அன்ரனி,ஒருங்கிணைப்புக்குழு றீகன்,பாரதி மற்றும் கல்லூரி மாணவர்கள் சங்கீதன்,திலிப்,பிரகா}ஸ் இவர்களுடன் மணிகண்டன் எனபவரும் கலந்து கொண்டார்.
நிவாரணப் பொருட்கள் 9.12.15 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு நிலையத்தில,; தாசில்தார் புஸ்பா,உதவி தாசில்தார் கே.சுரேஸ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கஸ்டமான வாழ்க்கை நடத்திவரும் அகதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியதுகண்டு நிவாரணப் பொருட்கள் சேமிப்பு நிலைய ஊழியகள்; அதிகாரிகள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

வன்னியிலும் வெள்ளம்…….?

 

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் வன்னிப்பகுதியில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும்பாதை முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது. நாங்கள் இப்பொழுது வளவுகளுக்குள்ளால்தான் போய் வருகிறோம். வண்டி, வாகனங்கள் எதுவும் வர முடியாது. இப்படித்தான் பெரும்பாலான உள்வீதிகள் சேதமாகியிருக்கின்றன. பலவும் சேறாகி விட்டன.

(“வன்னியிலும் வெள்ளம்…….?” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை உச்சப்பட்டி முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

தமிழகத்தின் தெற்கே, மதுரை திருமங்கலத்துக்கு அண்மையில் இருக்கும் அகதிகள் முகாம் உச்சப்பட்டி.இந்த முகாமில் அண்ணளவாக 500 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்கள் இலங்கையில் எற்பட்ட உள்ளாட்டுப் போர் காரணமாக பல கட்டங்களாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களாகும்.
தமிழகத்தில் எற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கபட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்காக இந்த முகாமில் உள்ள தன்னார்வலர்கள் வழிகாட்டுதலில் முகாம் மக்களின் ஒத்துழைப்புடன், சேகரிக்கபட்ட அத்தியாவசியப் பொருட்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு அலுவலகத்தில் 7.12.15 அன்று முகாம் மக்கள் சார்பாக முகாமில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கினர். முகாம் மக்கள் இந்த பொருட்கள் சேகரிப்பிகன் போது ஆர்வத்துடன் பொருட்களை வழங்கினர்.எங்களை ஆதரித்த தமிழக மக்களின் இன்னல்களின் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

O Canada…..What a cabinet:

Minister of Health is a doctor.
Minister of Transport is an astronaut.
Minister of National Defense is a Sikh Veteran.
Minister of Youth is under the age of 45.
Minister of Agriculture and Agri-Food is a former farmer.
Minister of Public Safety and Emergency Preparedness was a Scout.
Minister of Innovation, Science and Economic Development was a financial analyst.
Minister of Finance is a successful businessman.
Minister of Justice was a crown prosecutor and is a First Nations leader.
Minister of Sport, and Persons with Disabilities is a visually impaired Paralympian.
Minister of Fisheries and Oceans, and Canadian Coastguard is Inuit.
Minister of Science is a medical geographer with a PhD.
New titles include
Minister of Immigration, Citizenship and Refugees was an Immigration critic.
There are scientists in the cabinet, and it is made up of 50% women.

பட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு

2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), கூட்டமைப்பின் முடிவை மாறி, வரவு – செலவுத்திட்டத்தில் வாக்களிக்காதென அறிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில், அதற்கு ஆதரவளித்து வாக்களிப்பதற்குக் கூட்டமைப்புத் தீர்மானித்ததோடு, டெலோ உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவை வழங்கியிருந்தனர்.

(“பட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மகேஸ்வரன் கொலையாளி யார்?

தனது முன்னாள் கணவர் மகேஸ்வரனைக் கொலை செய்த சூத்திரதாரி நாடாளுமன்றத்தில் இருப்பதாக திருமதி விஜயகலா ஜெயக்கொடி கூறியிருக்கிறார். மகேஸ்வரன் கொலையாளி பிடிபட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார.; இந்த நிலையில் திருமதி ஜெயக்கொடி இப்படி கூறியிருக்கிறார். மகேஸ்வரன் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் நடந்துகொள்ளாமல், புலிகளை புறக்கணித்ததால் அவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றுதான் உறுதியாகி இருக்கிறது. மகேஸ்வரனைச் சுட்டுக் கொன்ற நபர் உடனடியாகவே பிடிபட்டும் உள்ளார். மகேஸ்வரனை புலிகள் கொன்றதால் தமக்கு துரோகிப் பட்டம் வந்துவிடுமென்று அஞ்சியே திருமதி ஜெயக்கொடி இதனை மறைத்து, வேறு நபர்கள் மீது குற்றஞ்சாட்டி வருவதாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட மகேஸ்வரனின் கொலையாளியின் கைத் தொலைப்பேசிக்கு இறுதியாக அழைப்பு கொடுத்தவர் மகேஸ்வரன் குடும்பம் சார்ந்த ஒரு பெண் என்று தெரியவந்துள்ளதாக அப்போது ஒரு செய்தி இருந்தது. யார் இந்தப் பெண் என்பது திருமதி ஜெயக்கொடி அறிவார். எனவே, இதனை வைத்தும் அந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கலாம்தானே?

வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் புகுவதற்கு முன் கவனத்தில் கொள்ளவும்

1. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.
2.நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
3. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
4. அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள்.
6. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் போயிருக்கும்.
7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
8. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய இறைவனுக்கும், அவன் அருளால் உங்களுக்கு உதவிகள் புரிந்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.
9. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.

உடனடித் தேவை – வெப்பம்!

நேற்றிரவு முதல் சென்னையில் மீண்டும் மழை தீவிரமடைந்துகொண்டுள்ளது. ஏற்கெனவே பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நன்றாக கவனியுங்கள், இந்த வெள்ளம் வடியும் தன்மை கொண்டதல்ல. மேட்டிலிருக்கும் நீர்தான் வடியும். சென்னையின் பல்லாயிரம் குடியிருப்புகள் பள்ளங்களில், நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை. பள்ளத்தில் இருக்கும் நீர் வடியாது, வடியாது!

(“உடனடித் தேவை – வெப்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் – வடக்கு முதல்வர்

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் – வடக்கு முதல்வர்” தொடர்ந்து வாசிக்க…)