மோடிக்கு ஜெயா மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் 34 படகுகளையும் உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் 5ஆவது தடவையாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தென் தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏழை அப்பாவி மீனவர்கள் 5ஆவது முறையாக தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(“மோடிக்கு ஜெயா மீண்டும் கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது

 

வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது.  இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(“அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3

(சஞ்சயன் மாதவன்)

வடக்கில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் எப்போதும் பகையாளி சண்டை நடக்கும். அதே நேரம் தனியார் பேரூந்து தமக்குள் சக்களத்தி சண்டை நடத்தும். எல்லாம் கலக்சன் பிரச்சனை. நெடுந்தூர பயணத்தில் இந்த நான் முந்தி நீ முந்தி ஓட்டப் போட்டி தினம் தினம் நடக்கும். காப்பற் வீதி போடப்பட்ட பின் பேரூந்துகள் ஓடுவதில்லை, பறக்கின்றன. நேர அட்டவணை சீர் செய்யப் படாததால் ஒரே நேரத்தில் புறப்படும் அரச, தனியார் பேரூந்துகள் போட்டி போட்டு அடுத்தவன் முந்தக் கூடாதென நடு வீதியில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவர். பஸ்ஸில் ஏற நாம் காலை முதல் படியில் வைத்தால் போதும், மதில் பாயும் காதலியை தாங்குவது போல் நடத்துனர் எம்மை இழுத்து அரவணைத்து உள்ளே தள்ளி விடுவார்.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!

 

1995ல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இப்போது இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் அவரிற்கான நாடுகடத்தல் உத்தரவு 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின் படி திரு.சுரேஸ் மாணிக்கவாசகம் தனக்கான இந்த உத்தரவு குறித்த தனது வாதப்பிரதிவாதங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லமுடியாது. எனவே அவரை கனடிய அரசு எந்த நேரமும் நாடுகடத்த முடியும்.
வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தனது தரப்பு வாதத்தை முன்வைக்க முடியாதபடியான இந்த உத்தரவு கனடிய அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார், உலகத்தமிழர் இயக்கத்தை வழிநடத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என நம்பப்படுகின்றன.
கனடிய ஆங்கிலப் பத்திரிகைத் தகவல்களின் படி, இந்த மாதம் 60 வயதையடையும் சுரேஸ் மாணிக்கவாசகம் மார்ச் 23, 1998ல் தான் வசிக்கும் பகுதியிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையில் 40 ஆயிரம் பணப் பிணை மற்றும் 150 ஆயிரம் டொலர்கள் சொத்துப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

(“சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!” தொடர்ந்து வாசிக்க…)

ஆச்சி மனோரம்மா எம்மை விட்டு பிரிந்தார்

பழம்பெரும் நடிகை மனோரமா(78) உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா இன்று இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.

விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கூட்டமைப்பு சாத்தியமா?

(விஸ்வா)
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவி வரும் முரண்பாடுகள் தற்போது வேறு ஒரு கட்டத்தை அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளிருந்தே மாற்றுக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. விடுதலைப்புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகள் காணப்படவில்லை. அவ்வாறு முரண்பாடுகள் இருந்திருந்தாலும் அவை வெளிக்காட்டப்படவில்லை. கூட்டமைப்பினரை விடுதலைப்புலிகள் அடிக்கடி கிளிநொச்சிக்கு அழைத்து அவர்களை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். நெறிப்படுத்தல் என்றால்.. விடுதலைப்புலிகளே தீர்மானங்களை எடுத்து, அதன் படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர்வுகளை மேற்கொள்ளக் கூடிய நெறிப்படுத்தல் அது என்பது எல்லோருக்கும் தெரியும்.

(“விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கூட்டமைப்பு சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

உங்கள் வீரமெல்லாம் தமிழனிடம் மட்டும்தான் !

புலிகள் மாற்று இயக்கங்களை தடைசெய்து கொலைவெறி கொண்டு, எண்பதுகளில் ஆயிரக்கணக்கான டெலோ உறுப்பினர்களும் அதன் தலைவர் ஸ்ரீ சபாரெட்ணமும் புலிகளால் கொன்றுவீசப்பட்ட கொடூரங்களின் பொறுப்பாளிகள் இன்று ஜனா மீது கொலை குற்றச்சாட்டு சொல்லுவது எவ்வகையில் பொருத்தம்? நேற்று வெள்ளியன்று மாலை 4 மணியளவில் (23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள) இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன், மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.

(“உங்கள் வீரமெல்லாம் தமிழனிடம் மட்டும்தான் !” தொடர்ந்து வாசிக்க…)

Tamil expatriates want Sri Lanka, TNA to talk

London, Oct 10 (IANS) Tamil expatriates here have urged the Sri Lankan government and the country’s main Tamil party to discuss ways of bringing about constitutional reforms without resorting to secret deals. “It was the overwhelming understanding that there is a need to urge both the government and the TNA to open their doors for engagement without relying on secret deals,” said a statement issued by the expatriates. The Tamil National Alliance (TNA) is the largest Tamil party in the newly elected 225-member Sri Lankan parliament. Participants at the meeting here also urged the Sri Lankan government and the TNA to reach out to the wider expatriate Tamil community.

 

The appeal to Colombo and the TNA followed a meeting facilitated by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL) to discuss the intended constitutional reforms. It was held at the Barnhill Community Centre in Hayes in Middlesex on October 9 and attended by a cross section of Tamil opinion makers in Britain. London is home to tens of thousands of Tamils of Sri Lankan origin. Most expatriates who met have traditionally kept their distance from the Tamil Tigers, who were vanquished by the Sri Lankan military in 2009.

The expatriates acknowledged the conducive political climate now in Sri Lanka to bring about the much needed broader devolution of powers and good governance practices in the island nation. “There was consensus on the role played by the TNA to forge a friendly relationship with the government that is not so far burdened by the acrimonious hate campaigns by the extremist fringe,” the statement said. The session discussed possible methodologies to adopt a new constitution and issues of political will to bring about constitutional changes.

Most participants agreed that one of the many proposals that have gone through wider consultation process in Sri Lanka in the past should be implemented without going through unpleasant and prolonged debates.

“Fears were expressed that there will be always a danger of extremists from both sides attempting to thwart the passage of such broader reform,” the statement said.

Sri Lanka’s long-drawn Tamil separatist campaign was one of the bloodiest and left tens of thousands dead since 1983. The victims were primarily Tamils but also included large numbers of Muslims and Sinhalese.

Moderate Tamils seek greater political powers and constitutional rights within a united Sri Lanka.

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2

(மாதவன் சஞ்சயன்)

மாணவர்களின் முன் முயற்சியில் உருவான பிரமாண்டமான புத்தர் சிலை அமைந்துள்ள குருணாகல் மாவட்டத்தில் இருந்து தான், ராணுவத்துக்கு அதிகமானோர் இணைந்தனர் என்ற செய்தி என் ஞாபகத்துக்கு வந்த போது, சற்று மனக் குழப்பம் ஏற்பட்டது. 2002ல் ஆரம்பித்து 2015ல் திறந்து வைத்த சிலையை தனி ஒரு மலையில் செதுக்கியது தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள். உக்கிரமான போர் நடந்த காலத்தில் 10க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்ற இனவாதம் விட்டது என்றால், யார் இனவாதிகள் என்ற சுய விமர்சன கேள்வியும் என்னுள் எழுந்தது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி முதல், ரூபவாகினி விக்னேஸ்வரனுடன் வந்த சிங்கள அதிகாரிகள் கொல்லப்பட்டது யாழ் மண்ணில் அல்லவா?
(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2” தொடர்ந்து வாசிக்க…)

கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேச அரசுகளின் தோற்றத்தின் போக்கிற் பல்வேறு தேசங்களை ஓர் அரசினுள் இணைத்ததனூடு, தேசங்களின் சிறைச்சாலைகளாக நாடுகள் உருமாறின. இவ்வுருமாற்றம் இயல்பானதல்ல. முதலாளித்துவ விருத்தியுடன் தோன்றிய தேச அரசு என்ற கருத்தாக்கம், தேசிய இனங்களாகவும் தேசங்களாகவும் அமைய வாய்ப்புள்ள சமூகங்களை ஒடுக்கித் தேச அரசுகள் என்ற வரையறைக்குள் கொணர்ந்தன. முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடி, இத் தேசிய இனங்களினதும் தேசங்களினதும் விடுதலைக் கோரிக்கைகளுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளன.

(“கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு” தொடர்ந்து வாசிக்க…)