போய் வா போர் மகளே

(ப. தெய்வீகன்)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி.

(“போய் வா போர் மகளே” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கான தேர்தலா….? அரசியல்வாதிகளுக்கான தேர்தலா…?

(சாகரன்)

தேர்தல் நாள் இன்று கனடாவில். தற்போதெல்லாம் வெல்லுவதற்கான கோஷங்களை வைத்தே தேர்தலில் தம்மை பிரச்சாரப்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள்;. கொள்கையின் அடிப்படையில் அல்ல கோஷங்களின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கின்றனர். இந்தக் கோஷங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் என்ற அடிப்படையில் மட்டும் செயற்படுகின்றனர் அரசியல்வாதிகள். பின்பு செல்வாக்கு செலுத்தும் இந்தக் கோஷங்களை தமது கொள்கைகள் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுகின்றனர். இதில் மக்களுக்கான அங்கத்துவம் என்பதைவிட தமது சுகமான வாழ்விற்கான பாராளுமன்ற அங்கத்துவம் என்பதே முதன்மை பெறுகின்றது. இது இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் பொருந்துகின்றது. வெற்றிக்கான கோஷங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பெரு நிதி தேவைப்படுகின்றது. இது அடிப்படையில் நிதியுள்ளவர்களால் மட்டுமே தேர்தலில் நின்று வெற்றிபெறும் நிலமைகள் எற்படுத்தியிருக்கின்றது. சாதாரண சாமான்ய மக்களின் பிரச்சனைகளை அனுபவரீதியாக உணர்ந்தறியும் நிலையில் இந்த வசதிபடைத்த அரசியல்வாதிகள் இல்லாதபோது இவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. எனவேதான் எம்மைப் போன்ற மக்களுக்கு இந்தத் தேர்தலில் யார் வெற்றி… தோல்வி….. ஐ சந்தித்தாலும் நேரடித் தாக்கங்கள் தற்போதெல்லாம் ஏற்படுவதில்லை. இதனால் தற்போது இருக்கும் முதலாளித்துவ பாராளுமன்ற ‘ஜனநாயக’ முறையில் நாம் எமது வாக்குகளை உபயோகிக்க வேண்டும் என்ற வாதங்கள் அடிபட்டே போகின்றது. எனவே மக்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முறமை ஒன்று கண்டேயாகவேண்டும். இதற்கான பொறிமுறையை நாம் கண்டுபிடிக்க தவறினால் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் என்ற அடிப்படையில் தமது வாழ்வை மட்டும் உறுதிப்படுத்தும் அரசியல்வாதிக் கூட்டங்கள் பிழைத்துக்கொண்டு போக மறுபுறத்தில் தேர்தல் முறையில் நம்பிக்கையிழந்து தேர்தலில் பங்குபற்றாதவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டேபோகும்.

பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு

தனது இளமைக் காலம் முழுவதும் போராளியாகவே வாழ்க்கையை நகர்த்திய தமிழினி இன்று காலை புற்று நோயால் காலமனார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த வாரம் கொழும்பிலுள்ள மகரகம வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பெண்கள் அணியின் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினின் 1991 ஆம் ஆண்டில் தனது 19 வது வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். பெண்கள் இராணுவப் பயிற்சி, பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழினி பல இராணுவத் தாக்குதல்களை முன் நின்று நடத்தினார். யுத்தக் குற்றங்களின் நேரடிச் சாட்சிகளில் ஒருவரான தமிழினியின் மரணம் வரலாற்றின் ஒரு பிரதான கட்டத்தின் மரணமாகும்.

(“பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு” தொடர்ந்து வாசிக்க…)

என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று

காணாமற்போயிருந்ததாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் விநாயகத்தின் குடும்பம் எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வந்தவர் விநாயகம். புலிகள் பலமுற்றிருந்த காலத்தில் தலைமையின் பணிப்பில் கிளிநொச்சியில் இருந்து இயங்கிய இந்த விநாயகம், அப்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருந்தார். விடுதலைப்புலிகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நகர்வுகளுக்கான ஆளனிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பொறுப்புக்கள் இவருக்கு தலைமையினால் வழங்கப்பட்டிருந்தது.

(“என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

(“புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!

கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

(“தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!” தொடர்ந்து வாசிக்க…)

கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது

நாளைக்கு கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை கனடா எதிர்நோக்குகின்றது. என்.டி.பி கட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றது. சட்டங்கள் சி 24, சி 51ஐ முற்றாக நிராகரிக்கின்றது. இவர்களது வரவு செலவு திட்ட சமநிலை சாத்தியப்படுமா என்ற ஐயமே உள்ளது. என்.டி.பி கட்சி முதன்மை குடிகளின் நலனிற்கும் உரிமைக்கும் முக்கியத்துவமளிக்கின்றது. லிபரல் கட்சியும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் எனக் கூறுகின்றது. சி24ஐ முற்றாக நிராகரித்தாலும் சி51 ஐ திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியமை ஏமாற்றமளிக்கின்றது.

(“கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது” தொடர்ந்து வாசிக்க…)

நாம் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் அல்ல ஆனால் ….?

இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

(“நாம் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் அல்ல ஆனால் ….?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

(“வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?” தொடர்ந்து வாசிக்க…)

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

(“எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.” தொடர்ந்து வாசிக்க…)