வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக, பொதுமக்களால் பல குற்றச்சாட்டுகள், முதலமைச்சரிடம் ஆதாரங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொது நூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்; ஐந்தாவது கூட்டத் தொடரின் பின்னர், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

(“வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி” தொடர்ந்து வாசிக்க…)

இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி

வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

(“இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)

சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.

இதை எல்லாம் அரசியல் அரங்குக்குக் கொண்டு வந்தவர்களும் பைத்தியக்காரர்கள் தான்.  தமிழர் விடுதலை போராட்டம் தொடர்பில்இதவறான எண்ணப்பாட்டில் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாகஇ விடுதலைப் போராட்டம் குறித்து சிங்களவர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தால் அவர்கள் மீது போர் தொடுக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

(“சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்

எவ்விதமான விசாரணைகளும் இன்றி, சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று திங்கட்கிழமை(08), அடையாள உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கையளிக்குமாறு கடிதமொன்றையும் கடந்த சனிக்கிழமையன்று அனுப்பிவைத்துள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

‘நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள்’

யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சகல தரப்பையும் உள்ளடக்கிய வகையில் வியாழக்கிழமை (04) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக உள்ளக மாணவர்களுக்கான சகல விதமான பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளபடியால், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வருகை தருமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர எல்லா மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

(“‘நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை பெண்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார்.

(“நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை பெண்!” தொடர்ந்து வாசிக்க…)

குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..

காஷ்மீர் மட்டுமல்ல இன்று குஜராத்தும் பற்றி எரிகிறது. வரலாறு காணாத தலித் எழுச்சி இன்று அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேலைக் காவு கொண்டுள்ளது. அவரது பதவி விலகலுக்குப் பின் குஜராத்துக்குப் பொறுப்பேற்க பாஜகவில் எல்லோருக்கும் தயக்கம். அமித் ஷா பெயர் சொல்லப்பட்டவுடன் அவரும் தயாராக இல்லை என உடன் செய்திகள் வெளியாகின்றன. ஒரு பக்கம் படேல்களின் போராட்டம். படேல்கள் அங்கு 17 சதம்; தலித்கள் 7 சதம். காலம் காலமாக படேல்கள் பாஜகவின் ஓட்டு வங்கியாக இருந்தவர்கள். இன்று அவர்களும் பகையாய்ப் போன சூழல்.

(“குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..” தொடர்ந்து வாசிக்க…)

நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! – வடக்கு முதலமைச்சர்

(Mithunan )
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று  கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், விசேடதேவைகள் உள்ளவர்களாக இருக்கலாம், இளம் விதவைகளாக இருக்கலாம், குடும்பப் பாரத்தைத் தனியே சுமக்கும் பெண்களாக இருக்கலாம், வயோதிபர்களாக இருக்கலாம், வேறு பல விதங்களில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் யாவரையும் அணைத்துச் சென்று மனதில் அமைதியையும் நிறைவையும் ஏற்படுத்தவே சமூகசேவைகள் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

(“நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! – வடக்கு முதலமைச்சர்” தொடர்ந்து வாசிக்க…)

275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து

இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை, விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது.

சென்னையில் இலங்கை தமிழ் அகதிகள் அமைதி பேரணி

 

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.srilankan-refugee-protest

சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலர் ஞானராஜ்,

‘முகாம்களுக்கு வெளியில் உள்ள அகதிகள் நாடு திரும்பும் போது, இந்தியாவில் தங்கியிருந்த காலம் தொடக்கம் ஆண்டு ஒன்றுக்கு 3600 ரூபாவைத் தண்டப்பணமாகவும், நுழைவிசைவுக் கட்டணமாக 13,500 ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் இதற்காக இலட்சக்கணக்கான ரூபாவைச் செலுத்த வேண்டியிருக்கும்.

நாடு திரும்புவதற்கு விரும்பும் பலர், தண்டப்பணம் செலுத்த வசதியில்லாததால், தமிழ்நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.