சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அதன் பின்னர் அந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு என்பன தொடர்பில் சரியான நிலைப்பாடொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டுமென அவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தள்ளார்.

(“சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும் இணைத்துக் கொண்டாடி மகிழும்……

“வேரும் விழுதும் 2015” (கலைமாலை)

காலம் : 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி தொடக்கம்..
இடம் : Restaurant Baren sall, Bern str-25, 3072 Ostermundigen.

நிகழ்ச்சிகள்..
இயல், இசை, நாட்டியம், இசைப்பாட்டு, தாளவாத்திய விருந்து, நகைச்சுவை விருந்து, சிறப்புப் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி: “சுவிஸ் ராகம்” இசைக்குழுவின் கரோக்கி இசையில் பண்பட்ட பல கலைஞர்களின் “ராக கீதம்”, அதிரடி மேலைத்தேய நடனங்கள் (Hip Hop -ரி.யு.கே பாய்ஸ், ட்ரீம் பாய்ஸ் உட்பட பலரது..) போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள்…

(“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளித்ததாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அது ஒருமித்த கருத்தொன்று அல்ல எனக் குறிப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

(“தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி” தொடர்ந்து வாசிக்க…)

கடந்த கால குற்றங்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரணில்

கடந்த கால குற்றச் செயல்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார தடைகள் விதிக்கப்படும், யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டிக்கப்படுவர் ஆகிய அச்சத்திலிருந்து நாட்டு மக்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் ஆணையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கு புலிகள் இயக்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் இராணுவம் பற்றி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இந்தக்; கருத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!

சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு
அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும்
பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ்
பேசும் பரீட்சார்த்திகளுக்கு திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு, அநீதி
இடம்பெறுகின்றது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. இவை சம்பந்தமாக பரீட்சார்த்திகள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த காலங்களில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

(“சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!” தொடர்ந்து வாசிக்க…)

“குமுதம் ரிப்போர்ட்டர்” மற்றும் அதன் அல்லக்கைகளுக்கு இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…….

 

லெகின்ஸ் அணிந்து பெண்கள் பொது இடங்களில் நடக்கும் போது கலாச்சாரம் நாசாமாகி போனது என்றும்….ஜீன்ஸ், T ஷர்ட் அணிந்து பெண்கள் நடமாடுவது தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் கூறி, அறிவுரைகள் கொடுக்கிறோமென்ற சாக்கில், பெண்களை பின் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தெரியாமல், அனிச்சையாக ஆடைவிலகும் நேரத்தில் படமெடுத்து அதை பத்திரிகையில் அச்சடித்து விநியோகம் செய்து கல்லா கட்டும், அலப்பரைகளுக்காகவும் அதை வாங்கிப் படித்துவிட்டு கலாச்சாரம்…கலாச்சாரம்…என்று தலைகீழாகக் குதிக்கும் அந்த பத்திரிக்கைகளின் அல்லக்கை ரசிகர்களுக்கும்….இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…அவனவன் வேலை என்னவோ அதை செய்யுறதவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு படுக்கையறையில் உற்று பாக்குறவங்களுக்கு தான் இந்தக் கலாச்சாரப் பிரச்சனை எல்லாம்…வெனிசூலாவின் முன்னாள் அதிபர் தோழர். ஹியுகோ சாவேஸ் ஜானதிபதியாக இருந்தபோது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி…அந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்…இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை…அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக எந்த அவமான உணர்வும் இல்லை…! ஆடை அணிவதால் ஏற்படும் பிரச்சனை என்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது…!தோழர். சாவேசின் செயல்பாடு, ஒருவர் தன்னுடைய இளைய சகோதரியிடம் பாசத்துடன் காண்பிக்கும் செயல்பாடு…இதுவே கலாச்சாரம்…!அதன்றி ஆடை எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதுமோ அல்ல காலச்சாரம்…!

நன்றி….
படம் மற்றும் கருத்து உபயம் Sadan Thuckalai
(Kani Oviya)

தீர்வு எம் கையில் இருக்கிறது – பிரதமர் ரணில்

உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறையில் அமையக்கூடிய விசாரணை முறைமையை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது. அதனை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டில் இருக்கின்ற சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீதிமன்ற பொறிமுறையின் கீழ், அடிப்படை நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்கின்றன. அவற்றின் ஊடாக, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு கூடியவிரைவில் தீர்வு காணமுடியும். அவ்வாறு செய்யாவிடின் அது பாரிய காயமாகிவிடும் என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட குழப்பநிலை தோன்றியிருக்கிறது. சில அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இவ்விவகாரத்தினை திரிவுபடுத்தி வெளியிடுகின்றனர். ஆகையினால் இது தொடர்பில் விளக்கமளிப்பது காலத்தின் கடமையாகும்.

(“தீர்வு எம் கையில் இருக்கிறது – பிரதமர் ரணில்” தொடர்ந்து வாசிக்க…)

இணக்கப்பிரேரணை முக்கிய திருப்புமுனை – ஹக்கீம்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் இம்மாதம் 24ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது என்று அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த இணக்கப் பிரேரணை கடந்த தசாப்பதங்களில் சகல சமூகங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகள் அனுபவித்த துயரங்களை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையென இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது. நிறுவன ரீதியான சட்ட சீர்திருத்தங்களினூடாக நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு உரமூட்டுவதற்கும் இது வழிவகுப்பதாக அமையும். இலங்கை அரசாங்கம் – தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அதன் கவனம் செலுத்தப்படுகின்ற போதிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமையையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது.

(“இணக்கப்பிரேரணை முக்கிய திருப்புமுனை – ஹக்கீம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்ற போது காலையில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சில தமிழ் அரசியல்வாதிகளை மனித உரிமை பேரவையின் கீழ் தளத்தில் உள்ள தேனீர்ச்சாலையில் கண்டேன். பின்னர் நண்பகல் உணவிற்காக நான் அங்கு சென்ற போது தேனீர்ச்சாலையில் அதேகதிரைகளில் தான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் 5.30மணியளவில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க அந்த தேனீர்ச்சாலைக்கு சென்ற போது அப்போதும் அங்குதான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். ஜெனிவா செல்கிறோம், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கிறோம், கூட்டத்தொடரில் பேசுகிறோம், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்திக்கிறோம் என கூறிவிட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு இவ்வாறு தேனீர்ச்சாலைகளில் காலம் கழிப்பதைத்தான் காணமுடிகிறது. ஜெனிவாவுக்கு வரும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் எந்த இராஜதந்திரிகளையும் சந்திப்பது கிடையாது. சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் சரி, தூதுவர்கள் இராஜதந்திரிகளும் சரி, இலங்கை என்று வரும் போது இரு தரப்பைத்தான் சந்திக்கிறார்கள். ஒன்று அரச தரப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இரண்டாவது தரப்பாக தமிழர்களின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். இம்முறை ஜெனிவாவில் பிரித்தானிய தூதுவர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் அரசதரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தமிழர் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் மட்டுமே சந்தித்தனர்.

(Rajaguru Theyvendran)

கியூபாவில் பாடசாலைக் குழந்தைகளின் ஓய்வு நேரம்….

 

ஆயிரக் கணக்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட பேஸ்புக் பதிவுகளில் ஒன்று. கியூப மக்கள், முதலாளித்துவ சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாத காரணங்களில் இதுவும் ஒன்று. சோஷலிசத்தில் எந்தளவு குறை இருந்தாலும், அதுவே எமக்குப் போதும் என்று, கியூப மக்கள் இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள். கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.