மக்களின் முன்னால் இன்னொரு ‘மண்குதிரை’

(ப. தெய்வீகன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன.

(“மக்களின் முன்னால் இன்னொரு ‘மண்குதிரை’” தொடர்ந்து வாசிக்க…)

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 1

அன்புமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்கள் உகரம் இணையத்தளத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரும் அதிர்ச்சி. நீங்கள் இவ்வாறு எழுதியதற்கான காரணம் என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் இவ்விடத்தில் உண்மையைக் கூறுவது எனது கடமை என்று நினைக்கிறேன். உண்மையைத் துணிந்து கூறுங்கள் என்ற உங்களின் உரைகள் தான் எனக்கு அப்படியயாரு மன உறுதியையும் தந்தது.

(“கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 1” தொடர்ந்து வாசிக்க…)

ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக கற்க அரசு அனுமதி

ஜேர்மன் நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் மாணவர்கள் பாடமாக கற்க அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் உலக்ப்போரில் ராணுவ வீரராக பங்கேற்று இரண்டாம் உலகப்போரில் உலகையே அதிர வைத்தார் ஜேர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர். உண்மையில், இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் தான் ஜேர்மனி இரண்டாக உடைந்து கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியாக உருவெடுத்தது.

(“ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக கற்க அரசு அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

மீட்பர் பிறந்த மாதத்தில் சிந்திய குருதிகள்!!!

பாவிகளுக்காய் சிலுவை சுமந்த மீட்பர் பிறந்த மார்கழி மாதத்தை கொண்டாடும் வேளையில் ஈழ தமிழ் மக்களை பேரினவாத சாத்தானின் ராணுவத்திடம் இருந்து காக்க ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்ட எம் இனமான போராளிகள் தம்முள் மோதி “தெரிந்த சாத்தான் தெரியாத தேவதையை விட மேல்” என எண்ணி எதிரியின் பாசறையில் தம் உயிர் காக்க தஞ்சம் புகுந்த மாதமும் மார்கழி மாதம் தான்.

(“மீட்பர் பிறந்த மாதத்தில் சிந்திய குருதிகள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று…. வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்…

1968-ம் வருடம், டிசம்பர் 25 – தமிழக வரலாற்றில் கருப்பு நாள்.கீழத்தஞ்சையில், (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில், தாழ்த்தப்பட்ட (தலித்) சமுகத்தை
சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை, ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர்,
இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள், 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற, ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது. “என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ, ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

(நன்றி: வினவு.)

பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது

சுஹாசினியும் ராதிகாவும் நகமும் சதை போல. ஒருவர் குரல் கொடுத்தால் மற்றவர் அரங்கத்தில் பாய்ந்து விடுவார்.இது அவர்கள் முன்னணி நாயகிகளாக இருந்த போதிலிருந்தே நடப்பது. முன்பு அசிங்கமான பாடல்களை எதிர்க்காததினால் பீப் பாடலையும் எதிர்க்கக் கூடாது என்று சொல்வது அதுவும் பெண்கள் சொல்வது என்ன நியாயம்? இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியுள்ளார்கள். அவர்கள் அப்படி எழுதியிருப்பதால், பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது. திரையுலகின் பாடல்கள் சீர் குலைந்து வருவதை ஜீரணிக்க முடியாத கவி. கா. மு. ஷெரீப் என்ன செய்தார் தெரியுமா? விரசமான, மோசமானப் பாடல்கள் எழுதியவர்களை திட்டவில்லை. விமர்சிக்கவில்லை. “இனி திரைப் படப் பாடல்கள் எழுதமாட்டேன்” என்று பாடல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். பீப் பாடல் பற்றி விமர்சனம் எழுந்த போது, ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதற்கு விளக்கம் சிம்பு தரப்பு தந்ததே தவிர மன்னிப்பு கேட்கவில்லை. தவிர, சிம்பு படஉலகில், படத் தயாரிப்பில் செய்த அலட்டல், அட்டூழியம், அடாவடித்தனம் எல்லாம் பத்திரிகைகள் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. எல்லாம் சேர்ந்து கொண்டது. பொங்கி எழுந்து விட்டார்கள். “எவன்டி உன்னை பெத்தான்.. பெத்தான் ” பாடலுக்கே எல்லாரும் பொங்கியிருக்க வேண்டும்.

(Bismi Parinaaman)

காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?

பழிச்சொல் நிறைந்த பாவரங்கில் தன்னை ஒரு கவிஞன் என சுய அறிமுகம் செய்து இந்தியா கைது செய்து இலங்கை அரசிடம் கையளிக்க போன நிலையில் சைனட் வில்லைகளை விழுங்கி 3/10/1987 அன்று உயிரிழந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு புலிகளின் நினைவுப் பாவரங்கில் , இந்திய வரலாற்றையும் அதன் கர்ணபரம்பரைக் கதைகளையும் கேவலப்படுத்துவது ஒரு புறமிருக்க , நேருவின் பரம்பரையை பற்றி ஏதோ யாரோ எழுதிய கதைகளையும் உண்மையாக்கும் விதத்தில் மந்திர உச்சாடனம் பண்ணுவது போல் அழுத்தமும் ஆவேசமும் கொண்டு பண்ணிப் பண்ணிப் பாவுரைத்தார் புலிப் பாவலன். ஆனால் இந்திய எதிர்ப்பில் நேருவை எதிப்பதில் அவர் காட்டிய முனைப்பில் முஸ்லிம் விரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை நீங்களே இதனை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

(“காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
1980 களின் நடுப் பகுதியில் தமிழ் நாட்டுப் பெண்கள் TVS 50 ஓடத்தொடங்கிய போது தமது துப்பட்டாவால் தலையை போர்த்தி சிறிதளவு முகத்தையும் மறைந்து செல்வர். தலை குழம்பாமலும் முகத்தி தூசி படிந்து முகத்தின் புத்துணர்சி குறையாமலும் இருக்க இதனை மேற்கொண்டனர். பார்பதற்கு அழகாகவும் இது இருந்தனர் இந்தத் தேவதைகள். தமது அழகிய முகத்தைக் காட்டமாட்டார்களா…? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எகிறிநின்றது. யாரும் மூக்கையும், வாயையும் மறைத்து சுவாசத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. இதனை 2010 வரைக்கும் ஓரளவிற்கு என்னால் அவதானிக்க முடிந்தது.

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பின் சதியா? யாழின் விதியா? –

(கம்பவாரிதி ஜெயராஜ்)

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத் தலைமைக்கான ஆயத்தத்தை தமிழ்மக்கள் பேரவை என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து, தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என,கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டை வேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

(“கொழும்பின் சதியா? யாழின் விதியா? –” தொடர்ந்து வாசிக்க…)