சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி

புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி, ஈரோஸ், ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, ”இந்த அரசியல் கூட்டணிக்கு ஈபிடிபி, ஈரோஸ் உள்ளிட்ட 15 தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

(“சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சி தலைவரின் தந்தையை கொன்றவர் சிக்கினார்

எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகவே 1986ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த டப்ளியு. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர் 22 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சியில் போதைப்பொருள் வியாபாரிகள்

தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழித்து தமிழ் இனத்தை அழிப்பதற்கான முயற்சியாக வடக்கில் போதைப்பொருள் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்வதாக அமைந்துள்ளது. மாணவர்களிடம் மாற்றங்கள் தெரிந்தால் அதிபர்கள் உடனடியாக பெற்றோருக்கு அறிவிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மகாநாடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

(“தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சியில் போதைப்பொருள் வியாபாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது

 

அகதிகள் தங்களது சொந்தச் செலவில் விமானம் மூலம் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பினர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது. தாயகம் திரும்புகிறவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலமும்,தங்களது சொந்தச் செலவிலும் செல்கின்றனர்.ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலம் தாயகம் திரும்புகிறவர்களுக்கு அந்த நிறுவனம் விமான ரிக்கட் மற்றும் முகாமில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பிரயானச் செலவினையும் வழங்குகிறது.

(“தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் அவரோடு கூட மரணித்த நூற்று கணக்கான போராளிகளுக்கும் 30ம் ஆண்டு அஞ்சலி

தோற்றம்                                                            மறைவு
28-08-1952                                            06-05-1986

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம்
சிறீ என்று அன்பாக தமிழ் ஈழ மக்களால் அழைக்கப்படும் சிறீசபாரத்தினம் ஒரு மாபெரும் தமிழ் ஈழ சுதந்திர போராட்டத் தலைவர் . தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு ஒரு வழி போர் மட்டுமே என தீர்மானித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய ராணுவத்தை உருவாக்கி இலங்கையில் ஆட்சிசெய்து கொண்டிருந்த சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன். கல்வி, தேசத்தொண்டு, பத்திரிகை என பல வழிகளில் தமிழ் ஈழ மக்கள் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர்!
ஒவ்வொரு தமிழனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடத் தூண்டிய தலைவர் சிறீ சபாரத்தினத்தின் கொள்கைகள் போற்றத்தக்கது. இவர் மீது மேற்கொண்ட சகோதர படுகொலையின் மூலம் எமது இனத்தின் ஒற்றுமையும் விடுதலையும் தொலைந்து விட்டது.

(WWW.TELO.ORG)

அதிமுக அரசு மீது சோனியா வைத்த முக்கிய குற்றச்சாட்டு..

காங்கிரஸ் – திமுக கூட்டணி உருவானதை கூட்டணி உருவானபோதே வரவேற்றுப் பதிவு செய்தேன். பெரும்பான்மை பலத்துடன் வஞ்சகமாகப் பா.ஜ.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டியது அவசியம். மே.வங்கத்தில் காங் + மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியையும் வரவேற்றேன். தமிழகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் போனது துரதிர்ஷ்டமே. மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் இம்முறை நிச்சயம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கலாம்.

(“அதிமுக அரசு மீது சோனியா வைத்த முக்கிய குற்றச்சாட்டு..” தொடர்ந்து வாசிக்க…)

கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்

இளம் பெண் பலாத்கார படுகொலை சம்பவத்தைக் கண்டித்து கோழிக்கோட்டில் நடந்த போராட்டம்

 

கேரளத்தில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் நீதி கோரி கோழிக்கோட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இச்சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எர்ணாகுளம் மாவட்டம் ராயமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.

(“கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார்.

(“இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி” தொடர்ந்து வாசிக்க…)