ஈழவிடுதலைப் போராட்டத்தின் இந்திய மூலவர் தோழர் ஸ்ராலின் அண்ணா எம்மை விட்டுப் பிரிந்தார்

 

ஈழ மக்களால் ஸ்ராலின் அண்ணா என்ற அறியப்பட்டவரும் கும்பகோணத்தை தனது வதிவிடமாகக் கொண்டவர் எம் மனங்களில் நிறைந்த வண்ணம் எம்மை விட்டுப் பிரிந்தார். தனது சொத்து, சுகம், குடும்பம், உறவுகள் எல்லாவற்றையும் ஈழ விடுதலைக்காக அற்பணித்தவர் தோழர் ஸ்ராலின் அண்ணா. கும்பகோணத்தின் எப்பகுதியிலும் ஸ்ராலின் அண்ணா என்று அறியப்பட்ட ஆர்.பி. ஸ்ராலின் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய உந்து சக்தியாக தன்னை 1970 களின் ஆரம்பகாலத்திருந்து அறியப்பட்டவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வளர்ச்சியிலும், வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றியவர். ஈழவிடுதலை அமைப்புகளில் தோழர் நாபா வுடன் மிக நெருக்கமான தொடர்புகளையும் நம்பிக்கையும் வைத்திருந்தவர் தோழர் நாபாவின் மரணம் தோழர் ஸ்ராலின் அரசியல் செயற்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தாலும் தொடர்ந்தும் ஈழ மக்களின் விடிவிற்காக செயற்பட்ட அர்பணிப்புமிக்கவர். இவரின் மறைவால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்கள் தோழர்களின் துயரங்களில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

கே.பிக்கு எதிரான மனு ஜுலை 25 இல் விசாரணை

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (30) அறிவித்தது. இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், குமரன் பத்மநாதனின் (கே.பி) இயக்க நடவடிக்கைகள் பற்றிய விசாரணை அறிக்கையின்; முன்னேற்றம் பற்றிய அறிக்கையை சட்டமா அதிபர், பெப்ரவரி 3 அன்று நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

‘காணி விவகாரத்தை வெள்ளிக்குள் முடிக்கவும்’ – ஜனாதிபதி

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான காணிகளை இனம்காணும் செயற்பாடுகளை, 03ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தினார். இக்கலந்துரையாடலில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம, முப்படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா

சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு சிரிய அரச எதிர்ப்பு கூட்டணியின் தலைமை பேச்சுவார்த்தயாளர் முஹமது அல்லவுஷ் இராஜினாமா செய்துள்ளார். பேச்சுவார்த்தைகள் அரசியல் உடன்பாடொன்றையோ அல்லது சிரியாவின் முற்றுகைப் பகுதிகளில் தளர்வையோ ஏற்படுத்த தவறிவிட்டதாக உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்தவரான அல்லவுஷ் குறிப்பிட்டுள்ளார்.

(“சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா” தொடர்ந்து வாசிக்க…)

சோசலிச கட்சியினர் மூவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட மற்றும் சுஜித் குருவிட்ட உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி, புஞ்சி பொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில், திணைக்களத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட குறித்த மூவரையும் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(“சோசலிச கட்சியினர் மூவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்

கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித்தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடிதமொன்றை அனுப்பி வத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் அனுப்பிவைத்துள்ள கடித்தத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, முப்படைகளுக்கும் தன்னைச் செல்லவிடாமல் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை, அரசியல் ரீதியிலான முடிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு

தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க. பெற்றுள்ளது. தி.மு.க. சட்டசபை தலைவராக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கடிதம் சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஜூன் 3ம் திகதி முறைப்படி வெளியாகிறது.

(“எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வர் நிகழ்ச்சிகளை முப்படைகள் புறக்கணிப்பது “அரசியல் முடிவு” – நசீர் அஹ்மட்

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு ” தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் செய்திருக்கிறார் முதல்வர் நசீர் அஹ்மட் மே 20ம் தேதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்யாலயா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை அடுத்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை இனி முப்படைகளும் புறக்கணிப்பார்கள் என்று கடற்படை அதிகாரிகள் கூறினர். இந்த சர்ச்சையை அடுத்து இரு தரப்புகளையும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க விளக்கம் கோரியிருந்தார்.

(“முதல்வர் நிகழ்ச்சிகளை முப்படைகள் புறக்கணிப்பது “அரசியல் முடிவு” – நசீர் அஹ்மட்” தொடர்ந்து வாசிக்க…)

வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்

தமிழகம் மற்றும் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவுகள் மென்மேலும் வலுவடையும் வகையில் என்னைச் சந்திப்பதற்கு நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

(“வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்” தொடர்ந்து வாசிக்க…)