புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய அமைப்பை இயக்குவதற்காக டொரோன்டோவுக்குச் சென்ற, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரை நாடு கடத்துமாறு, கனேடிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஷை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றுத் தொடர்ந்தது. உண்ணாவிரதமிருந்த நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கை ஜனாதிபதியின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

(“தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5

(மாதவன் சஞ்சயன்)

2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5” தொடர்ந்து வாசிக்க…)

மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி

பதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை தமிழ் மகா வித்தியாலய வளவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான பூஜைகள் இடம்பெறவுள்ளதுடன், மலர் அஞ்சலிகளும் இடம்பெறும். அத்துடன், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாக்கத்தை தேயிலைத் தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

(“மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ரஷ்யா தயாரிப்பு புக் ஏவுகணை தாக்கியே வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து பாதுகாப்பு சபை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்படி அனர்த்தம் குறித்து நேற்று வெளியான இறுதி அறிக்கையில், விமானத்தின் முன்பாக இடது புறத்தில் ஏவுகணை தாக்கியதன் விளைவாக அது உடைந்து விழ ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு மற்றும் மேற்குலகம் குற் றம்சாட்டுகிறது. எனினும் குறித்த ஏவுகணை உக்ரைன் அரச கட்டுப்பாட்டு பகுதில் இருந்தே ஏவப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடுகிறது.

(“மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்

கத்திக் குத்து சம்பவங்களில் 3 இஸ்ரேலியர் 3 பலஸ்தீனர் பலி. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு nஜரூசலம் பகுதிகளில் நேற்று செவ்வாயன்று இடம்பெற்ற குறைந் தது ஐந்து வௌ;வேறு தாக்குதல் சம்பவங்களில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்துள் ளனர். தாக்குதல்தாரிகள் என்ற சந்தேகத்தில் மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் ஜபல் அல் முகப் பிர் பகுதியில் இஸ்ரேல் பஸ் ஒன்றில் நடத்தப்பட்ட தாக் குதலில் இரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 15 பேர் காய மடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு அல்லது ஏழு இஸ்ரேலியர்கள் படுகாயத்திற்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரேல் அவசர சேவை பிரிவின் பேச்சாளர் மகேன் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

(“இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை

(சுகு-ஸ்ரீதரன்)

எவ்வாறானதோ இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகள் நிகழவேண்டியிருக்கின்றன. அவ்வாறு இல்லாது இலங்கையினுள் மாத்திரம் நிகழவேண்டும் என என கருதுவதெல்லாம் சற்று பாமரத்தனமான சிநதனைப்போக்காகும். நீண்டகால யுத்தம் சமூக ஜனநாயக செயற்பாடுகளுக்கான இடைவெளிகளைக் குறைத்து அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்பனவெல்லாம் சிதைவடைந்ததும்- அகங்காரமானதும் -ஊழல் நிறைந்ததும் -அதிகார துஸ்பிரயோகம் சமூகத்தின் மீது பலாத்கார பிரயோகம் இவற்றைக் கொண்ட அதிகார வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.

(“சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

கண்ணீர் அஞ்சலி

 

வவுனியா பூவரசங்குளதில் 18.03.1959 இன்று பிறந்தவரும் புழல் இலங்கை அகதிகள் முகாமில் 1990 முதல் வசித்து வந்தவருமான தோழர்அர்ஜீன் 11.10.15 அன்று உடல் நலக்கோளாறு காரணமாக புழல் அகதிகள் முகாமில் இயற்கை எய்தினார். வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களுக்கு பசியாற சமைத்துப் போட்டது மட்டுமல்லாமல் கட்சிப்பணிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்.நோய் வாய்ப்பட்ட காலங்களிலும் அவர் புழல் முகாமில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளுக்கு தவறாது சமூகம் தருபவர். கட்சியையும் தோழர்களையும் என்றும் மதித்து நடப்பவர். அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடுப்பத்தாருக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பத்மநாபா.-ஈ.பி.ஆர்.எல்.எப்

(“கண்ணீர் அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)

கீரிமலை கடற்படை முகாம் அகற்றப்பட்டது

கீரிமலை கேணிக்கு அண்மையிலுள்ள இரண்டு வீடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய கடற்படை முகாம், திங்கட்கிழமை (12) அகற்றப்பட்டு முகாம் அமைந்திருந்த வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. மேற்படி முகாம் முன்னர் 3 வீடுகளை உள்ளடக்கி அமையப் பெற்றிருந்து. ஒரு வீடு ஏற்கெனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மிகுதி 2 வீடுகளும் தொடர்ந்தும் கடற்படை முகாமாகவே இருந்தன. தற்போது கடற்கடை முகாம் முற்றாக அகற்றப்பட்டமையால், 2 வீடுகளும் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச செயலர் மேற்படி 2 வீடுகளையும் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார்.