ஹஜ் மரணம்: சவூதி மீது கண்டம் வலுக்கிறது:

ஹஜ் யாத்திரையின் போது மேற்கொள் ளப்படும் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து மறு ஆய்வு செய்யும்படி சவூதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். புனித மக்கா நகருக்கு அருகில் வியாழனன்று ஏற் பட்ட நெரிசலில் சிக்கி 717 யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத்தே மன்னர் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளார். மினாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 863 பேர் காயமடைந்தனர். இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையான ஹஜ் ஜpல் இம்முறை இரண்டு மில்லியன் யாத்திரிகர் கள் பங்கேற்றுள்ளனர்.ஹஜ் யாத்திரையில் கடந்த 25 ஆண்டுக ளில் இடம்பெற்ற அதிக உயிர்ப்பலி கொண்ட அனர்த்தமாக இது பதிவானது.

(“ஹஜ் மரணம்: சவூதி மீது கண்டம் வலுக்கிறது:” தொடர்ந்து வாசிக்க…)

இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்த முடிவுக்கு த.தே.கூட்டமைப்பு பாராட்டு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. பொதுநலவாய நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணை யாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பு விசாரணையாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறி முறையொன்றை இலங் கையில் உருவாக்கி சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் நீதிக்கு கிடைத்த வெற்றியென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நல்லிணக்கம் என்ற நீண்டபயணத்தை ஆரம்பிப்பதற்கான பலமான சூழலை ஏற்படுத்தும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!” – போப்பாண்டவர் பிரான்சிஸ்

“நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!”- அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது. அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் “இடதுசாரி” என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக “லிபரல்” என்று தான் அழைப்பார்கள்.

புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் !

விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றங்கள் குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதி முறைமையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் உள்நாட்டு நிபுணர்களாலேயே இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும், படையினரின் கௌரவம் பாதுகாக்கப்படுகின்ற வகையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்ற வகையிலும் இந்த விசாரணைகள் அமையவேண்டும், இந்த விடயம் குறித்து தேசிய கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும், இறுதிமுடிவை பாராளுமன்றே எடுக்கவேண்டும், விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்,
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்து கலப்புநீதிமன்றத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளை பூமியைக் கடக்கும் ராட்சத விண்கலம்.. மனிதகுலமே அழியும் என பீதி.. மறுக்கிறது நாசா

ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்தில்லை என அது விளக்கமளித்துள்ளது. சுமார் 270 மீ சுற்றளவுடைய 2012 டிடி5 என்ற ராட்சத விண்கல்லானது நாளை பூமியிலிருந்து 50 லட்சம் மைல் தொலைவில் கடக்க இருக்கிறது.
இதனால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த விண்கல் குறித்து ஏற்கனவே பல்வேறு பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. மோதினால் பூமி அழியும் இந்த விண்கல் பூமி மீது மோதப் போகிறது. அப்படி மோதினால், பூமியே அழிந்து விடும். மனித குலமே மண்ணாகப் போகிறது என்று தகவல் பரவி உள்ளது. இதனால், சில நாடுகளில் மக்கள் அழிவிற்கு ஆயத்தமாகத் தொடங்கி விட்டனர். கடைசி கடைசியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மக்கள் மன நிலை போய் விட்டது. உண்மைதான், ஆனால் அழியாது இந்நிலையில், இந்த விண்கல் நாளை பூமியைக் கடக்கப் போவது உண்மை தான், ஆனா அதனால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அப்படியேதான் இருப்போம் இந்த விண்கல் பூமியைக் கடந்த பின்னரும் கூட பூமி அப்படியேதான் இருக்கும். நாம் தொடர்ந்து நல்லபடியாக இருப்போம் என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.
கடவுள் துகள் ஆய்வகத்தால் ஆபத்தா? அதேசமயம், கடவுள் துகள் குறித்த கண்டுபிடிப்புக்காக உருவாக்கப்பட்ட லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர், தனது ஈர்ப்பு சக்தி காரணமாக மிகப் பெரிய விண்கல்லை பூமியை நோக்கி இழுக்கப் போவதாகவும் ஒரு பீதி கிளம்பியுள்ளது. ஆனால் இதையும் நாசா மறுத்துள்ளது

சமூகத்தின் விடிவுக்காக அரசியல் செய்வோம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வாழ்த்து!

முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக அரசியல் என்கிற படகில் பயணித்து அவரையே தியாகம் செய்தவர் தேசிய தலைவர் மர்ஹூம் ஏ. எச். எம் அஷ்ரஃப் அவர்கள், இவருடைய அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், மனிதாபிமானம், சாணக்கியம் ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் அரசியல் தலைமை செயற்பட வேண்டும் என இன்றைய தியாகத் திருநாளில் வாழ்த்துகின்றார் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி. உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைச் சட்டமாக இஸ்லாமிய சமய மார்க்கம் உள்ளது, ஈகை, தியாகம் ஆகிய உயரிய மனிதப் பண்புகள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு அம்சங்களாக விளங்குகின்றன, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை இவற்றுக்கு முன்னுதாரணமாக உள்ளது, இதனால்தான் முஸ்லிம்கள் அனைவரும் ஈகைப் பெருநாளையும், தியாகத் திருநாளையும் தவறாமல் கொண்டாடுகின்றனர், ஸ்ரீலங்கா முஸ்லிம்களை பொறுத்த வரை ஈகை, தியாகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அரசியல் வழிகாட்டி அஷ்ரப் அவர்கள் விளங்குகின்றார் என்று ஹஜ்ச் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ள இவர் தேசிய தலைவர் அஷ்ரப் அவர்களின் ஈகை, தியாகம் ஆகியவற்றை அரசியல் தலைமை ஒருபோதும் மறக்கவோ, மரிக்கச் செய்யவோ கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்

புனித மக்காவுக்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 717ற்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர். 805ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. புனித மக்காவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மினா நகரிலேயே இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையர் எவரும் பாதிக்க ப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லையென சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

(“மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் மாவட்டத்தில் இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகையில் காலை ஈடுபட்டனர். இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பெருநாள் தொழுகை திறந்த வெளியரங்கு உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.இதன் போது மார்க்க சொற்பொழிவு மற்றும் தொழுகை மௌலவி பைசர் மதனி தலைமையில் மேற்கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அடுத்து யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் மற்றுமொரு பெருநாள் தொழுகைகாலை7மணியளவில்ஆரம்பமானது.இத்தொழுகைஒஸ்மானியாஜின்னாமைதானத்தில்நடைபெற்றபோது மார்க்க சொற்பொழிவினை மௌலவி எம்.ஐ மஹ்மூத் பலாஹி மேற்கொண்டார்.இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன் ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டீயம் பிரார்த்திக் கொண்டனா்.ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்

எல்லை தாண்டும் மீனவர்களை தாக்குவதில்லையெனவும் உரிய நாடுகளின் கடல் எல்லைகளில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதென்றும் இந்திய – இலங்கை அரச தரப்பு அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. புதுடில்லியில் இடம்பெற்ற பாதுகாப்பு உயர் மாநாட்டிலே இவ் முடிவுகள் எடுக்கப்பட்டன.

(“தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!

தமிழரசுக்கட்சியனை விமர்சித்து கேள்வி எழுப்பும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களை தடை செய்யவேண்டுமென வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.
இலங்கையினில் வெளியிடப்படும் அனைத்து இணையங்களும் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கும் அவை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்ததுவதற்கு கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் புலம்யெபர் இணைய தளங்களை தொழில்நுடப ரீதியாக தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளைநடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இலங்கை அரசின் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரை கோரியுள்ளார்.
இது தொடர்பினில் வடமாகாணசபை அமர்வினில் பிரேரணையொன்றினையும் சீ.வி.கே.சிவஞானம் கொண்டுவந்திருந்தார்.

(“மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!” தொடர்ந்து வாசிக்க…)