இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு ‘தமிழர்களுக்கும் உரிமை உண்டு’

‘இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால், மூவினங்களைச் சேர்ந்த மக்களும் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தையோ விடுதலைப் புலிகள் அமைப்பையோ சாராதவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகையினால், இறந்தவர்களை நினைவுகூர, சகலருக்கும் உரிமை உள்ளது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு ‘தமிழர்களுக்கும் உரிமை உண்டு’” தொடர்ந்து வாசிக்க…)

100/= சம்பள உயர்வுக்காக போராட அமைச்சர்கள் அழைப்பு விடுப்பது வேடிக்கையானது – மக்கள் தொழிலாளர் சங்கம்

கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், அதனடிப்படையில் நாளாந்த சம்பளமாக 1000/= வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக இருக்கும் பின்னணியில், கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் நாளாந்த 100/= (மாதம் 2500/=) சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க கபினட் அமைச்சர்கள் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அழைப்பு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்திருப்பது வேடிக்கையானது என்பதுடன் தொழிலாளர்களின் 1000/= சம்பள உயர்வு கோரிக்கையை காட்டிக் கொடுத்து பெருந்தோட்டக் கம்பனிக்கு துணைப் போகும் நடவடிக்கையாகும்.

(“100/= சம்பள உயர்வுக்காக போராட அமைச்சர்கள் அழைப்பு விடுப்பது வேடிக்கையானது – மக்கள் தொழிலாளர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 32)

பற்குணம் 1970 இல் இருந்து 1976 வரை திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றினார் .இக் காலங்களில் என்னை பல இடங்களுக்கு தன்னோடு அழைத்துச் செல்வார்.திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தவிர்ந்த ஏனைய பகுதி கிராமங்கள் அனைத்துக்கும் அவருடன் கூடவே போயிருக்குறேன்.ஆனால் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் என்னை அவர் மேடைகளில் அனுமதித்ததில்லை.சிறுவனான என்னிடம் கர்வம் வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.அன்றைய காலத்தில் அங்கு பணியாற்றிய சகல நண்பர்களுக்கும் பணியாற்றியவரகளுக்கும் பொதுவாக அவரின் தம்பி எனது தெரியும்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 32)” தொடர்ந்து வாசிக்க…)

கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு

8 பேர் பலி, இருவர் மாயம்
118 வீடுகள் சேதமடைந்தன
5,196 பேர் இடம்பெயர்வு

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

(“கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மலையாளக் கரையோரம்: தேர்தல் களத்தில் கேரள நடிகர்கள்!

 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் போன்று இல்லாமல், நடிகர்கள் நடிக்கட்டும், அரசியலுக்கு அவர்கள் வேண்டாம்’ என்று கூடுமானவரை தனித்து நின்று பழகியிருக்கிறது கேரளம். அரசியலுக்குள் திரைப்பட நடிகர்களின் வரவைக் கேரள மக்கள் பாரம்பரியமாகவே விரும்பி வரவேற்காதவர்களாகப் பழகியிருக்கிறார்கள். இது நடிகர்களுக்கு வரமா? இல்லை, சாபமா என்று ஆராய்ந்தால், பலரும் “இது கேரள மக்களின் சாணக்கியத்தனம்” என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறார்கள்.

(“மலையாளக் கரையோரம்: தேர்தல் களத்தில் கேரள நடிகர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரும் இன அழிப்பை சந்தித்து, தொடர்ந்தும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆயிரம் குழப்பங்களுக்கு மத்தியில் முயன்று வருகின்றோம். இதில் ஆயிரத்தி ஓராவது குழப்பமாக எமது அரசியலுக்குள் சீமானின் தலையீடு அமைகின்றது. கையறு நிலையில் நிற்கும் எமது மக்களிடம் அடுத்த தலைவராக சீமான் வலிந்து முன்னிறுத்தப்படுகிறார். புலம்பெயர் நாடுகளில் ‘நாம் தமிழர்’ கிளைகள் திறக்கப்படுகின்றன.

(“தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)

குமுதினிப்படுகொலை அரங்கேற்றப்பட்டு இன்றுடன் முப்பத்தொரு வருடங்கள்.🕯🕯

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நாளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல், நாளை (16) இடம்பெறவுள்ளது. 234 ஆசனங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவாக்குறிச்சித் தொகுதிக்கான தேர்தல் மாத்திரம், நாளை இடம்பெறாது.

(“நாளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்

தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

(“தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை அழைக்கும் விக்னேஸ்வரன்

ஐயா உங்கள் கைகளுக்கு எட்டிய தமிழ் மக்கள் பேரவையை நீங்கள் திறம்பட தலைமைதாங்கி செயற்படுத்தி இருந்தால் வடக்கில் இன்று ஏது ஐயா இராணுவம் .? மீண்டும் எதற்கு ஐயா ஒரு பிரபாகரன் .? தமிழ் காங்கிரஸின் தவறான அரசியலால் தந்தை செல்வா எவ்வாறு அங்கிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை நிறுவினாரோ அதே போன்று நீங்களும் கூட்டமைப்பின் மிகத் தவறான அரசியலால் அங்கிருந்து வெளியேறி மக்கள் பேரவை என்ற மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்புவீர்கள் என்றே பலரும் எதிர்பார்த்தனர். தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு இப்போது பிரபாகரனை அழைப்பதில் சரியான அரசியல் இருப்பதாக தோன்றவில்லை. எது எப்படியாயினும் உங்களுக்கு அரசியலை விட ஆன்மீகமே மிகவும் பொருத்தமானதும் சிறப்பானதுமாகும் என்பது எனது அண்மைய கணிப்பாகும்.

(Brin Nath)