கும்பகோணத்தில் தோழர் ஸ்ராலின் அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வு

இன்று மறைந்த ஈழவிடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு மூலவர் தோழர் ஸ்ரானின் அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வு அவரின் பிறந்த ஊரான குடந்தையில் நடைபெறுகின்றது. இதில் சிறப்பு வருகையாளராக பத்மநாபா மக்கள் முன்னணியின் தோழர் சுகு கலந்து கொள்கின்றார்

சென்னையில் பத்மநாபா மக்கள் முன்னணியினரின் தியாகிகள் தினம்

பத்மநாபா மக்கள் முன்னணியும் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து நடாத்திருந்த தியாகிகள் தினம் சென்னையில் நடைபெற்றது. தோழர் சங்கரின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  UCPI, CPI தோழர்களும் பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பத்மநாபா மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் சுகு சிறப்பு செயற்பாட்டளராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏராளமான தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர் சென்னையை மையயப்படுத்தி தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்து வரும் பத்மநாபா மக்களின் முன்னணியின் தோழர் ஸ்ரனிஸ்  இன் ஒருங்கிணைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தோழர் பாஸ்கர் தோழர் சுந்தரமூர்த்தி போன்ற ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இன் செயற்பாடாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்தமிழ் நாட்டில் அகதிகளாக இருக்கும் பொது மக்களும் கலந்து கொண்டனர். தோழர் சுகுவுடன் இணைந்து பலரும் சிறப்பு பேருரை ஆற்றினர்.

கனடாவில் தியாகிகள் தினம்.

 

இன்று கனடாவின் ரொறன்ரோவில் 26 வது தியாகிகள் தின நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு 9 மணியளவில் முடிவுற்றது. தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வினை பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் ஒழுங்கு செய்திருந்தனர். தோழர் பிரதாப் இன் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் 1 நிமிட மௌன அஞ்சிலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்த தியாகிகள் தின நினைவு கூறல் நிகழ்வில் TELO, PLOTE, EPDP. EROS, EPRLF, பழம் பெரும் கம்யூனிஸ்ட்டுக்கள், சம உரிமை இயக்கம், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோழர் ஈழமணி, தோழர் நேசன்(சம உரிமை இயக்கம்), ஆதவன், தோழர் மகேஸ் (ஈபிடிபி). தோழர் முருகன்(வாத்தி) (ரெலோ) தோழர் மித்திரன்(ஈபிடிபி). ஜோர்ஜ்(தாயகம்) தோழர் செழியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

(“கனடாவில் தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையில் தியாகிகள் தினம்.

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்று செயற்பட்ட நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் நடைபெற்ற பேராளர் மகாநாட்டில் எமது அமைப்பின் பெயர்களை பத்மநாபா மக்கள் முன்னணி என்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்றும் பெயர் மாற்றம் செய்தோம். வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட யதார்தங்களை கருத்தில் கொண்டு எமது மக்களின் விடிவிற்கான அரசியல் பாதையிற்கு தேவைப்படும் மாற்றத்தினை ஏற்படுத்hதியிருந்தோம் இந்த மகாநாட்டில். கடந்த 25 வருடங்களாக சென்னை புழல் முகாமில் தொடர்ந்தும் அகதிளாக வாழும் எமது மக்கள்இ தோழர்கள் வருடா வருடம் நினைவு கூரும் தியாகிகள் தின நிகழ்வும் இம்முறை தோழர் ஸ்ரானிஸ் தலமையில் நடைபெற்றது. தோழர் கல்யாசுந்தரத்தின் நினைவு நாளும் ஜுன் மாதம் 20 ம்திகதி நடைபெறுவதால் அவரின் வழிவந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் இவ்நிகழ்வை இணைந்தே ஒழுங்கு செய்திருந்தனர் வணக்க நிகழ்வுடன் ஆரம்பித் இந்த நிகழ்வு ஈழவிடுதலைக்காவும் மனித குல விடுதலைக்காகவும் தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்கள் மாற்று விடுதலை அமைப்பு போராளிகள் யாவருக்குமான ஒரு மரியாதை செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும் உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூரு முகமாக “தியாகிகள் தினம்” – 2016க்கான நிகழ்வுகள் இம்முறை மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

(தொடர்ந்து வாசிக்க…)