- மக்கள் ஆசிரியர் சங்கம்
மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அம்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.எஸ். பிரேமவன்ச அவர்களுடன் 04.05.2016 அன்று மக்கள் ஆசிரியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக செயலாளர் உடன்பட்டுள்ளார். இக் கலந்துரையாடலின் போது மத்திய மாகாண தமிழ்க் கல்விப் பிரிவு பெயரளவில் இருக்கின்றமை, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் சுற்றறிக்கைகள் வழங்கப்படாமை, தமிழ் மொழிப் பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்கள் இடமாற்றுச் சபையினூடாக இடம்பெறாமை, ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு முறையாக வழங்கப்படாமை மற்றும் விடுமுறை பற்றிய தெளிவீனம், உயர் தர மாணவர்களுக்கான குழு கருத்திட்டத்தில் மாணவர்கள் தவறாக வழி நடத்துகின்றமை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடலின் போது;