குச்சவெளியில் கட்டப்பட்ட சைவகோவிலை நிறுத்த சொன்னதை பற்குணத்தால் ஏற்க முடியவில்லை.அதே நேரம் அரசாங்க நிலத்தில் கட்டியிருந்தார்கள்.இந்த தடை உத்தரவு பற்றிய தகவலை மட்டும் வெளியிட்டு சம்பந்தப்பட்டவரகளுடம் சொன்னார்.
இதை அடுத்து குச்சவெளி-கோமரங்கடவல காட்டுப்பாதையில் திரியாயை இணைக்கும் கள்ளம்பத்தை என்னும் இடத்தில் குடியேற்றம் ஒன்றை ஆரம்பிக்க அன்றைய ஹொரவ்வப்பொத்தான எம்.பி அரச அதிபர் மூலம் ஒப்புதல் கேட்டார்.இது திட்டமிட்டலால் இன குடியேற்றத்துக்கு வழிவகுக்கும் என உணர்ந்த பற்குணம் அன்றைய கோமரங்கடவல டி.ஆர. ஓ விடம் கதைத்து அங்கே விலை உயர்ந்த மரங்கள் இருப்பதால் அந்த காடுகளை அழிக்க முடியாது என அறிக்கை கொடுத்தார்.இதனால் இங்கே சிங்கள குடியேற்றம் தடுக்கப்பட்டது.
பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 26)
குச்சவெளியில் நாங்கள் இருந்த பங்களாவின் பின்னால் ஒரு அரசாங்க நெற் களஞ்சியம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.இந்த நெற் களஞ்சியத்தை அண்மித்த பகுதியில் கரடிமலை பக்கமாக ஒரு சைவ கோவிலை மீனவர்கள் கட்டியிருந்தார்கள்.அந்த கோவிலுக்கான சிலை மட்டும் வர தாமதமானதால்அது உடனடியாக இயங்கவில்லை .அந்த கோவில் அமைந்த இடம் அரசாங்கத்துக்கு உரியது.
(இந்த இடத்தில் உள்ள மலையில் இப்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளது.சிறுவனாக இருந்த காலத்தில் நாங்கள் இந்த மலைமேல் விளையாடினோம்)
பனாமா ஆவணங்களில் 53 பேர் இலங்கையர்
பனாமாவில் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில், வரி ஏய்ப்புச் செய்வதற்காக பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படும் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரிவினர்களில், இலங்கையைச் சேர்ந்த 53 பேரும் இருப்பதாக துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை அறிவித்துள்ளது.
யாழில் வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை
வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்துள்ளதுடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி, அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார்.
(“யாழில் வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை” தொடர்ந்து வாசிக்க…)
புலம்பெயர்ந்த புலிகளே ஜாக்கிரதை
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தக்குழுவினர் இரண்டு பிரிவாக விசாரணைகள தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச பொலிஸாருடன் இணைந்து குறித்த குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மறவன் புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி
புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி, ஈரோஸ், ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, ”இந்த அரசியல் கூட்டணிக்கு ஈபிடிபி, ஈரோஸ் உள்ளிட்ட 15 தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
(“சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)
காத்துக்கிடக்கும் மக்கள்! தேர்தல் கூட்டு வைக்கும் கட்சிகள்?
நீண்ட அன்நிய ஆட்சி முடிவுக்கு வந்த 1948 முதல் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு சமத்துவம். இலங்கையின் எந்த மூலையிலும் தான் விரும்பும் தொழில், வியாபாரம், வாழ்விட தேர்வே அவர்களின் விருப்பு. இந்த விருப்பு சிங்கள் மக்களிடமும் காணப்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்த வெதுப்பகங்கள் உட்பட பல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள். அதே போல அனுராதபுரம் முதல் தென்னிலங்கையில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, பலாங்கொடை வரை வாழைப் பழம், கோடா சுருட்டு உட்பட பலசரக்கு விற்கும் யாழ்ப்பாணத்தவர் வியாபார நிலையங்கள். தீவகத்தின் கால நிலை சூழலால் கொழும்பு நகரில் பல இடங்களில் உணவகம் நடத்தி யாழ்ப்பாண குத்தரிசி சோறு, நண்டு, றால், கணவாய், கோழிக் குழம்பு, ஆட்டுறச்சி பிரட்டல் என அசத்திய காலம் இன்று சிலர் அறிந்ததும் பலர் அறியாததும்.
(“காத்துக்கிடக்கும் மக்கள்! தேர்தல் கூட்டு வைக்கும் கட்சிகள்?” தொடர்ந்து வாசிக்க…)
எதிர்க்கட்சி தலைவரின் தந்தையை கொன்றவர் சிக்கினார்
தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சியில் போதைப்பொருள் வியாபாரிகள்
தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழித்து தமிழ் இனத்தை அழிப்பதற்கான முயற்சியாக வடக்கில் போதைப்பொருள் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்வதாக அமைந்துள்ளது. மாணவர்களிடம் மாற்றங்கள் தெரிந்தால் அதிபர்கள் உடனடியாக பெற்றோருக்கு அறிவிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மகாநாடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?
(விஸ்வா)
DTNF தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பு – அல்லது கட்சி உருவாகும் சாத்தியம் உள்ளதா? அவ்வாறு ஒரு அமைப்பு உருவானால் அதனால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியுமா? இவ்வாறான கேள்விகள் தமிழ் அரசியல் தளத்தில் நின்று சிந்திப்பவர்களுக்கு எழுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக குறைகூறும் கட்சிகள் எவையுமே அதற்கு மாற்றாக மேலெழுந்து மக்கள் செல்வாக்கைப் பெறும் நிலைமை இதுவரை காணப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உள்ள சக்திகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை- கூட்டணியை உருவாக்கினாலும் கூட அது மக்களின் செல்வாக்கை பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.
(“கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)