லைக்கா, லிபாறா முதலாளி அல்லிராஜா

பிரிட்டனில் ஒரு கார்பரேட் நிறுவனமான லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சென்று, பல கோடி பவுன்கள் வரி ஏய்ப்புச் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் கார்ப்பரேட் வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக, கணக்கில் வராத தொகையை மோசடி செய்ததில், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பங்கிருக்கிறது. ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் பெயரில் உருவான போலி நிறுவனம், பணப்பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மோசடிப் பணம், வரியில்லாத தீவொன்றில் வைப்புச் செய்யப் பட்டுள்ளது. லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் அரச மட்டத்திலும் செல்வாக்கு தேடியுள்ளார். அதற்காக, தற்போதைய பிரதமர் டேவிட் கமெரூனின் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு £1.3 மில்லியன் நன்கொடையாக (லஞ்சம்?) கொடுத்துள்ளார். லைக்கா நிறுவனம், கடந்த வருடம் மட்டும், உலகளாவிய மொத்த இலாபம் £1.1 பில்லியன் என்று வருமானக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், அது பிரிட்டனில் பல வருடங்களாக கார்பரேட் வரி கட்டவில்லை. தற்பொழுது இவர்கள் கனடாவில் லிபாறா என்ற பெயரில் கடை விரித்துள்ளனர். கூடவே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களையும் கனடிய ஆங்கிலப் பாராளுமன்றவாதிகளையும் வலை போடும் வேலையில் தமிழர் விழா என்ற போர்வையில் விழா எடுத்து சராசரி கனடியத் தழிழரையும் புழகாங்கிதம் அடையச் செய்துள்ளனர். எமது மக்களும் இவற்றின் பின்புலம் அறியாது புழகாங்கிதத்திற்குள் புகுந்துள்ளனர் (Kalaiyarasan Tha, Saakaran)

ISIS அமைப்பில்:இலங்கையர் 7 பேர் உள்ளனர்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் சுமார் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அத்தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உயிரிழந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது இராணுவத்தினரால் விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதுடன் 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந் தார்.

(“4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் அமைச்சர் ஜனகவுக்கு விளக்கமறியல்

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.

சூத்திரதாரி பிரபாகரன் தான்

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூத்தை வெற்றி கண்டுள்ளதுடன் உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யார் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

(“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டு உள்ள போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக சாடப்பட்டு உள்ளார். விடுதலைப் புலிகளின் ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியவற்றுக்கு புலி முக்கியஸ்தர் ஒருவரின் நெருக்கமான உறவினரும், அப்போது பாடசாலை அதிபருமான இவர் உதவி, ஒத்தாசை வழங்கினார் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இவர் அதிபராக இருந்து வந்த பாடசாலையின் மாணவர்களை இவரே புலிகளுக்கு காட்டிக் கொடுத்து வந்தார் என்று இதில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இவரின் காட்டிக் கொடுப்புகளுக்கு பயந்து பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர் என்றும் இதில் உள்ளது. (“மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சியில் ஜனாதிபதி வட மகாண முதல் அமைச்சர்

இராணுவ முகாமுக்கு வாருங்கள் உணவருந்திச் செல்வோம் – ஜனாதிபதி மைத்திரி
இராணுவத்தை வெளியேறக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் – முதல்வர் விக்னேஸ்வரன்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.  நிகழ்வின் முடிவில் அங்குள்ள படை முகாம் ஒன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு உணவருந்தச் சென்ற ஜனாதிபதி வடக்கு முதல்வரையும் உணவருந்த அழைத்தார். வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் என்று கேட்டார் வடக்கு முதல்வர். அதற்கு பதலளிக்காத ஜனாதிபதி புன்முறுவலுடன் விடை பெற்றார்.

ஆனால் இந்த விழாவை ஒழுங்கமைத்ததே இராணுவம்தானே. விழா நடைபெற்ற என்னுடை கிராமம் 24 மணிநேரத்துக்கு முன்பிருந்தே அதிஉச்ச பாதுகாப்பு வலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. மகிந்தவின் விழாவுக்கும் இதற்கும் வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை. டிப்போ ரோட் , வில்சன் ரோட் முழுமையாக போக்குவரத்து தடுக்கப்பட்டு VIPகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். என்னுடைட வீடு உள்ள எமர்சன் ரோட் மாத்திரம் இராணுவ கண்காணிப்பின் கீழ் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘”சதோச “கடையை சிம்பிளாக வந்து திறந்து வைத்துவிட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்ற மைத்திரி வருகிறாரா? அல்லது மகிந்த தான் வருகிறாரா என்ற குழப்பமே இங்கே கிளிநொச்சியில் பலருக்கும் வந்துவிட்டது.

பின்பு ஏன் முதல்வர் ஐயா சாப்பாட்டில் மட்டும் அரசியல் காட்டுறார்.
ஒருவேளை அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இந்தாள் ஒவரா பார்த்திருப்பாரோ?
(பி.கு: பத்து வருடங்களுக்கு முன்பு 2004-2005 களில் பிரபாகரன் வெளிநாட்டு ராஜததந்திரிகளை சந்திக்கவரும்போதும் இப்படிதான் புலிகளும் எனது கிராமத்தில் குவிக்கப்படுவார்கள்)

(Rajh Selvapathi)

மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது

இலங்கை – ஜப்பான் உறவை கட்டியெழுப்ப இருநாடுகளுக்கான அமைச்சர்கள் மட்ட உயர்குழு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சமூக, பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் தீர்மானித்துள்ளனர்.

(“மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசியாவில் இனப்படுகொலை

இந்தோனேசியாவில், பல இலட்சம் கம்யூனிச சந்தேகநபர்கள் அழிக்கப் பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணப்படும் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இனப்படுகொலையில் பங்கெடுப்பதற்காக, கத்தோலிக்க இளைஞர்களை அணிதிரட்டிய, டச்சு – கத்தோலிக்க பாதிரியார் பற்றி அதிலே அதிக கவனம் செலுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த எசுயிஸ்ட் பாதிரியார் யோப் பேக் (Joop Beek) சர்வாதிகாரி சுகார்த்டோவுக்கு நெருக்கமானவராக இருந்தார். கத்தோலிக்க மாணவர்களை அணிதிரட்டி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இனப்படுகொலையில் பங்கெடுக்கச் செய்தார்.

(“இந்தோனேசியாவில் இனப்படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)