36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை செவ்வாய்க்கிழமை 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(“36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும் இந்த அட்டவணைக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்காத நிலையில், அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தவிடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் குறித்த சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல், தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

NRTSL organised a Landmark meeting in London

NRTSL(NEWSLETTER)                                                                                                   25 June 2016

 

Sri Lanka Deputy Foreign Minister Hon. Dr Harsh de Silva and Mrs Rosie Senanayake, Deputy Chief of Staff, Prime Minister’s Office met a wide gathering of Tamils at a meeting organised by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL)at Sangam Hall, Burnt Oak, Edgware, Middx., on the evening of 18 June 2016.

(“NRTSL organised a Landmark meeting in London” தொடர்ந்து வாசிக்க…)

நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.

(“நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி” தொடர்ந்து வாசிக்க…)

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(“பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !” தொடர்ந்து வாசிக்க…)

மகாபொல இல்லையா.. பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மகாபொல புலமை பரிசில் இவ்வருடம் தமக்கு கிடைக்கவில்லையென கூறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தமக்கு இந்த வருடம் மகாபொல புலமைபரிசில் கிடைக்காது என பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம், தெரிவித்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மகாபொல புலமைபரிசிலாக 5,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றதையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.

பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை.

பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை. பெரும‌ள‌வு க‌றுப்புப் ப‌ண‌ம் கைப்ப‌ற்ற‌ப் ப‌ட்ட‌து. 130000 யூரோ ரொக்க‌ப் ப‌ண‌மாக‌வும், 850000 யூரோ வ‌ங்கிக் க‌ண‌க்குக‌ளில் இருந்தும் ப‌றிமுத‌ல் செய்ய‌ப் ப‌ட்ட‌து. இது தொட‌ர்பாக‌ ஒன்ப‌து பேர் கைது செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவர்க‌ளில் லைக்காவின் பிரான்ஸ் நிர்வாகி Alain Jochimek உம் ஒருவ‌ர் என‌த் தெரிய‌ வருகின்ற‌து. இவ‌ர் ஒரு யூத‌ர். பிரான்ஸில் சியோனிச‌ அமைப்பொன்றை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்.

(“பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..!

 

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 08.00 மணிவரை நடைபெறவுள்ளது. 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகளாக காலை 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து…..
**விநோதவுடைப் போட்டி
**பொது அறிவுப் போட்டி
**பாட்டுக்கு அபிநய ஆட்டம்
**நடன நாட்டிய நிகழ்வுகள்
**இன்னிசை நிகழ்வுகள்
**பரிசளிப்பு நிகழ்வு
**தலைமை உரை
**பிரதம விருந்தினர்கள் உரை
**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

“வீரமக்கள் தின” விழா நடைபெறும் இடம்:

வரசித்தி மஹால்.
Hüttenwiesen Strasse – 6
8108 Dallikon Zurich .

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “வீரமக்கள் தினம்” வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

— தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) – சுவிஸ் கிளை —

*******************************************

“தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள்”..!!

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள் soodring -34B, 81234 Adlishwil எனும் மண்டபத்தில் 03.07.2016 அன்றையதினம் காலை 08.00 மணியளவில் இடம்பெறஉள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதுவரை பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை எமக்கு அனுப்பி வைக்காதவர்கள் கூட (பலருக்கும் விண்ணப்பப் படிவம், உரிய நேரத்தில் கிடைக்காதபடியால்) பரீட்சை நடைபெறும் 03.07.2016 காலை 07.30க்கு நேரில் வந்து, தம்மைப் பதிவு செய்து பரீட்சையில் கலந்து கொள்ளலாம்.

10.07.2016 இல் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெறும் “வீரமக்கள் தின” நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

“எதிர்காலம் வளமாக, எழுவோம் பலமாக”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

— தமிழீழ மக்கள் கல்விக் கழகம் சுவிஸ்கிளை —

சுவிசில் உணர்வுபூர்வமாக தியாகிகள்தினம் நினைவுகூரப்பட்டது.

 

சுவிசில்  Aarau   மாநிலத்திலுள்ள Frick என்னுமிடத்தில்
19.06.2016 அன்று மாலை தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தோழர் நிமல்ராஜ் இன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. போராட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் கட்சியுடன் இணைந்து பணியாற்றிய தோழர்கள் மற்றும் EPDP கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தியாகிகளுக்கான அஞ்சலியாக யாழ்மாவட்டத்தில் மக்கள் விடுதலைப்படையில் முக்கியபங்காற்றி மரணமடைந்த தோழர் வோல்டன் குமார் அவர்களின் சகோதரர் மில்ரனும் அவரது துனைவியாரும் குத்துவிளக்கேற்றி அஞ்சலிதெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து தோழர் நிவாஸ் மற்றும் லலிதா ஆகியோர்குத்து விளக்கேற்றினர்.

(“சுவிசில் உணர்வுபூர்வமாக தியாகிகள்தினம் நினைவுகூரப்பட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என கூறியவர் ஜெயலலிதா’

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர் செம்மலை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போதுஇ திமுக தலைவர் கருணாநிதி என்று பலமுறை குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

(“பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என கூறியவர் ஜெயலலிதா’” தொடர்ந்து வாசிக்க…)