சர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று குற்றஞ்சாட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் மிரட்டி, தாக்கி, கைது செய்து கொண்டு போய் சிறையிலே அடைப்பதும், மீன்பிடிச் சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்துவதும், உடனடியாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எப்போதும் போல் கடிதம் எழுதுகிறாரோ இல்லையோ, பத்திரிகைகளில் அதைப் பெரிதாகச் செய்தி வெளியிடச் செய்துகொள்வதும் அதன் வாயிலாக மீனவர் பிரச்னை தீர்ந்து விட்டதாக வெறும் கற்பனை செய்துகொள்வதும் தான் வழக்கமாக நடைபெறுகிறதே தவிர் தமிழக முதலமைச்சரின் கடிதங்களை பற்றி இந்திய அரசும், இலங்கை அரசும் சிறிதேனும் கண்டுகொள்வதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.
(“இலங்கை ஏமாற்றுகின்றது – கருணாநிதி” தொடர்ந்து வாசிக்க…)