கூட்டணி வாரியாக – முடிவுகள் |
|
---|---|
தேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118 |
|
அணிகள் |
முன்னிலை / வெற்றி |
அதிமுக கூட்டணி | 37 |
திமுக கூட்டணி | 41 |
தேமுதிக – ம.ந.கூ | 00 |
பாமக | 00 |
பாஜக கூட்டணி | 00 |
நாம் தமிழர் | 00 |
Category: செய்திகள்
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
கூட்டணி வாரியாக – முடிவுகள்
தேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118
அணிகள் முன்னிலை / வெற்றி
அதிமுக கூட்டணி: 25
திமுக கூட்டணி: 26
தேமுதிக – ம.ந.கூ: 00
பாமக: 00
பாஜக கூட்டணி: 00
நாம் தமிழர்: 00
சாமசர மலை சரிந்தது
307,369 பேர் பாதிப்பு
6 பேர் உயிருடன் புதைந்தனர்
1919க்கு அழையுங்கள்
பாடசாலைகள் 208 க்கு பூட்டு
நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இங்கிருந்து, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், நாட்டில் நிலவியிருந்த சீரற்ற வானிலையால், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் சரிந்து, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தனிப்பெரும் கட்சி: தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்திடிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 111 இடங்களையும், திமுக கூட்டணி 99 இடங்களையும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி 3 இடங்களையும், பாமக 2 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றும். மற்ற 16 தொகுதிகளில் இழுபறி நிலவும் என்று தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளை இந்த கருத்துகணிப்பில் சேர்க்கப்படவில்லை.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு உயரிய சபையில்
‘முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எங்களுடைய உடன்பிறவா உறவுகளை நினைவுகூர்ந்து, நாம் அஞ்சலி செலுத்திவருகின்றோம். அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு, இந்த உயரிய அவையில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என்றார். இதேவேளை, ‘மாரடைப்பால் காலமான, மன்னார் நகரசபையின் முன்னாள் நகரபிதா சந்தன பிள்ளை ஞானபிரகாசத்துக்கும் இச்சபையில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.
இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு ‘தமிழர்களுக்கும் உரிமை உண்டு’
‘இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால், மூவினங்களைச் சேர்ந்த மக்களும் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தையோ விடுதலைப் புலிகள் அமைப்பையோ சாராதவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகையினால், இறந்தவர்களை நினைவுகூர, சகலருக்கும் உரிமை உள்ளது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
(“இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு ‘தமிழர்களுக்கும் உரிமை உண்டு’” தொடர்ந்து வாசிக்க…)
கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு
8 பேர் பலி, இருவர் மாயம்
118 வீடுகள் சேதமடைந்தன
5,196 பேர் இடம்பெயர்வு
வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
(“கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
குமுதினிப்படுகொலை அரங்கேற்றப்பட்டு இன்றுடன் முப்பத்தொரு வருடங்கள்.🕯🕯
குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
நாளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல், நாளை (16) இடம்பெறவுள்ளது. 234 ஆசனங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவாக்குறிச்சித் தொகுதிக்கான தேர்தல் மாத்திரம், நாளை இடம்பெறாது.
தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்
தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
(“தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)