தமிழினியின் மரண நிகழ்வு…….!

தமிழினியின் மரண நிகழ்வு ஒப்பற்ற ஒரு நாடகமாக நடந்திருக்கிறது. ஏறக்குறைய டேவிட் ஐயாவின் மரணச் சடங்கும் அப்படித்தான் நடந்தது. மரணச்சடங்கிற்காகவே காத்தும் பார்த்தும் இருக்கிறது ஒரு கூட்டம். செத்தவீட்டு அரசியல். தமிழினி சரணடைந்ததைப்பற்றியும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதைப் பற்றியும் தூற்றியவர்கள் பலர். அவருடைய வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இடையில் கைவிட்டவர்கள் சில தமிழ்த்தேசியவாதிகள். பின்னர் அந்த வழக்கை ஒரு சிங்களப் பெண் சட்டவாளரே முன்வந்து எடுத்து நடத்தி தமிழினியின் விடுதலைக்கான வழிகளைக் காட்டினார்.

(“தமிழினியின் மரண நிகழ்வு…….!” தொடர்ந்து வாசிக்க…)

அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்

பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?
பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29). கடந்த செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய ஆடம்பர பட்டாளங்களுடன் பயணமாகியுள்ளார்.
37 மில்லியன் டொலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய 3 பெண்களை இயற்கைக்கு எதிராக கற்பழிக்க முயன்ற வழக்கில் செப்டம்பர் 25ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…

போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இளைஞர்களைப் பயன்படுத்தினர். கூட்டணித் தலைவர்கள் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என்றனர். அன்று இளைஞனாக இருந்த வே பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சவலாக நின்ற அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்தார்.

(“பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்

இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.

(“மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்” தொடர்ந்து வாசிக்க…)

பாடும்மீன்கள் – கனடா

வருடாந்த பொதுக் கூட்டம்

பாடும்மீன்களின் அங்கத்தவர்கள் நண்பர்கள் நலன்விரும்பிகள் அனுசரணையாளர்களுக்கு:

எமது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த பதின்னான்கு வருடங்களாக கனடாவில் வாழும் எமது பிரதேசமக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒன்றுகூடல் ஊடாக தாயகத்தில் பல நற்காரியங்களை முடிந்தவரை செய்து வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.

(“பாடும்மீன்கள் – கனடா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினிக்காய் அழுகிறார்கள்.

(சாகரன்,ரகு கதிரவேலு)

மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார். மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள். தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள்? செல்வியும்,ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா? பத்மநாபாவும் தோழர்களும் துரத்தி துரத்தி புலிகளால் கொல்லப்பட்டபோது விருந்துண்டு கொண்டாடியவர்கள் தமிழினி உயிருக்காய் அழுது வழிகிறார்கள்.

(“தமிழினிக்காய் அழுகிறார்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..

 

நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…

(“மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..” தொடர்ந்து வாசிக்க…)

கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லெஸ்லின் லெவிஸ் இரண்டாவது இடத்தையும், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாந்திக்குமார் காந்தரத்தினம் மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.

(“கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..” தொடர்ந்து வாசிக்க…)

மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.

(மாதவன் சஞ்சயன்)

1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.

(“மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.” தொடர்ந்து வாசிக்க…)

நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலையில், நாகர்கோவிலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

(“நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)