ஜூலிஸ் பூசிக்கின் – தூக்குமேடைக் குறிப்பு

பாசிச – நாசிச இனவெறியாளன் ஹிட்லரினால், பேர்லின்- பான்கிராட்டஸ் சிறையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட நாள் இன்று – 08.09.1943. சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு ,கொலைக் குழிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர்களையும், புதல்விகளையும், கணவர்களையும், குழந்தைகளையும், தாய் – தந்தையர்களையும் இழந்த – அவர்களைத் தேடி அழைந்த, ஆயிரக்கணக்கான எம்மைப்போன்றே அன்று, பாசிச ஜேர்மனிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தன் துணைவனை தேடி அலைந்த அகுஸ்தினா பூசிக்கு கிடைத்தது, ஜூலிஸ் பூசிக் எழுதிய இக் குறிப்புக்கள் மாத்திரமே. என் விடுதலைப் போராட்ட காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பலலரும் வாசித்த ‘தூக்குமேடைக் குறிப்பும்”, ‘வால்காவிலிருந்து கங்கைவரை’, ‘தாய்’ ஆகிய இவ் மூன்றுமே கூடுதலாக இடம்பெற்றிருந்தன.

மாவை சேனாதிராசா

அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தனது 5 வருட சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தமது 45 ஏக்கர் காணியை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா தனது காணியில் குடியிருக்கும் லிங்கா நகர் ஏழை மக்களுக்கு அவ் காணியை வழங்க மறுப்பதுடன் அவர்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறாரே? இது என்ன நியாயம்? நீங்கள் மக்களுக்கு உங்கள் சம்பளம், சொத்து எதுவும் வழங்க வேண்டாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைத்தாலே போதும். அதையாவது செய்வீர்களா?
(Ponniya Rasalingam)