மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி

பதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை தமிழ் மகா வித்தியாலய வளவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான பூஜைகள் இடம்பெறவுள்ளதுடன், மலர் அஞ்சலிகளும் இடம்பெறும். அத்துடன், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாக்கத்தை தேயிலைத் தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

(“மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ரஷ்யா தயாரிப்பு புக் ஏவுகணை தாக்கியே வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து பாதுகாப்பு சபை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்படி அனர்த்தம் குறித்து நேற்று வெளியான இறுதி அறிக்கையில், விமானத்தின் முன்பாக இடது புறத்தில் ஏவுகணை தாக்கியதன் விளைவாக அது உடைந்து விழ ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு மற்றும் மேற்குலகம் குற் றம்சாட்டுகிறது. எனினும் குறித்த ஏவுகணை உக்ரைன் அரச கட்டுப்பாட்டு பகுதில் இருந்தே ஏவப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடுகிறது.

(“மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்

கத்திக் குத்து சம்பவங்களில் 3 இஸ்ரேலியர் 3 பலஸ்தீனர் பலி. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு nஜரூசலம் பகுதிகளில் நேற்று செவ்வாயன்று இடம்பெற்ற குறைந் தது ஐந்து வௌ;வேறு தாக்குதல் சம்பவங்களில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்துள் ளனர். தாக்குதல்தாரிகள் என்ற சந்தேகத்தில் மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் ஜபல் அல் முகப் பிர் பகுதியில் இஸ்ரேல் பஸ் ஒன்றில் நடத்தப்பட்ட தாக் குதலில் இரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 15 பேர் காய மடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு அல்லது ஏழு இஸ்ரேலியர்கள் படுகாயத்திற்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரேல் அவசர சேவை பிரிவின் பேச்சாளர் மகேன் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

(“இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்” தொடர்ந்து வாசிக்க…)

கண்ணீர் அஞ்சலி

 

வவுனியா பூவரசங்குளதில் 18.03.1959 இன்று பிறந்தவரும் புழல் இலங்கை அகதிகள் முகாமில் 1990 முதல் வசித்து வந்தவருமான தோழர்அர்ஜீன் 11.10.15 அன்று உடல் நலக்கோளாறு காரணமாக புழல் அகதிகள் முகாமில் இயற்கை எய்தினார். வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களுக்கு பசியாற சமைத்துப் போட்டது மட்டுமல்லாமல் கட்சிப்பணிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்.நோய் வாய்ப்பட்ட காலங்களிலும் அவர் புழல் முகாமில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளுக்கு தவறாது சமூகம் தருபவர். கட்சியையும் தோழர்களையும் என்றும் மதித்து நடப்பவர். அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடுப்பத்தாருக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பத்மநாபா.-ஈ.பி.ஆர்.எல்.எப்

(“கண்ணீர் அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)

கீரிமலை கடற்படை முகாம் அகற்றப்பட்டது

கீரிமலை கேணிக்கு அண்மையிலுள்ள இரண்டு வீடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய கடற்படை முகாம், திங்கட்கிழமை (12) அகற்றப்பட்டு முகாம் அமைந்திருந்த வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. மேற்படி முகாம் முன்னர் 3 வீடுகளை உள்ளடக்கி அமையப் பெற்றிருந்து. ஒரு வீடு ஏற்கெனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மிகுதி 2 வீடுகளும் தொடர்ந்தும் கடற்படை முகாமாகவே இருந்தன. தற்போது கடற்கடை முகாம் முற்றாக அகற்றப்பட்டமையால், 2 வீடுகளும் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச செயலர் மேற்படி 2 வீடுகளையும் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

சுமுகமான தீர்வுக்கு வடக்கு முதல்வரால்ஏழு யோசனைகள்

தமிழ்க் கைதிகள் விவகாரம் – ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம்

தமிழ்க் கைதிகளின் பிரச்சினையை இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் கையாள, வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் 07 யோசனைகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, சிறைச்சாலைகளில் உள்ள தமிழ்க் கைதிகள், தங்களை நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப் பதை வெளிப்படுத்தும் முகமாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றனர்.

(“சுமுகமான தீர்வுக்கு வடக்கு முதல்வரால்ஏழு யோசனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!

1995ல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.

(“சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் நாடெங்கிலு முள்ள சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். தம்மை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில், தாம் விடுதலை செய்யப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்” தொடர்ந்து வாசிக்க…)

கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது வலுவான கோரிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப் படுவார்கள் என கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம், இவர்களின் விடுதலை மேலும் இழுத்தடிக்கப் படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(“கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வாக்குமூலத்தின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக, சட்டதரணி தெரிவித்துள்ளார்.