அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )

 

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி… என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்… என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம்.

(“அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )” தொடர்ந்து வாசிக்க…)

LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியகாரணம் ” வெருகல் படுகொலை” !

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.

(“LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியகாரணம் ” வெருகல் படுகொலை” !” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அரசியல் அமைப்பு மாற்றம்

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு

கடந்த 13-03-2016ம் திகதி லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினால் Non Rresident Tamils of SriLanka (N R T S L) ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் அதன் முக்கியத்துவம் கருதி இங்கு வழங்கப்படுகிறது.

(“இலங்கை அரசியல் அமைப்பு மாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது.

(“ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்

தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள். அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மட்டும் அடையவில்லை. இன்னவென்று விளக்க முடியாத ஒரு பயம், அவலம், கையறு நிலை, வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மை அனைத்தும் அந்த இரண்டு நிமிட காட்சி சடுதியில் ஏற்படுத்திவிட்டது. அந்த உணர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி? உடன் கொமரலிங்கத்திற்கு புறப்பட்டோம்.

(“சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்” தொடர்ந்து வாசிக்க…)

கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு

பிரபல நடிகர் கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து கலாபவன் மணி இறந்த அன்று அவரின் பண்ணை வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ம் தேதி திடீர் என்று இறந்தார்.இது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(“கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினியின் புத்தகத்துக்கு…….?

லூசுப் பயலுகளே.
தமிழினியின் புத்தகத்துக்கு அகரமுதல்வனின் எதிர்வினைதான் அந்தக் கதை. இந்தக் கண்டறியாத கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுவும் தேவையில்லை. இந்த வகையறா எதிர்வினை எத்தகைய உளவியலில் இருந்து முன்வைக்கப் படுகின்றன என்பதுதான் கேள்வி.

(“தமிழினியின் புத்தகத்துக்கு…….?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 4)

வரணி மகாவித்தியாலயம் அவருக்கு ஓரளவு நிம்மதி கொடுத்தது.எமது பெரிய அண்ணன் பத்தாவது ஒருவாறாக சித்தியடைந்தார்.அம்மாவும் திரும்பி வந்துவிட்டார்.வீட்டு நிலைமைகள் ஓரளவு வழமைக்குத் திரும்பின. அம்மா இரண்டரை வருடம் காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருக்க வேண்டிய பிரதான காரணம் அங்கே கச நோய் பற்றிய விபரமான டாக்ட்ரை இல்லாமல் போனதே.பின்னாளில் லண்டனில் படித்து வந்த டாக்டர் ஒருவரே பல நோயாளிகளைப் பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பினார்.அதுவரை காலமும் அந்த நோயாளிகள் சீமந்து ஆலையின் புகையை சுவாசித்ததே மிச்சம்.ஆயினும் அம்மாவை பூரண குணப்படுத்தியது தியாகேசர் என்கிற நாட்டு வைத்தியர்தான்.

(“பற்குணம் (பதிவு 4)” தொடர்ந்து வாசிக்க…)

கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ….

 

12 பேரை மட்டுமே ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட படகு அது , அளவுக்கு அதிகமான பாரங்களுடன் 81 பேர் பயணம் செய்தாக வேண்டும். படகில் ஆட்களை ஏற்றும் பொறுப்பில் இருந்தவர் தலைவரிடம் வந்து அனுமதிகேட்டார் “இன்னுமொரு நண்பர் நம்மோடு பயணம் செய்ய விரும்புகிறார்”. தலைவர் அந்த புதிய நபரை பார்த்தார் ஏற்கனவே அவருக்கு அறிமுகமான மனிதர்தான். மெலிந்த தோற்றம், சற்று குட்டையான உருவம், ஆள் கணக்கிற்கு வரட்டும் என்று நினைத்திருப்பார் போல, அந்த தலைவர் ஒப்புக்கொண்டார்.

(“கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ….” தொடர்ந்து வாசிக்க…)

சிலோன் விஜயேந்திரன்

திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன்.
’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ நிங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருக்கும். அப்போதிருந்து நல்ல நண்பரானார்.

(“சிலோன் விஜயேந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)