அழுத்தத்துக்குள்ளாகியுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கடந்த வெள்ளிக்கிழமையன்று அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளால் அதற்கு, கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அதற்குக் காரணமென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் ஜனாதிபதியை, அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலேயே, இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
வெனிசுவேலாவுக்கு உள்ளேயிருந்தும் ஐக்கிய அமெரிக்காவாலும், தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்திருந்த அவர், 60 நாட்களுக்கு இதைப் பிரகடனப்படுத்தியிருந்தார்.
(“வெனிசுவேலா அவசரகாலநிலைப் பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)