புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்

விடுதலை புலிகளினால் 290 பொலிஸார் கொல்லப்பட்ட திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில், அந்தசம்பவத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து தப்பிவந்த பொலிஸ் சார்ஜன், தனது மனைவி பிள்ளைகள் மூவருடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து ஈடுபட்டுள்ளார். மனோஜ் பிரியந்த சிறிவர்தன எனும் பெயர் கொண்ட இந்த அதிகாரி 1990ஆம் ஆண்டு கல்முனை பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார்.

(“புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்” தொடர்ந்து வாசிக்க…)

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் நூல் வெளியீட்டு விழா…

சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும், உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடைமைகளில் ஒன்றாக இருந்த நூல் இது. சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பெற்றுக்கொண்டார்.

கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்

நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கனக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மாணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

(“கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்” தொடர்ந்து வாசிக்க…)

பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொது எதிரணியின் 35 உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) தோற்கடிக்கப்பட்டது.

(“பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது” தொடர்ந்து வாசிக்க…)

சிவகுமாரன் நினைவு தின நிகழ்வு

உரும்பிராய் மக்களால் கனடா ரொறன்ரோவில் ஜுன் 5, 2016 அன்று சிவகுமாரனுக்கு நினைவு தின நிகழ்வு ஒன்ற நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்து போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உரும்பிராய் மக்களுடன் பல்வேறு சமூகவியல் செயற்பாடாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவகுமாரனுடன் சம காலத்தில் வாழ்ந்த நண்பர்கள் பலரும் சிவகுமாரனுடன் பழகிய காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசிய பலரும் துரோகிகளை அழித்தல் என்ற செயற்பாட்டில் சிவகுமாரனின் பங்களிப்பு செயற்பாடுகள் பற்றியும், முதல் சயனைட் தற்கொலையாளி என்றும் விடுதலைப் போராட்டத்தின் ஆயுத நடவடிக்கைகளின் முன்னோடி என்றும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.

(“சிவகுமாரன் நினைவு தின நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார்

மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவர்.

‘ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்’

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை – கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஜனாதிபதி கூறினார்.

கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்

திருகோணமலை, சம்பூர் பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற்படை உயரதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஏசிய விவகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை காரணமாக, மேற்படி கடற்படை உயரதிகாரியினதும், சம்பவத்தின் போது மேடையில் நின்றிருந்த பாடசாலை மாணவர்களினதும் கௌரவம் சீர்குலைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, பி.லியனாரச்சி என்ற சட்டத்தரணியால், மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(“கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்” தொடர்ந்து வாசிக்க…)